Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

15-ந் தேதி பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம் - விவசாய அமைப்புகள் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

15-ந் தேதி பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம் - விவசாய அமைப்புகள் அறிவிப்பு

15-ந் தேதி பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம் - விவசாய அமைப்புகள் அறிவிப்பு

 

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு ஒரு குழுவையும் சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் சிங்கு எல்லையில் விவசாய அமைப்புகளின் தலைவர்கள், பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள குழு உறுப்பினர்கள், அரசுக்கு ஆதரவானவர்கள் என்பதால், அவர்கள் முன்னிலையில் ஆஜராக மாட்டோம் என அறிவித்தனர். இதுபற்றிய விவசாய அமைப்புகளின் தலைவர்கள் கருத்துகள் வருமாறு:-

பல்பீர்சிங் ராஜேவால்:-

சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழுவின் உறுப்பினர்கள், வேளாண் சட்டங்கள் எவ்வாறு விவசாயிகளுக்கு ஆதரவானவை என எழுதி வருவதால், அவர்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல. நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடர்வோம். நாங்கள் கொள்கை அடிப்படையில் குழுவுக்கு எதிரானவர்கள். போராட்டத்தில் இருந்து கவனத்தை திருப்புவதற்கு அரசு மேற்கொள்ளும் வழி இது.

தர்ஷண் சிங்:-

நாங்கள் எந்த குழுவின் முன்பும் ஆஜராக மாட்டோம். நாடாளுமன்றம் விவாதித்து பிரச்சினையை தீர்க்க வேண்டும். நாங்கள் எந்த வெளிப்புற குழுவையும் விரும்பவில்லை.

இவ்வாறு கருத்து தெரிவித்த விவசாய அமைப்புகளின் தலைவர்கள், மத்திய அரசு 15-ந் தேதி நடத்த உள்ள பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த உடன் பல்வேறு விவசாய அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். அது வருமாறு:-

அபிமன்யு கோஹர் (தவைவர், சம்யுக்த் கிசான் மோர்ச்சா):-

வேளாண் சட்டங்களை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இது எங்கள் முக்கிய கோரிக்கை ஆகும்.

மற்றொரு விவசாய அமைப்பின் தலைவர் ஹரிந்தர் லோக்வால்:-

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரையில் போராட்டம் தொடரும்.

லக்பீர் சிங் (துணைத்தலைவர், அனைத்திந்திய கிசான் சபா-பஞ்சாப்):-

குழு அமைக்கும் யோசனையில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. ஒரு குழுவை அமைக்கலாம் என மத்திய அரசு கூறியபோதே, ஆரம்பத்தில் இருந்தே இதை நாங்கள் கூறி வருகிறோம். ஆனால் இந்த முறை கூறி இருப்பது சுப்ரீம் கோர்ட்டு. இந்த குழுவின் செயல்பாட்டை பார்ப்போம்.

மஞ்சித் சிங் (துணைத்தலைவர், பாரதீய கிசான் சங்கம்-பஞ்சாப்):

சுப்ரீம் கோர்ட்டு முடிவை வரவேற்கிறோம். ஆனால் இது தடை உத்தரவுதான். 3 சட்டங்களும் ரத்து செய்யப்படவில்லை. எனவே அந்த சட்டங்களை ரத்து செய்யும் வரையில் இங்கிருந்து நகர மாட்டோம். போராட்டம் தொடரும். குழு அமைக்கும் யோசனைக்கு நாங்கள் எதிரானவர்கள். ஆனால் அதை அரசு அமைப்பதற்கும், சுப்ரீம் கோர்ட்டு அமைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்கள்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/13045218/We-will-take-part-in-the-talks-on-the-15th-We-will.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
 

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் சுமார் 50 நாட்களாக போராடி வருகின்றனர். கடும் குளிர், மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு ஏற்கனவே நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.  இதற்கிடையே இந்த போராட்டத்துக்கு எதிரான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அடுத்த உத்தரவு வரும் வரை, இந்த சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

அத்துடன் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக 4 உறுப்பினர் குழு ஒன்றையும் அமைத்து உள்ளது. வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் குறைகளை இந்த குழு முன் தெரிவிக்குமாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அமைத்த இந்த குழு அரசுக்கு ஆதரவான குழு என குற்றம் சாட்டியுள்ள விவசாய அமைப்புகள், எனவே இந்த குழு முன் ஆஜராகமாட்டோம் என அறிவித்தன.

இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மதியம் 12 மணியளவில் 9-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படும் என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளன. அதைப்போல தங்கள் அவல நிலைக்கு விடிவு ஏற்பட வேண்டும் என விவசாயிகளும் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து வேளான் மந்திரி நரேந்திர சிங் தோமர் நேற்று கூறுகையில் ‘‘திறந்த மனநிலையுடன் விவசாயிகளின் தலைவர்களுடன் பேசுவதற்கு அரசு தயாராக இருக்கிறது. நாளை மதியம் 12 மணிக்கு மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் சாதகமான விவாதங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/India/2021/01/15055450/Will-the-farmers-struggle-in-Delhi-end-Negotiations.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.