Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சதீவில் போராட்டத்திற்கு முஸ்தீபு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சதீவில் போராட்டத்திற்கு முஸ்தீபு

(ஆர்.யசி)

 

இந்திய தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை  இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் மீறுவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள்  இம்மாதம் 23 ஆம் திகதி தமது மீன்பிடி விசைப்படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி கச்சத்தீவு நோக்கி சென்று போராட்டம் நடத்தவுள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 26 இந்திய இராமேஸ்வரம் மீனவர்களை நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ள நிலையில் இந்திய  மீனவர்களின்  நான்கு விசைப்படகுகளையும் அரசுடமை செய்வதாக  ஊற்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்தே ராமேஸ்வரம் மீனவர்கள்  இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.  

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட பல இலட்ச ரூபா பெறுமதியான இந்திய மீனவர்களின் விசைப்படகுகளை  உடனடியாக விடுதலை செய்யக்கோரியும்,  1976 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை உண்டு என்பதை வலியுறுத்தியும் அதையும் மீறி அப்பகுதிகளில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதை கண்டித்தும் பாரம்பாரிய இடத்தில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும்  உரிமையை மீட்டுத்தர வலியுறுத்தியும் எதிர்வரும்  23 ஆம் திகதி,  ராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகுகள் அனைத்திலும் கருப்புக் கொடிகளை கட்டி கச்சத்தீவு நோக்கி பயணித்து போராட்டம் நடத்தவுள்ளதாக நேற்றைய தினம் மீனவர்கள் சங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தெரிவித்தார். 
 

https://www.virakesari.lk/article/98518

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான் செய்கினம் தினமும் தமிழக  மீனவர்களின் உயிரை  இலங்கை கடற்படை எடுக்கும்போது வராத ஆவேசம் இப்ப கிளம்புதாம் .மறுபடியும் எம் மக்களை உசுப்பேத்தி ரெத்த  ஆறு ஓட வைக்க டெல்லி கிளம்புது என்பது நிச்சயமாய் தெரிகிறது 2009ல் டெல்லி விட்ட  பிழைக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது வேண்டுமானால் கச்சா தீவை 99 வருட குத்தகைக்கு சைனாவுக்கு கொடுக்க கோத்தாவுக்கு ரெகமெண்ட் பண்ணலாம் .😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.