Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அட சீ இதுக்கும் ஒரு சட்டமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலர்கள் பிரிந்தால் ஜீவனாம்சம் புதிய சட்டம் கொண்டு வர பிரிட்டன் முடிவு

லண்டன் : திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல் வாழ்ந்து வருபவர்கள் பிரிந்து செல்ல நேரிட்டால், ஜீவனாம்சம் தர வேண்டும்; வீட்டின் உரிமையை பங்கு போட்டு கொள்ள வேண்டும் ஆகிய விஷயங்கள் அடங்கிய புதிய சட்டத்தை கொண்டு வர பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், கணவன் மனைவி என்ற பாரம்பரியமே அடிபட்டு போய் விடும் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் கணவன், மனைவி போல வாழும் காதலர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பிரிட்டனில் இது போல் 20 லட்சம் ஜோடிகள் வாழ்ந்து வருகின்றனர். கணவன், மனைவி விவாகரத்து செய்து கொண்டால், மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும் என்பது உலகளவில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை.

ஆனால், கணவன்மனைவி போல ஒன்றாக வாழும் காதலர்களுக்கு சட்ட ரீதியாக இந்த பாதுகாப்பு கிடையாது. இவர்களுக்கும் சட்ட ரீதியாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பிரிட்டனில் பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இவர்களின் கோரிக்கையை ஏற்கும் நிலையில் பிரிட்டன் அரசு உள்ளது. இதற்காக சட்ட நிபுணர்கள் ஆலோசனை செய்து ஒரு திட்ட வரைவை அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து இரண்டாண்டுகளுக்காவது கணவன், மனைவி போல் ஒன்றாக வாழ்ந்த ஜோடிகள், குழந்தைகள் உள்ளவர்கள் ஆகியோர் பிரிந்து செல்ல நேரிட்டால், இந்த பிரிவினால் பாதிக்கப்படுபவருக்கு பராமரிப்பு செலவு தொகை, வீட்டில் உரிமை ஆகியவை தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஜோடி கணவன் மனைவி போல ஒன்றாக வாழ்ந்தவர்கள் என்பதையும், நஷ்ட தொகை வழங்க வேண்டும் என்ற முடிவையும் தீர்மானிக்கும் அதிகாரம் கோர்ட்கள் மற்றும் நீதிபதிகளுக்கே வழங்கப்பட உள்ளது. பிரிட்டன் அரசு கொண்டு வர உள்ள இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விவாகரத்து வழக்குகளை கவனித்து வரும் கரோலின் ரைட் என்ற வக்கீல் கூறுகையில்,"" தம்பதிகள் முன்பு ஒன்றாக சொத்துக்கள் வாங்கும் போது கணவன்,மனைவி போல ஒன்றாக வாழும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவற்றை பதிவு செய்யும்படி அறிவுறுத்துவேன். இதன் மூலம் தம்பதிகள் பிரிந்து சென்றாலும், சொத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், தற்போது இதில் பிரிட்டன் அரசு புதிய குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. கணவன், மனைவி என்ற பாரம்பரியத்துக்கு எதிராக வாழ்பவர்களுக்கு சட்டப்படி உரிமை அளிப்பது போல புதிய சட்டம் அமைந்து விடும்,'' என்று தெரிவித்துள்ளார். ராபர்ட் வீலன் என்ற நிபுணர் கூறுகையில்,"" செக்ஸ் மட்டுமே அரசு தலையீடு இல்லாத ஒரே விஷயம் என்ற நிலை முன்பு காணப்பட்டது. தற்போது அதற்கும் சிக்கல் வந்து விட்டது. ஏற்கனவே, கடமை என்ற விஷயத்தில் ஆண்கள் கட்டுப்பட்டு உள்ளனர் என்று கூறப்படுவது உண்டு. இந்த சட்டம் வந்த பிறகு பெண்களை ஏறிட்டு பார்க்கவே ஆண்கள் அச்சப்படுவர். ஆசைப்பட்டு பெண்ணுடன் வாழ்ந்து விட்டால், பாதி சொத்தை இழக்க நேரிடுமே என்ற பயம் அவர்களை ஆட்கொள்ளும். மேலும், ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து பழகத் தொடங்கினாலே அவர்களை வக்கீல்கள் துரத்த ஆரம்பித்து விடுவர் ,'' என்று காட்டமாக விமர்சித்தார்.

