Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பொறிமுறையொன்றை முன்மொழியும்படி தமிழர் அமைப்புகள் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பொறிமுறையொன்றை முன்மொழியும்படி தமிழர் அமைப்புகள் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை


எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 வது அமர்வின் போது, தமிழ் மக்கள் மீது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட, இனப்படுகொலை உள்ளிட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க “சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பொறிமுறையொன்றை” முன்மொழியுமாறு பிரித்தானியாவிலுள்ள 250க்கும் மேற்பட்ட தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து அந் நாட்டின் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

“போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஏறத்தாழ 12 வருடங்கள் ஆகியும், அங்கு போர்க்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை எனக்கூறி அவற்றுக்கான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதை இலங்கை அரசாங்கங்கள் தொடர்சியாகத் தடுத்து வருகின்றன” என இக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம் முன்மொழிவுக் கோரிக்கைக்கான கடிதத்தில் கையெழுத்திட்ட அமைப்புகளில் சில:

தமிழ் இளையோர் அமைப்பு (TYO), தமிழ்த் தகவல் நடுவம் (TIC), பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் (BTCC), இனப்படுகொலைக்கெதிரான தமிழர் (TAG), இனப்படுகொலைத் தடுப்பிற்கும், வழக்குப்பதிவுக்குமான சர்வதேச நடுவம் (ICPPG), ஈழத்தமிழர் உரிமைகளுக்கான சர்வதேச நடுவம் (ICETR), தமிழ்த் தோழமை (TS), பிரித்தானிய தமிழக் கன்சர்வேட்டிவ் (BTC), தொழிற்கட்சிக்கான தமிழர் (TFL), லிபரல் டெமோக்கிறட்டுகளின் தமிழ் நண்பர்கள் (TFLD), த.தே.கூ. – பிரித்தானியா (TNA-UK), தமிழீழ விடுதலை இயக்கம் – பிரித்தானியா (TELO-UK), நாம் தமிழர்- பிரித்தானியா (NTK-UK), வீரத் தமிழர் முன்னணி – பிரித்தானியா (VTF-UK), என்.எல்.பி. க்கான தமிழர் (TFNLP), தேசங்களற்ற நாடுகள் (NWS), ஏதிலி உரிமைகள் இயக்கம் (RTC) மற்றும் பல பல்கலைக்கழக மாணவ ஒன்றியங்கள்.



இலங்கையால் கூட்டாக முன்மொழியப்பட்டு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்திலிருந்து இலங்கை தன்னிச்சையாக வெளியேறியது தொடர்பாக, பிரித்தானிய வெளிவிவகாரம் மற்றும் பொதுநலவாய அலுவலகத்திறாகான ராஜாங்க அமைச்சர், திரு நைஜெல் அடம்ஸ், கடந்த அக்டோபர் மாதம், தனது கரிசனையை மீளவும் வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையின் அரசியலமைப்பின் 20 வது திருத்தம் நிறவேற்றப்பட்ட கையோடு, அதன் அதிகாரத்தைப் பாவித்து ஜனாதிபதி ராஜபக்ச இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் சிங்களவர்களாக இருக்கிறார்கள் எனவும் இதனால் அது சுயாதீனமான ஒன்றல்லவெனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் ஒத்துக் கொண்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

பிரித்தானிய தமிழர் அமைப்புகளினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் முழு ஆங்கில வடிவத்தை இங்கு வாசிக்கலாம். (Tamil Guardian)

 

 

https://marumoli.com/சர்வதேச-சுயாதீன-விசாரணைக/

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.ராம்)

நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பாக, சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையை உருவாக்குவதற்கான தீர்மானம் ஒன்றினை கொண்டுவருமாறு பிரித்தானிய அரசிடம் இருநூற்றுக்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் ஒருமித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட இராஜதந்திரிகள் மற்றும் புத்திஜீவிகளின் ஆலோசனைப்படி, பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், கல்விமான்கள், மத தலைவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலருடன் பல கட்டங்களாக நடைபெற்ற தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் முடிவில் அனைவரின் ஏகோபித்த சம்மத்துடனும் ஆதரவுடனும் இந்த நகர்வு கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இதனை தமிழர் ஒருங்கிணைப்பு பேரவை, உலக தமிழர் வரலாற்று மையம்ரூபவ் தமிழ் தகவல் மையம், தமிழ் இளையோர் அமைப்பு, பிரித்தானிய தமிழ் வர்த்த சம்மேளனம்,தமிழ் சொலிடாரிட்டி,பிரித்தானிய தமிழர் ஒன்றியம்ரூபவ் டுகேதர் எகன்ஸ்ட் ஜெனோசைட், பழமைவாத கட்சிக்கான பிரித்தானிய தமிழர்கள், தொழில்கட்சிக்கான தமிழர்கள், மிதவாத கட்சிக்கான தமிழர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரித்தானிய கிளை, இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டிப்புக்கான சர்வதேச மையம், அனைத்துலக ரூடவ்ழத்தமிழர் உரிமை மையம்ரூபவ் தமிழர் கலை பண்பாட்டு நடுவம்,தமிழீழ மாவீரர் பணிமனை ஐக்கிய இராச்சியம், மக்கள் நலன் காப்பகம்,உலக தமிழர் வரலாற்றுமைய மகளிர் அமைப்புரூபவ் அகதிகள் உரிமைகள், வீரத்தமிழர் முன்னணி பிரித்தானியா, நாம் தமிழர் பிரித்தானியா, தேசிய விடுதலைக்கட்சிக்கான தமிழர்கள், நேசன்ஸ் வித்தவுட் ஸ்ரேட்ஸ் உட்பட்ட பிரதான அரசியல் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் ஒருமித்து ஒற்றுமையுடன் முன்னெடுத்திருத்தன.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/142697/thumbs_b_c_3ea276fcdd49b50cb22d70fe1d2a47fd.jpg

இந்த முயற்சிக்கு இதுவரை சர்வதேச அமைப்புக்காளன,  Migrants Organise மற்றும் Room To Heal உள்ளிட்ட 250 அமைப்புக்கள் தங்கள் முழுமையான ஆதரவை வழங்கி, கையொப்பமிட்டு பிரித்தானியவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் அலுவலகம் உட்பட பிரித்தானிய பிரமர் பொரிஸ் ஜோன்சனிடத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கை ஆவணத்தில் “மியான்மருக்காக நிறுவப்பட்டதைப் போன்ற ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்க 46 வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு தீர்மானம் எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன் கடுமையான சர்வதேச குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி விசாரணைகள் நடத்தப்பட்டு, ஆதாரங்களை சேகரிக்கப்பட்டு குற்றவியல் வழக்குக்கான கோப்புகளை தயாரிக்கக் கோருகிறோம்.

அத்தோடு இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களையும் விசாரணை செய்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை பற்றி செப்டம்பர் 2015 அறிக்கையில் உள்ள தகவல்கள் மற்றும் ஆதாரங்களைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கோரிக்கையை வலுப்படுத்தி ஆயிரணக்கனக்கான கையொப்பங்களுடன் இராண்டாவது ஆவணத்தினை சமர்ப்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குறித்து 200 க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் பிரித்தானிய அரசிடம் விடுத்துள்ள ஒருமித்த கோரிக்கை | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.