Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயில் பாரிய நிலச்சரிவு: 10பேர் காயம்- 21பேர் மாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் பாரிய நிலச்சரிவு: 10பேர் காயம்- 21பேர் மாயம்! | Athavan News

நோர்வேயில் பாரிய நிலச்சரிவு: 10பேர் காயம்- 21பேர் மாயம்!

தென்கிழக்கு நோர்வேயில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியின் நிர்வாக மையமான அஸ்க் நகரில் ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதில், 10பேர் காயமடைந்ததோடு 21பேர் காணமல் போயுள்ளனர்.

மேலும், நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் சுமார் 700 பேர் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தலைநகர் ஒஸ்லோவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியில் ஒரு குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

அஸ்க் கிராமம் வழியாக ஒரு வீதியின் குறுக்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு கார்கள் கடந்து செல்ல முடியாத ஆழமான பள்ளத்தாக்கை விட்டுச் சென்றது.

காணொளி காட்சிகள் ஒரு வீடு பள்ளத்தாக்கில் விழுவது உள்ளிட்ட வியத்தகு காட்சிகளைக் காட்டியது. புகைப்படங்கள் குறைந்தது எட்டு வீடுகள் அழிக்கப்பட்டதைக் காட்டியது.

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ரோஜர் பெட்டர்சன் இதுகுறித்து கூறுகையில், “காணாமல் போனவர்கள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை, ஆனால் இடிந்து விழுந்த கட்டிடங்களில் மக்கள் இருப்பதற்கான சாத்தியத்தை அதிகாரிகளால் நிராகரிக்க முடியவில்லை.

இப்பகுதியில் வசிக்க பதிவுசெய்யப்பட்ட 21 பேர் கணக்கிடப்படவில்லை.
21 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றியிருக்கலாம் அல்லது இன்னும் நிலச்சரிவு பகுதியில் இருக்கலாம்” என கூறினார்.

இதனிடையே அங்கு தற்போது தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/நோர்வேயில்-பாரிய-நிலச்சர/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே நிலச்சரிவு: இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!  | Athavan News

நோர்வே நிலச்சரிவு: இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

தெற்கு நோர்வேயில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது ஒன்பது கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஒருவரின் சடலத்தை மீட்பு படையினர் கண்டெடுத்துள்ளனர்.

அந்த இடத்திலுள்ள பொலிஸ் நடவடிக்கையின் தலைவர் ராய் அல்க்விஸ்ட் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், ‘ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமாக இந்த நபர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என கூறினார். எனினும், அந்த நபர் குறித்து எந்த விபரங்களையும் கொடுக்க மறுத்துவிட்டார்.

தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்டை நாடான சுவீடனில் இருந்து ஒரு தேடல் மற்றும் மீட்புக் குழு உதவியது.

தென்கிழக்கு நோர்வேயில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியின் நிர்வாக மையமான அஸ்க் நகரில் ஒரு புதன்கிழமை பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதில், 10பேர் காயமடைந்ததோடு 21பேர் காணமல் போயினர்.

மேலும், நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் சுமார் 700 பேர் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தலைநகர் ஒஸ்லோவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியில் ஒரு குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

http://athavannews.com/நோர்வே-நிலச்சரிவு-இரண்ட/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள நோர்வே வாழ் உறவுகள் நலமா..?

நலமா என்று கேட்பதில் தப்பில்லைத் தானே...

6 hours ago, யாயினி said:

யாழ் கள நோர்வே வாழ் உறவுகள் நலமா..?

நலமா என்று கேட்பதில் தப்பில்லைத் தானே...

நிலச்சரிவில் 10 பேர் காணாமல் போயிருந்தார்கள். அதில் தமிழ் பெயர்கள் எதுவும் இல்லை. 
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியினைச் சுற்றியிருந்த பல குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பபட்டுள்ளார்கள். அறிந்த வரையில் குறைந்தபட்சம் இரண்டு தமிழ்க் குடும்பங்கள் அவ்வாறு வெளியேறியுள்ளார்கள்.

காணாது போனவர்களில் மூவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே நிலச்சரிவு: இதுவரை ஏழு பேரின் சடலங்கள் கண்டெடுப்பு! | Athavan News

நோர்வே நிலச்சரிவு: இதுவரை ஏழு பேரின் சடலங்கள் கண்டெடுப்பு!

தெற்கு நோர்வேயில் கடந்த வாரம் வீடுகளை அழித்த பாரிய நிலச்சரிவுக்குப் பின்னர் காணாமல் போனவர்களுக்கான தேடலில், ஏழு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நான்கு சடலங்களும், ஞாயிற்றுக்கிழமை மற்றொரு சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட முதல் நபர் 31வயதான எரிக் கிரானோல் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இருவர் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகே சமீபத்திய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் மேலதிக விபரங்களை தெரிவிக்கவில்லை.

உயிரிழந்தவர்களில் 5பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 40 வயது நபர் மற்றும் அவரது இரண்டு வயது மகள் உள்ளனர். மேலும் 10பேர் காயமடைந்தனர்.

நிலச்சரிவு நடந்த இடத்தை நோர்வே மன்னரும் ராணியும் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர்.

தென்கிழக்கு நோர்வேயில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியின் நிர்வாக மையமான அஸ்க் நகரில் கடந்த புதன்கிழமை பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதில், 10பேர் காயமடைந்ததோடு 21பேர் காணமல் போயினர்.

மேலும், நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் சுமார் 700பேர் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தலைநகர் ஒஸ்லோவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியில் ஒரு குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

http://athavannews.com/நோர்வே-நிலச்சரிவு-இதுவர/

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையும் அப்பப்ப தான் இருக்கின்றேன் என்று காட்டுது...... எமது உறவுகளும் மற்றும் எல்லோரும் நலமுடன் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.......!   🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.