Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தபாய மீது பயணத்தடை கொண்டுவர அனைத்துலக சமூகம் முடிவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய மீது பயணத்தடை கொண்டுவர அனைத்துலக சமூகம் முடிவு?

[சனிக்கிழமை, 16 யூன் 2007, 22:38 ஈழம்] [பி.கெளரி]

இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பல அரச அதிகாரிகள் மீது அனைத்துலக சமூகம் பயணத் தடையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது, நாட்டில் அதிகரித்துள்ள கடத்தல்கள் போன்றவற்றை மனித உரிமை மீறல்கள் என பல மேற்குலக நாடுகள் கூறி வருவதனால் அந்த நாட்டு அனைத்துலக வானூர்தி நிலையங்களில் கோத்தபாய ராஜபக்சவுக்கான அனுமதி மறுக்கப்படலாம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோத்தபாய ராஜபக்சவுக்கு நுழைவு அனுமதி தேவைப்படும் போது அதனை வழங்குவதற்கு தமது நாடுகள் விரும்பப் போவதில்லை என கொழும்பில் உள்ள பல மேற்குலக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவின் குடியுரிமையை வைத்திருப்பதால் அவருக்கு உலகின் சில பகுதிகளுக்கு செல்வதற்கு நுழைவு அனுமதி தேவையற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் தமது அனைத்துலக வானூர்தி நிலையங்களில் கோத்தபாய ராஜபக்சவை அனுமதிப்பதில்லை என்ற மேற்குலக நாடுகளின் தெரிவுகள் இன்றுவரை நிலுவையில் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போது மேற்குலக நாடுகளை சாடியும், கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியதையும், மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்தியும் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட கருத்துக்களே மேற்குலக நாடுகளின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாகும்.

யார் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டாலும் சிறிலங்காவில் உள்ள தூதரகங்கள் அதனை வரவேற்கப் போவதில்லை. சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளின் விபரங்களை சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் சேகரித்து வருகின்றன. இதில் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்னவினால் தெரிவிக்கப்பட்ட அதிகாரிகளின் விபரங்களும் அடக்கம்.

இலங்கையில் இடம்பெற்று வரும் கடத்தல்களில் தொடர்புபட்டவர்கள் எனக்கருதப்படுவோரின் தகவல்களை லக்ஸ்மன் செனிவிரட்ன அண்மையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே தமிழ் மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியது மற்றும் கடத்தல்கள் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள பல பொது அமைப்புக்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு வந்த பின்னர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த அமைப்புக்கள் காத்திருப்பதாகவும் அதற்குரிய சட்ட ஆலோசனைகளை தற்போது அவர்கள் பெற்று வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி - புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம்.. ஏதாவது செய்து அந்த ***அமெரிக்காவில் சிறையிலை அடைக்கமுடியாதா?

*** சொல் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

சமதரப்பு என்பதை ஏற்கமறுத்த உலகம் தனது நிலையை ஒருவாறு மாற்றமடையும் நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. பயணத்தடை விதிக்கப்படுமா? என்பது கேள்விக்குரியது. ஆனாலும் அவ்வாறான முடிவுக்குச் செல்வது பற்றிய கருத்து நன்மையான விடயந்தான். ஆயினும் சர்வதேசமும் இவ்வகைச் சார்புநிலை எடுப்பதுபோல் நடித்துத் தமிழரை ஏமாற்றும் தந்திரத்தையும் கையாளலாம்.

கோத்தபாய மீது அமெரிக்கா கடும் அதிருப்தி.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்கா மிகக்கடுமையான அதிருப்தியில் இருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

ரொய்ட்டர்ஸ் மற்றும் பி.பி.சி. ஊடகங்களுக்கு அண்மையில் நேர்காணல் அளித்த கோத்தபாய, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளை மிகக்கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

"இந்த நேர்காணல் குறித்து அமெரிக்கா மிக வருத்தமடைந்துள்ளது. அதேநேரத்தில் இத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதில் கோத்தபாய ராஜபக்ச புகழ் வாய்ந்தவர்" என்று பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்திருக்கும் நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைகளை மிகக்கடுமையாக உயர் பொறுப்பில் உள்ள கோத்தபாய ராஜபக்ச விமர்சித்திருந்தார். கோத்தபாய ராஜபக்சவின் விமர்சனங்கள், இராணுவ உதவி தொடர்பான விவகாரங்களில் எதிரொலிக்கக்கூடும் என்றும் அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கோத்தபாய ராஜபக்ச விவகாரம் தொடர்பாக எதுவித பகிரங்க அறிக்கையும் வெளியிடுவதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. அதே நேரத்தில் கோத்தபாய ராஜபக்ச நேர்காணல் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே உள்ளக விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் கூறப்படுகிறது.

மேலும் பாரிய மனித உரிமை மீறல்களுக்காக அனைத்துலக நீதிமன்றத்தின் பார்வைக்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் வாரம் நடைபெற உள்ள இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில் கோத்தபாய ராஜபக்சவுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் என்றும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

-Puthinam-

எல்லாம் சொந்த பிரஜைதானே அனுசரிச்சு போயிடுவாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் மேற்குலக நாடுகள் மிரட்டினால் கோத்தபாய பயந்து கொலைகளையும், கடத்தல்களையும் நிறுத்துவார் என்று நாம் நம்பக்கூடாது.. மேற்குலக நாடுகள் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வெறும் "சொற்களை" மட்டும் உதிர்க்கின்றன. மறுவளத்தால் சிறிலங்காவிற்குத் தாராளமாக ஆயுதங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.