Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிசான் சம்மான் திட்டத்தில் ரூ.1,364 கோடி முறைகேடு... அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிசான் சம்மான் திட்டத்தில் ரூ.1,364 கோடி முறைகேடு... அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ தகவல்!

கிசான் சம்மான்

எப்போதுமே பொங்கலுக்கு ரூ.1,000 மட்டும் கொடுக்கும் தமிழக அரசு. இந்தமுறை தேர்தலுக்கு முன்பாக வரும் பொங்கல் என்பதால் ரூ.2,500 கொடுக்கவில்லையா? அதைப் போலத்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு 3 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி கிசான் சம்மான் திட்டத்தைக் கொண்டுவந்தார்.

சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கும் நிதியுதவித் திட்டத்தை (PM-Kissan) 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 100% மத்திய அரசின் நிதியுடன் 01.12.2018 முதல் செயல்படத் தொடங்கிய இந்தத் திட்டத்துக்கு 5 ஏக்கர் நிலமுடைய சிறு, குறு விவசாயிகள் அனைவரும் தகுதியுடையவர்கள் என்று முதலில் வரையறுக்கப்பட்டது. அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 எனக் கணக்கிடப்பட்டு மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வந்தது. விவசாயிகளின் நன்மைக்கான இந்தத் திட்டத்தில் தமிழகம் முழுக்க போலி விவசாயிகளை இணைத்து கோடிக்கணக்கில் முறைகேடு செய்தது வெளிச்சத்துக்கு வந்தது. அதையடுத்து முறைகேடு செய்த போலி விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.

பிரதமர் மோடி
 
பிரதமர் மோடி

அதேபோல முறைகேடுகளில் ஈடுபட்ட மற்றும் அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கிறது வேளாண்துறை. தமிழகம் முழுவதும் இந்த முறைகேடுகள் நடைபெற்றிருந்தாலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில்தான் அதிகளவில் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில்தான் பஞ்சாப், அசாம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் தகுதியில்லாத 20 லட்சம் பயனாளிகளுக்கு சுமார் ரூ.1,364 கோடிகளை மத்திய அரசு வழங்கியிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

காமன்வெல்த் மனித உரிமை ஆர்வலரான வெங்கடேஷ் நாயக் விவசாயிகள் நிதியுதவி திட்டம் குறித்தும் அதற்கான பயனாளிகளின் வரையறை குறித்தும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மத்திய வேளாண் துறையிடம் விளக்கம் கேட்டுப் பெற்றிருக்கிறார். அந்தத் தகவலை பகிர்ந்திருக்கும் அவர், ``இந்த நிதியுதவி இரண்டு பிரிவுகளில் வழங்கப்பட்டிருக்கிறது. தகுதியற்ற விவசாயிகள் மட்டுமல்லாமல் வருமான வரி செலுத்தும் விவசாயிகளும் நிதியுதவி பெற்றிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரிய வந்திருக்கிறது.

விவசாயிகள்
 
விவசாயிகள்

நிதியுதவி பெற்றிருக்கும் தகுதியற்ற விவசாயிகளில் 55.58% பேர் வருமான வரி செலுத்துபவர்கள். மீதமுள்ள 44.41% விவசாயிகள் நிதியுதவி பெறத் தகுதியற்ற பிரிவில் வருபவர்கள். இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து 2020 ஜூலை 31-ம் தேதி வரை ரூ.1,364.13 கோடி செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிதியுதவி திட்டம் தவறானவர்களின் கைகளுக்குச் சென்றிருப்பதை அரசின் புள்ளி விவரங்களே தெளிவாகக் காட்டுகிறது. இந்த விவசாயிகள் அனைவரும் மகாராஷ்டிரா, பஞ்சாப், அசாம், குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

 

பஞ்சாப்பில் மட்டும் 4.74 லட்சம் (23.16%) தகுதியற்ற விவசாயிகள் நிதியுதவியைப் பெற்றிருக்கிறார்கள். அதேபோல அசாமில் 3.45 லட்சம் (16.87%) விவசாயிகளும், மகாராஷ்டிராவில் 2.86 லட்சம் (13.99%) விவசாயிகளும் பலன் பெற்றிருக்கின்றனர். இந்த 4 மாநிலங்களிலும் தகுதியற்ற விவசாயிகளையும் சேர்த்து 54.03% தொகையைப் பெற்றிருக்கின்றனர்” என்று அதிர்ச்சியளிக்கிறார்.

``விவசாயம் இன்று இருக்கும் நிலையில் இந்த சொற்ப தொகை விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்திவிடாது. ஆனாலும், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இப்போதுதான் விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கும் அரசு, இந்தச் சிறிய சலுகையை அளித்திருக்கிறது. இதிலும் முறைகேடு நடப்பதால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

விவசாயம்
 
விவசாயம்

தமிழகத்தில் நடந்த முறைகேட்டில் பணத்தைத் திரும்பப் பெறுகிறார்களே தவிர, அதில் தொடர்புடைய முக்கிய அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. கண் துடைப்புக்காக ஒருசில கடைநிலை ஊழியர்களும் ஒப்பந்த ஊழியர்களும் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவரை தமிழகத்தில்தான் இந்த முறைகேடு நடைபெற்றதாக நினைத்துக் கொண்டிருந்தோம். தற்போது இந்தியா முழுவதிலும் நடைபெற்றிருப்பதால் உடனடியாக சி.பி.ஐ விசாரணை வைத்து, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்” என்கிறார் தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் முதன்மைச் செயலாளர் முருகையன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ. மாதவனிடம் பேசினோம். ``இந்தத் திட்டத்தின் கீழ் நிதி பெறுவதற்காகத் தமிழகத்திலாவது ஆதார் அட்டை, குடும்ப உறுப்பினர் அட்டை, பட்டா, சிட்டா போன்றவற்றைக் கேட்டுப் பெற்றார்கள். ஆனால், வடமாநிலங்களில் பட்டா, சிட்டா என எதையும் அவர்கள் கேட்கவில்லை. அதற்குக் காரணம் 2019 நாடாளுமன்றத் தேர்தல். எப்போதுமே பொங்கலுக்கு ரூ.1,000 மட்டும் கொடுக்கும் தமிழக அரசு. இந்தமுறை தேர்தலுக்கு முன்பாக வரும் பொங்கல் என்பதால் ரூ.2,500 கொடுக்கவில்லையா? அதைப் போலத்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு 3 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தார்.

கோ. மாதவன், விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர்
 

அதற்கான எந்த விதிமுறைகளையும் வகுக்காமல், ஆதார் அட்டை, குடும்ப உறுப்பினர் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களையும் வாங்காமல் விவசாயி என்று விண்ணப்பித்துவிட்டாலே போதும் என்ற நிலையில் அனைவருக்கும் பணத்தை அனுப்பிவிட்டது.

அதன்படி அங்கு ஒரேவீட்டில் கணவன், மனைவி, மகன், மகள் என அனைவருமே இந்தத் திட்டத்தின் அடிப்படையில் பணம் பெற்றிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கிறது. அதை முறையாக விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் நடந்த குளறுபடிகள் காரணமாக அந்தத் திட்டம் தற்போது முடக்கப்பட்டிருக்கிறது. அதன்காரணமாகத் தகுதியான விவசாயிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இனிவரும் காலங்களிலாவது முறையான விதிமுறைகளை உருவாக்கி முழு பயனும் தகுதியான விவசாயிகளுக்கு சென்றடைவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்கிறார்.

 

https://www.vikatan.com/government-and-politics/agriculture/rti-information-reveals-rs-1364-crore-irregularities-in-pm-kisan-samman-scheme

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.