Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு காந்திபூங்கா முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

spacer.png

தமிழ் அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

விடுதலை செய், விடுதலை செய், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், தமிழ் அரசியல் கைதிகள் மீது பாரபட்சம் காட்டாதே, கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும். என பல்வேறு கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது எழுப்பினர்.

spacer.png

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், மற்றும் இந்து, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

spacer.png

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் தலைவர் கதிர்.பாராதிதாஸன், கிழக்குமாகாண சூழலியல் நீPதிக்கான அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ரஜனி ஜெயப்பிரகாஸ், சிவில் அமைப்பின் உறுப்பினர். எஸ்.சீலன், சர்வ மத அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் ஒன்றிணைந்து. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

 

 

https://www.virakesari.lk/article/97902

 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி வவுனியா மற்றும் மட்டக்களப்பில் போராட்டம்

DSC00121-696x392.jpg
 31 Views
அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்ப்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதே நேரம் மட்டக்களப்பிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
DSC00162.jpg
 
வவுனியா காமினி மகாவித்தியாலத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
  DSC00141.jpg
 
நீண்டகாலமாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். தற்பொது  கோவிட்19 தாக்கத்திற்கு மத்தியில் அவர்கள் மிகுந்த பாதிப்புக்களை எதிர் நோக்கியிருக்கின்றனர்
DSC00152.jpg
 
எனவே அவர்களது பிள்ளைகள் குடும்பத்தினரின் நலனையும் அவர்களது நலனையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
DSC00131.jpg
 
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது உறவுகளை சிறைகளில் மடியவிட வேண்டாம், தமிழ் அரசியல் கைதிகள் பயங்கவாதிகள் இல்லை, கைதிகளிற்கு பொது மன்னிப்பு வழங்கு போன்ற பாதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
 
இந்நிலையில்,தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார வழிமுறையினை பின்பற்றியவாறு இந்த போராட்டம் இன்று காலை காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கு மாகாண பொது மக்கள், சிவில் அமைப்புகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
 
IMG_6818.jpg
இலங்கை அரசே அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க என்னும் தொனிப்பொருளிளல் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
IMG_6773.jpg
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்து நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்து,தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள் போன்று சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
IMG_6829.jpg
இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்குமாறு வலியுறுத்தப்பட்டது
 
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி போராட்டம்

 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதார வழிமுறையினை பின்பற்றியவாறு இந்த போராட்டம் இன்று காலை காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

வடகிழக்கு மாகாண பொது மக்கள், சிவில் அமைப்புகள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.

இலங்கை அரசே அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க என்னும் தொனிப்பொருளிளல் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்து நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்து,தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள் போன்று சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தினையும் நீக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இந்த நாட்டில் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமா, இந்த நாட்டின் சட்டங்கள் ஒரு இனத்திற்கு மட்டுமா, அரசியல் கைதிகளின் விடுதலையில் பாரபட்சம் காட்டுவது ஏன் என்ற பல்வேறு கேள்விகள் அரசாங்கத்திடம் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
 

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி போராட்டம் (adaderana.lk)

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு’ – வடக்கில் போராட்டம்

 
1-29-696x322.jpg
 25 Views

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில்,  நல்லூர் நல்லை ஆதினத்தின் முன்பாக  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

0?ui=2&ik=008a654ed4&attid=0.1.1&permmsgid=msg-f:1688033126664978206&th=176d192f63f53f1e&view=fimg&sz=s0-l75-ft&attbid=ANGjdJ-7PdCP-oHVMLSuiuHnYr44ahzYm5hdU19FY4tqfSmkCLW0PYLXv7mmeAH3LYs59uEgwbAQct8BVhEA0WD5bD6nSs0otS9jRqE80An7qVDcNjD1__6mFRMVNF4&disp=emb

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “இலங்கை அரசே தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க,  தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு, தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாதிகள் இல்லை, எமது உறவுகளை சிறையில் மடியவிட வேண்டாம்”. போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

0?ui=2&ik=008a654ed4&attid=0.1.3&permmsgid=msg-f:1688033126664978206&th=176d192f63f53f1e&view=fimg&sz=s0-l75-ft&attbid=ANGjdJ_SRn5VY08spFnnUi7Rmd03m_uaHO0K6j2yuLD2bF90DJ9ZLpah2ZWP9SQNNwpv5dz9rb_t6OKba79RizixO9LfkAu_8HU1ThWDfFBEcYIwKVBoO4lJzMrIYlk&disp=emb

குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/protest-mullai.jpg

அதே போல் கிளிநொச்சி மற்றும் மன்னாரிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

https://www.ilakku.org/?p=38585

  • கருத்துக்கள உறவுகள்

அரசே விடுதலை செய்!! – அரசியல் கைதிகளுக்காய் கிளிநொச்சியிலும் போராட்டம்

FB_IMG_1609829935456.jpg?fit=720%2C540&ssl=1

 

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி – பழைய கச்சேரிக்கு முன்பாக இன்று (5) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

 

FB_IMG_1609829961693-300x225.jpg
Share
 
FB_IMG_1609829922486-300x225.jpg
Share
 
FB_IMG_1609829917749-300x225.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை திருக்கோவிலில் நடத்த இருந்த பேரணி பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.