Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் பிரச்சினை ஜெனீவாவில் எதிரொலிக்க ராஜபக்‌ஷ அரசே காரணம் – சந்திரிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பிரச்சினை ஜெனீவாவில் எதிரொலிக்க ராஜபக்‌ஷ அரசே காரணம் – சந்திரிகா

 
Chandrika.kumaratunga-696x350.jpg
 33 Views

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிரொலிக்க ராஜபக்ஷ அரசுதான் முழுப் பொறுப்பு. அதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா அமர்வில் இலங்கை முஸ்லிம் மக்களின் விவகாரமும் அங்கு எதிரொலிக்கும் நிலைமையையும் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. இது இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்யும்.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டினார். எதிர்வரும் ஜெனிவா அமர்வில் இலங்கை எதிர் நோக்கவுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் 2009ஆம் ஆண்டு போரை நிறைவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் பல வாக்குறுதிகளை ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வழங்கியிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகளை மஹிந்த அரசு நிறைவேற்றாத காரணத்தாலேயே இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அதன் உறுப்பு நாடுகள் தீர்மானங்களை அடுத்தடுத்து நிறைவேற்றின. எனினும், அந்தத் தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டன.

தற்போதைய கோட்டாபய ராஜபக்r தலைமையிலான அரசும் அந்தத் தீர்மானங்கள் தொடர்பில் முன்மாதிரியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. போதாக்குறைக்கு கடந்த நல்லாட்சி அரசில் மீளவும் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இந்த அரசு விலகி நாட்டுக்கான சர்வதேச நெருக்குவாரங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களையும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அரசு எரித்து வருகின்றது. இது முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கையை உதாசீனம் செய்யும் அடிப்படை உரிமை மீறலாகும். இந்த விவகாரமும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வில் எதிரொலிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமை கள் மீது கைவைத்து அவர்களைச் சீண்டுவதால் எந்தவிதமான நன்மைகளையும் ராஜபக்ஷ அரசு பெறப்போவதில்லை. மாறாக நாட்டுக்கு சர்வதேச அரங்கில் அவப்பெயரைத்தான் இந்த அரசு சம்பாதிக்கின்றது. இது இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்யும்” என்றார்

 

https://www.ilakku.org/?p=37742

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2020 at 15:26, உடையார் said:

நாட்டுக்கு சர்வதேச அரங்கில் அவப்பெயரைத்தான் இந்த அரசு சம்பாதிக்கின்றது. இது இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்யும்” என்றார்

இதுதான் இவரது கவலை, அதில் தனது பங்கும் உண்டு என்பதை மறக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகா, மங்கள போன்றோரின் எண்ணம் இதுவே.


வெளிப்படையாக தம்மை moderates ஆக காட்டி கொண்டு,சிங்கள அரசை மறு  சீரமைப்பு செய்து இந்த பிரச்சனையை தீர்க்கலாம் எனும் போர்வையையும்  நம்பிக்கையையும் ஏற்றப்படுத்தி, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு (2009 க்குப்பிறகு) நேரத்தையும், பொருளாதரத்தையும் வளர்ப்பது.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.