Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது கடல் இறைமையை எவருக்கும் தாரை வார்க்க முடியாது!- மூத்த கடலோடி அண்ணாமலை சீற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது கடல் இறைமையை எவருக்கும் தாரை வார்க்க முடியாது!- மூத்த கடலோடி அண்ணாமலை சீற்றம்

 

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்து வருகின்றமை தொடர்கதையாகி வருகிறது.

இந்தியாவின் சில அரசியல்வாதிகளும், பெரு முதலாளிகளும் படகு முதலாளிகளாக இருந்து கொண்டு மீன்பிடி தொழிலாளிகளை இலங்கை கடற்கரைக்கு சென்று மீன்பிடித்து வருமாறு விரட்டுவதாகவும் இதனால் எமது மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள் அறுக்கப்படுவதுடன், எமது மீன்வளமும், மீன்களின் வாழிடங்களும் அடியோடு அழிக்கப்பட்டு வருகின்றது. இதனால் சிறிய படகுகளில் இன்றும் மீன்பிடித்து வரும் எமது மீனவர்கள் தொடர்ந்தும் வறுமையில் சிக்கி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது.

அத்துமீறிய மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்து விட்டு இந்திய மீனவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்பது தான் எமது மீனவர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.

இரு நாடுகளுக்கும் கடல் எல்லை இருக்கிறது. இந்திய கடலோர காவற்படை இருக்கிறது. இலங்கை கடற்படையும் இருக்கிறது. ஆனால் இவர்களால் எல்லையில் வைத்து மீனவர்களை திருப்பி அனுப்ப முடியவில்லை.

யுத்த காலப்பகுதியில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக எமது மீனவர்கள் இலங்கை கடற்படையின் பல்வேறு உயிர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி இருந்தனர். இதனால் மீன்பிடியை அன்று பெரிதாக மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது.

போர் முடிவடைந்த பின்னர் தென்னிலங்கை மீனவர்கள் ஒரு புறம் எமது கடல் பகுதிகளை ஆக்கிரமிக்க மறுபுறம் இந்திய மீனவர்கள் எமது கடற்கரையை அண்டி ரோலர் படகுகளில் வந்து மீன்களை அடியோடு அள்ளிச் செல்லும் நிலையால் எமது மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தரப்பினராலும் எம் தாயக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எமது தாயக நிலப் பிரதேசங்களை எவ்வாறு இலங்கையின் தொல்லியல் துறை ஆக்கிரமித்து வருகிறதோ, அதே போன்று எமது கடல் பிரதேசங்களை ஆக்கிரமித்து தொழில் புரிய தென்னிலங்கை மீனவர்களுக்கு நீரியல் வளத் திணைக்களம் அனுமதிகளை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி கொடுத்து வருகின்றது. எமது மீனவர்கள் அட்டை பிடிப்பு தொழில் செய்ய அனுமதி மறுக்கப்படுகின்றது.

இந்நிலைமை இப்படியே தொடர்ந்தால் எம் அடுத்த தலைமுறைக்கு கடலில் எந்த வளங்களும் இருக்காது. எமது பகுதியில் சங்கம், சமாசம் என்று ஏராளம் அமைப்புகள் இருந்தும் அவற்றால் ஒரு பயனும் இல்லை என சொல்கிறார் மூத்த கடலோடி அண்ணாமலை.

எமது கடல் இறைமையை எவருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்கின்றனர் எம் மீனவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று இந்த  காணொலியை பார்த்தேன். யதார்த்தமாக சொல்கின்றார்.

ஐயா சொல்வது உண்மையாக இருந்தாலும் , அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விடுத்த எச்சரிக்கையில் முக்கியமான ஒன்றை குறிப்பிட வேண்டும். அது கச்சைதீவைப்பற்றியது. அது இலங்கைக்கு இன்னும் சடடப்படி கொடுக்கப்படவில்லை. அதாவது ஒரு நாட்டின் பகுதியை அல்லது தீவை அரசு வழங்கும்போது அதட்கு பாராளுமன்றில் அனுமதி பெறவேண்டும். இங்கு அப்படி நடைபெறவில்லை. இந்திரா அம்மையாரும் ஸ்ரீமா அம்மையாரும் நட்ப்பு ரீதியாக பரிமாறிக்கொண்டதே தவிர சடடப்படி இன்னும் பரிமாறப்படவில்லை. இலங்கை கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு கொடுக்கவிடடாள் இதை எடுக்க சந்தர்ப்பம் உண்டு. அப்படி நடந்தால் அவர்களது கடல் எல்லை இன்னும் இலங்கைக்கு அண்மித்து விடும். எனவே அப்படி நடக்காதென்று எதிர்பார்ப்போம். இருந்தாலும் எமது மீனவர்களுக்குத்தான் பாதிப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.