Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படையினரின் மனோதிடம் பாதிக்க அரசே காரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படையினரின் மனோதிடம் பாதிக்க அரசே காரணம்

[18 - June - 2007]

* அநுராதபுரத்தில் ரணில்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசின் செயற்பாடுகளே படையினரின் மனோதிடத்தை பெரிதும் பாதிக்கச் செய்துள்ளதாகவும் வேறு எவரையும் இது தொடர்பில் குற்றம்சாட்ட முடியாதென்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நுவரவெல மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்விப் பிரமுகர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப்பிரமுகர்கள் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் இன்றைய ஆட்சியாளர்களின் குறைகளையும் தவறுகளையும் மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் சுட்டிக்காட்டுவது எமது பிரதான கடமையாகும்.

தவறுகளையும் குறைகளையும் மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் நிவர்த்திசெய்யும் முகமாக எம்மால் சுட்டிக்காட்டப்படும் விடயங்களை திரிபுபடுத்தி அதுவே படையினரின் மனோபலத்தை மிக மோசமாகப் பாதிப்பதாக அரச தரப்பினரால் பிரசாரம் செய்யப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கூற்றாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்குப் பின்னரும் விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய பெருந்தொகைப் பணம் மூலமா அல்லது அரசின் மனித உரிமை மீறல்களை சுட்டிக் காட்டியதன் மூலமா படையினரின் மனோதிடம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

மடு, நெடுந்தீவு போன்ற பகுதிகளில் அண்மைக் காலங்களில் படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பாரிய தாக்குதல் சம்பவங்களுக்கு அரசு புலிகளுக்கு வழங்கிய பணமே பிரதான காரணமாகும்.

ஆட்கடத்தல், கப்பம், படுகொலை என்பவற்றை நாடு பூராகவும் விஸ்தரித்துக்கொண்டு இன்றைய ஆட்சியாளர்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்ட தமிழர்கள், முஸ்லிம்கள் பலருக்கு இதுவரை என்ன நடந்ததென்று அறிய முடியாமலுள்ளது. முஸ்லிம்கள் தனி நாடு கோரி போராடவில்லை ஏன் எதற்காக அவர்கள் கடத்தப்படுகிறார்கள்.

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மிக மோசமான மனித உரிமைச் சம்பவங்களை சர்வமதப் பேரவை கூட மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் நாட்டில் இடம்பெறும் அனைத்துச் சம்பவங்களுக்கும் பொறுப்புடன் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அந்த வகையிலே அரசின் மனித உரிமை மீறல்களையும் தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.

டி.எஸ்.சேனநாயக்கா கூறிய கருத்தின்படி இந் நாட்டிலுள்ள சகல சமூகங்களையும் ஒன்றிணைத்து ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமத்துவமாகவும் ஐக்கியமாகவும் வாழும் சமாதான சுபிட்சமாகன சூழல் ஒன்றை உருவாக்குவதே ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே குறிக்கோளாகுமென்றார்.

நன்றி - தினக்குரல்

இருந்தால் அல்லவா பாதிக்கப்பட

  • கருத்துக்கள உறவுகள்

படையினரின் மனோதிடம் பாதிக்க புலிகளின் அடியே காரணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டி.எஸ். சேனநாயக்கா இன்று உயிரோடு இருந்தால் ஜே.வி.பி யின் தலைவராக இருந்திருப்பார். ஹி..ஹி..ஹி...

படையினரின் மனோதிடம் பாதிக்க அரசே காரணம்...

படையினர் தேவையில்லாமல் மண்டையைப் போடுவதற்கு அரசே காரணம் என இன்னும் கொஞ்சம் திருத்தமாகச் சொன்னால் நன்றாக இருக்கும்.. :rolleyes:

டி.எஸ்.சேனநாயக்கா கூறிய கருத்தின்படி இந் நாட்டிலுள்ள சகல சமூகங்களையும் ஒன்றிணைத்து ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமத்துவமாகவும் ஐக்கியமாகவும் வாழும் சமாதான சுபிட்சமாகன சூழல் ஒன்றை உருவாக்குவதே ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே குறிக்கோளாகுமென்றார்....

ஆ அணிலில் அறுவைவை தாங்கமுடியவில்லை... பகிடி அளவு கணக்கில்லாமல் போகின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்ட தமிழர்கள், முஸ்லிம்கள் பலருக்கு இதுவரை என்ன நடந்ததென்று அறிய முடியாமலுள்ளது. முஸ்லிம்கள் தனி நாடு கோரி போராடவில்லை ஏன் எதற்காக அவர்கள் கடத்தப்படுகிறார்கள்.

அப்ப தனி நாடு கேட்பதினால் தமிழர்களைக் கடத்துவது சரியா ரணில்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.