Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருகன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முருகன் வேலூர் சிறையில்  உள்ளார். இவர் செல்போன் ‘வாட்ஸ் அப்’பில் தனது உறவினர்களுடன் பேச அனுமதி அளிக்க வேண்டும் என கடந்த மாதம் 23-ந் திகதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

நேற்று முன்தினம் அவரது உடல் மிகவும் சோர்வடைந்திருந்ததால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அவருக்கு உணவு வழங்க வேண்டும் என வதை்தியர்கள் சிறை  அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
 
இதையடுத்து சிறையில் அதிகாரிகள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி கஞ்சி மட்டுமாவது குடிக்க வேண்டும் என கூறினர். அவர் மறுத்ததால் வலுக்கட்டாயமாக கஞ்சி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. நேற்றும் முருகன் 23-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் திடீரென முருகன் மிகவும் சோர்வடைந்தார். இதனால் அவரை பலத்த காவல் துறை  காவலுடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள்  அவருக்கு ஈ.சி.ஜி., ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்ற பரிசோதனை செய்தனர். சுமார் 1½ மணி நேர பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் அவர் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் உடல் சோர்வாக இருந்ததால் மீண்டும் முருகன் இரவு 11 மணி அளவில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட முருகன் உடல் மெலிந்து மிகவும் சோர்வடைந்த நிலையில் மெதுவாக நடந்து சென்றார். அவர் எப்போதும் காவி உடையில் சாமியார் போல் காணப்படுவார். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது அவர் கைதிகளுக்கான வெள்ளை நிற உடையை அணிந்திருந்தார்.

முருகனின் காவி உடையை வேண்டும் என்றே சிறையில்  அதிகாரிகள் பறித்து விட்டதாக அவரது வழக்கறிஞர்  புகழேந்தி குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

https://www.thaarakam.com/news/dbfff48a-06c1-4c3d-892a-db76db6bd74e

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் வேலூர் மருத்துவமனையில் அனுமதி

 
e5d92b6dcc5e770a7993156c07cf01677de3ba85
 123 Views

தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த முருகனின் உடல் சோர்வடைந்தமையால் அவர் வேலூர் அடுக்கம்பறை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 29 வருடங்களைக் கடந்தும் ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் இருந்து வரும் முருகனுக்கு,  அங்கு வழங்கப்பட்ட சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் இரத்துச் செய்திருந்தது.

இதனால் மனமுடைந்த முருகன், கடந்த மாதம் 23ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றார். சிறையில் அவருக்கு வழங்கப்படும்உணவுகளைத் தவிர்த்து வரும் முருகன், பழங்கள் தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்கின்றார். இதனால் போதிய ஊட்டச்சத்து இல்லாததாலும், தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதாலும் முருகனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

சிறைத்துறை மருத்துவர்கள் பரிசோதித்து, அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக முருகனுக்கு சிறையில் 4 குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அதே நேரம் முருகனின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டுவர சிறைத்துறையினர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதேவேளை நேற்று(15)இரவு அவரின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, சிறைத்துறை மருத்துவர்கள் மற்றும் வேலூர் மருத்துவப்பணியிகள் இணை இயக்குநர் யஸ்மின் ஆகியோர் முருகனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். இவர்களின் ஆலோசனையை அடுத்து முருகன் வேலூர் அடுக்கம்பாறை அரச மரத்தவமனைக்கு நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் குளுக்கோஸ் மட்டும் போதாது கட்டாயமாக உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர். அரசு மருத்துவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்காததால் முருகன் மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.

இந்நிலையில், சிறைக்குத் திரும்பிய சிலமணி நேரங்களில் முருகனின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இதனால் இன்று(16) அதிகாலை முருகன் மீண்டும் வேலூர் அடுக்கம்பாறை அரச மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முருகனின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

அத்துடன் முருகன் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டுவர சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். வேலூர் அடுக்கம்பாறை அரச மருத்துவமனையில் முருகன் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

https://www.ilakku.org/?p=37414

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.