எடுத்து வந்தது SNS செய்தி சேவை....நன்றிகள் தினமலர்

இனி காதலிச்சு அல்வா கொடுக்கிற காதலிமார் கூட போதுப்பா..ஆகவே ஜமுனா கவணம் இனிமேலல்...

ஓய் சுண்டு என்ன நக்கலா அந்த பக்கம் வரவேண்டும் போல இருக்கு அது சரி உங்களை ஏமாற்றின ஆட்கள் எல்லாம் இப்ப என்ன செய்ய போகீனம்.....................

சா ஒன்றா,இரண்டா

:P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறன சட்டம் சரியாகவே தோன்றுகின்றது. பாராம்பரிய வாழ்க்கைக்குள் வாழ்பவர்களைக் குறைக்கும் என்று பலர் வருந்தினாலும், பாராம்பரியமற்ற சுதந்திர வாழ்க்கை என்று தன்னிச்சையாக நடந்து பெண்ணயும், குழந்தையையும் நடுத்தெருவில் விட்டுவிட்டுப் போகின்ற வாழ்க்கைக்கு ஒரு கட்டுப்பாடு ஏற்படுத்த அரசு சிந்திப்பதில் தவறில்லை.

ஏனென்றால் பாராம்பரியமான வாழ்வில் இருந்து எவராலும் மீண்டு வந்து இப்படியான காதலர்களாக இருநது விட்டுச் செல்லக் கூடிய வாய்ப்பு உண்டு. எனவே பாராம்பரியம் இழக்ககப்படும் என்பது தவறானது. அது இழக்கப்படுவதால் தான் இப்படி ஒரு சட்டமாக இருக்கலாம்.

-------------------------------------------------

விடுதலைப்புலிகளின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தில், இருவர் காதலிக்கும்போது கட்டாயம் அருகில் உள்ள காவல்துறையில் அது பற்றிய தகவல்களைப் பதிந்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிலர் சொன்னார்கள்.( இதில் உள்ள உண்மை பொய் பற்றி நான் அறியேன்). அதற்காக காதலிப்பது தொடர்பாக எவ்வித இறுக்கத்தையும் விதிக்கவில்லையாம்.

ஆனால் அப்படி இருக்கும்பட்சத்தில் பெண்ணுக்கும், ஆணுக்கும் ஏமாற்றத்தைத் தவிர்க்க உதவும் என்பது உண்மை. பெண் ஏமாற்றிவிட்டு இன்னுமொருவனைத் திருமணம் செய்தால் ஆண் தேவதாஸ் ஆகுவதைத் தவிர்க்கவோ, அல்லது ஆண் ஏமாற்றி விட்டால் பெண் சோகத்தையோ இதர பாதிப்புக்களையே பெற்றுக் கொள்ளாமல் வழி ஏற்படுகின்றது.

என் வீட்டில் இந்த ஒருவர் அவர் ஒரு மென்பொருள் கம்பனியில் வேலை பார்கிறார் இந்திநோசியாகாரர்.கலியாணமாகி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உது பொண்ணுகளுக்கு தான் சரி நல்லா காசு பறிக்கலாம் மற்றது ஈழவன் சொன்னது மாதிரி இப்பலாம் சொத்து வைச்சு இருக்கிறவன கட்டி அவன்ட சொத்த பறிக்க விவாரகரத்து செய்து ஓடுற கதையளும் நிறைய நடக்கிது இங்க.....

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா பணம் சம்பாதிக்க இப்படியும் ஒரு வழி உன்டா? :rolleyes:

உது பொண்ணுகளுக்கு தான் சரி நல்லா காசு பறிக்கலாம் மற்றது ஈழவன் சொன்னது மாதிரி இப்பலாம் சொத்து வைச்சு இருக்கிறவன கட்டி அவன்ட சொத்த பறிக்க விவாரகரத்து செய்து ஓடுற கதையளும் நிறைய நடக்கிது இங்க.....

பெண்களை பற்றி தப்பா சொல்ல கூடாது சுண்டு எனக்கு பிடிக்காது எல்லா பெண்களும் அப்படியில்லை பெண்களுகாண்டி நான் குரல் எழுப்புவன்

:P :P :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.