Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி பேரழிவின் பின்னணியில் 100 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன கதிரியக்க சாதனம் ..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி பேரழிவின் பின்னணியில் 100 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன கதிரியக்க சாதனம் ..?

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி பேரழிவின் பின்னணியில் 100 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன கதிரியக்க சாதனம் ..?

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பனிப்பாறைகள் உடைந்த தன் காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டதாக முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நிலச்சரிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சாமோலியின் தபோவன் பகுதியில் உள்ள ரெய்னி கிராமத்தின் கிராமவாசிகள் ஞாயிற்றுக்கிழமை  ஏற்பட்ட திடீர்  வெள்ளம் ஒரு கதிரியக்க சாதனத்தின்  வெப்பத்தின் விளைவாக ஏற்பட்டு இருக்கலாம் என்று கவலையை வெளியிட்டு உள்ளனர்.

1965 ஆம் ஆண்டில் சிஐஏ மற்றும் ஐபி நடத்திய நந்தா தேவி ரகசிய பயணத்தின் போது இந்த சாதனம் தொலைந்து போனது, மலையின் உச்சியில் அணுசக்தியால் இயங்கும் கண்காணிப்பு கருவிகளை  பொருத்த சென்ற போது இது நடந்து  உள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த  பகுதியாகும் (காஞ்சன்ஜங்காவுக்குப் பிறகு).

இருப்பினும், பயணத்தை மேற்கொண்ட மலையேறும் குழு ஒரு பனிப்புயலில் சிக்கி திரும்பி வர வேண்டியிருந்தது, அப்போது அந்த கதிரியக்க  சாதனத்தை மலையின் அடிவாரத்தில் விட்டுவிட்டது. ஒரு வருடம் கழித்து, அவர்கள் மீண்டும் அந்தப் பகுதிக்குச் சென்றபோது, அவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை; 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுட்காலம் கொண்ட இந்த சாதனத்தை  இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் அது அப்பகுதியில் எங்காவது இருப்பதாக நம்பப்படுகிறது.

சாமோலி மாவட்டத்தில் ரெய்னி கிராமத்திற்கு அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஞாயிற்றுக்கிழமை, கிராமவாசிகள், மலையிலிருந்து குப்பை மற்றும் இடிபாடுகள் உருண்டு விழுந்து  வரும் போது  காற்றில் மிகவும் கடுமையான வாசனையை கவனித்ததாக தெரிவித்தனர்.

வாசனை மிகவும் தீவிரமாக இருந்ததால் எங்களால் சிறிது நேரம் சுவாசிக்க முடியவில்லை. குப்பைகள் மற்றும் பனி மட்டுமே இருந்திருந்தால், அத்தகைய வாசனையை வந்திருக்காது. இதற்கு காரணம்  எங்கள் கிராமத்தில் நீண்டகாலத்திற்கு முன் தொலைந்து போன கதிரியக்க சாதனமாக இருக்கலாம் .

இது எங்கள் பெரியவர்கள் எங்களிடம் கூறியது -இது இந்த  சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என்ற கவலையைத் தூண்டியுள்ளது, ”என்று ஜுக்ஜு கிராமத்தில் வசிக்கும் தேவேஸ்வரி தேவி கூறினார். இங்கிருந்து பல ஆண்கள் 1965 பயணத்தின் போது போர்ட்டர்களாக பணியாற்றி உள்ளனர்.

கதிரியக்க சாதனம் இப்பகுதியில் எங்காவது பனியின் கீழ் புதைக்கப்பட்டு வெப்பத்தை கதிர்வீசினால், நிச்சயமாக பனி உருகுவதும் மேலும் பனிச்சரிவுகளும் இருக்கும். மேலும் பேரழிவுகள் ஏற்படுமுன் உடனடியாக இந்த சாதனத்தைத் தேடும் நடவடிக்கையைத் தொடங்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம், ”என்று மற்றொரு கிராமவாசி சங்கிராம் சிங் ராவத் கூறினார்.

2018 ஆம் ஆண்டில், நந்தா தேவி வரம்பிலிருந்து கங்கைக்குள் பனிப்பொழிவை மாசுபடுத்தும் கதிரியக்க சாதனம் குறித்த பிரச்சினையை சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகாராஜ் எழுப்பியதோடு, இந்த விஷயத்தில் அவசர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/02/09162525/Villagers-suspect-radioactive-device-behind-Uttarakhands.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தரகாண்ட் திடீர் வெள்ளத்துக்கான காரணம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்

உத்தரகாண்ட் திடீர் வெள்ளத்துக்கான காரணம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்

 

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் அலெக்நந்தா மற்றும் தவுலிகங்கா ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள 2 நீர்மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது அங்கு பணியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

இந்த பேரிடரில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 197 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அங்குள்ள நீர்மின்நிலையத்தில் அமைந்திருகும் சுரங்கப்பாதையில் ஊழியர்கள் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விபத்து நடந்த பகுதியையொட்டி 13 கிராமங்கள் உள்ளன. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பனிப்பாறை வெடிப்பால் இந்த வெள்ளம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. பனிப்பாறைக்கு கீழே தண்ணீர் சரியாக உறையாமல் ஏரி உருவாகி இருக்கலாம் என்றும் இதன் காரணமாக பிடிமானம் இல்லாமல் பாறை உடைந்து விழுந்து இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இது குறித்து இஸ்ரோவின் தொலை உணர்வு ஆராய்ச்சி அமைப்பு (IISR) விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் படங்கள் மூலமாக ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது பனிப்பாறை சரிவு ஏற்பட்ட இடத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

எனவே அந்த இடத்தில் ஏரி அமைந்திருந்து அதன் மூலமாக பாறை வெடித்து விழவில்லை. பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால்தான் திடீர் வெள்ளம் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். பனிச்சரிவு ஏற்பட்ட இடம் கடல் மட்டத்திற்கு மேல் 5,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 14 கி.மீ சுற்றளவுக்கு பனிச்சரிவு ஒரே நேரத்தில் ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 3 கோடி கியூபிக் மீட்டர் தண்ணீர் ஒரே நேரத்தில் வெளியேறி இருக்கிறது. இதனால் இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்டுவிட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

https://www.dailythanthi.com/News/TopNews/2021/02/09140747/ISRO-scientists-explain-the-cause-of-the-flash-floods.vpf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.