Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவுக்கு எதிராக புதிய தீர்மானம் – அமெரிக்கா முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவுக்கு எதிராக புதிய தீர்மானம் – அமெரிக்கா முயற்சி

 
usa-america-sri-lanka.jpg
 8 Views

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு அமெரிக்கா முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னர் முன்வைக்கப்பட்ட 30/1 தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு விலகுவதாக அறிவித்த பின்னர், புதிய தீர்மானம் தொடர்பில் அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து செயற்பட்டிருந்தன. முன்னைய தீர்மானத்தை 2015 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த சிறீலங்கா அரசு ஏற்றுக்கொண்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து 34/1 மற்றும் 40/1 என்ற இரு தீர்மானங்கள் முன்னைய தீர்மானத்தை வலுப்படுத்துமுகமாக கொண்டுவரப்பட்டிருந்தன. போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கான நீதி கோரல் மற்றும் நல்லிணக்கபாடுகள் தொடர்பாகவே தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்த தீர்மானம் தொடர்பில் சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா தெப்லிஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனை இந்த வாரம் திடீரென சந்தித்து பேசியுள்ளார்.

இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தருவதாக சுமந்திரன் தெரிவித்துள்ள போதும், இந்தத் தீர்மானத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோரிடமும் தெரிவித்துள்ளார்.

ஆனால் முன்னைய தீர்மானங்களை சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்த தவறியுள்ளதால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களுக்கான நீதிகோரி சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டவர்கள் அவர்கள்.

 

https://www.ilakku.org/?p=37620

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றினை கொண்டுவரும் அமெரிக்கா!!

      by : Jeyachandran Vithushan

UNHRC.jpg

அடுத்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றினை கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவும் பிரித்தானியாவுடனும் இணைந்து இதற்கான ஆரம்பக்கட்ட களப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய ஐ.நா. தீர்மானம் 30/1 இலிருந்து விலகியதாக இலங்கை அரசு அறிவித்தது.

இதனை அடுத்து இலங்கைக்கு எதிராக ஒரு புதிய தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றினை கொண்டுவரும் அமெரிக்கா!! | Athavan News

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ஆண்குதிரகள் மூலம் நாங்கள் உலகுக்கு சொல்லிவிட்டோம் எம்முடன் சேர்ந்து விளையாடினால்  வெற்றி நிச்சயம் என்றும் 

முன்னாள் போராளிகள் (???) மூலம் உலகுக்குக்கு சொல்லிவிட்டோம் எம்முடன் சேர்ந்து அரசியல் நடத்தினாலும் வெற்றி நிச்சயம் என்று....

இனி ஐ.நா..சபை என்ன கடவுளே வந்தாலும் ஒரு ம.... புடுங்க ஏலாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.