Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வளைந்து கொடுக்காத மனிதர் பிரபாகரன் - விடுதலைப் புலிகளை பலவீனமாக்குவது தான் எமது நோக்கம்: கோத்தபாய.

Featured Replies

வளைந்து கொடுக்காத மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன்: கோத்தபாய ராஜபக்ச.

தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்- வளைந்து கொடுக்காத மனிதர். நிலங்களைக் கைப்பற்றுவது இராணுவத்தின் இலக்கல்ல. விடுதலைப் புலிகளை பலவீனமாக்குவது தான் எமது நோக்கம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு வார ஏடு ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்:

முன்னைய ஈழப் போர்களின் போதைய இராணுவ நடவடிக்கைகளுக்கும் தற்போதைய நிலைமைக்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இராணுவ உத்தி என்பது இராணுவத்தினர் தொடர்பானது. இராணுவத்தினருக்கு நான் சுதந்திரம் அளித்திருக்கிறேன். இராணுவ உத்தியை வகுப்பது என்பது முற்றாக முப்படைகளின் தளபதிகளிடம் உள்ளது. மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட உடன், நிலைமைகளை முழுமையாக ஆய்ந்து உத்திகளை வகுத்தோம். இராணுவ உத்திகளில் எதுவித அரசியல் தலையீடும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இராணுவத்தினரை முப்படைகளின் தளபதிகளே கையாளுவதால் நல்ல வெற்றி கிடைத்துள்ளது. முதல் முறையாக தற்போதைய முப்படைகளின் தளபதிகளும் முன்னைய பாரிய இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இராணுவத்தின் மிகக் கீழ் நிலையினரைக் கூட இராணுவ உத்தியில் பங்கேற்க வைத்துள்ளோம்.

முன்னைய இராணுவ நடவடிக்கைளின் மூலம் தற்போதைய இராணுவ தளபதி, எதிரிகளின் வியூகம், எதிரிகளின் இருப்பிடம் ஆகியவற்றை நன்கு அறிந்து வைத்துள்ளார். களத்தை நன்கு கற்றவர். எதுவிதத் தலையீடும் இல்லாமல் இராணுவம் தனது வளங்களைப் பயன்படுத்த அனுமதித்திருக்கிறோம். இத்தகைய அணுகுமுறையால் நல்ல வெற்றிகளை ஈட்டியிருக்கிறோம். உதாரணமாக கிழக்கை எடுத்துக் கொண்டால் முன்னரை விட எதிரிகளின் ஆயுதங்களை பெருமளவில் நாங்கள் கைப்பற்றியிருக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு இழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறோம். கடந்த 3 மாதங்களில் 70-க்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உடல்களை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம். விடுதலைப் புலிகள் பெரும் எண்ணிக்கையில் சரணடைந்தும் வருகின்றனர். முன்னரை இதுவிட மாறுபட்ட நிலைமைகளையே இது எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் சிறந்த நிர்வாகம், சிறந்த தந்திரோபாயம், சிறந்த தலைமைத்துவமே காரணம். அதனாலேயே நமக்கு இழப்புகளும் குறைவு.

நாம் டாங்கிகளை இழக்கவில்லை- வானூர்திகளை இழக்கவில்லை- இராணுவத்தினரை இழக்கவில்லை என்று பல இராணுவ அதிகாரிகள் என்னிடம் கூறியுள்ளனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டுணர்வு அதி உயர்வானது. அத்தகைய உயர்ந்த கட்டுப்பாட்டுணர்வு இருக்கும் நிலையில் நாம் நல்ல முறையில் இயங்க முடியும். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுணர்வை நீடிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. எவர் ஒருவரும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுணர்வை- மன உறுதியைச் சீர்குலைக்கக் கூடாது. இதுவிடயத்தில் நாம் கவலை கொள்கிறோம். நீங்கள் இராணுவத்தினரினது மன உறுதியை சீர்குலைத்தால் இராணுவத்தினர் தங்களது உயிரைக் கொடுக்க நேரிடும் என்பதை நீங்கள் நினைவு கொள்ளுங்கள். எப்போது இராணுவ வீரரின் மன உறுதியை நீங்கள் சீர்குலைக்கிறீர்களோ அப்போது நம்பிக்கையோடு எதிரிக்கு முகம் கொடுக்க முடியாது போய்விடும். எப்போது மன உறுதியோடும் கட்டுப்பாட்டுணர்வோடும் நிற்கிறானோ அப்போது நம்பிக்கையோடு எதிரியை எதிர்கொள்வான். ஆகையால் சில்லறை இலாபங்களுக்காக அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட எவருமே இராணுவத்தினரின் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் சீர்குலைக்க வேண்டாம்.

இராணுவம் சுதந்திரமாக இயங்கும் அதே நேரத்தில் அரசியல் ரீதியாக நாட்டுக்குத் தலைமை வகிக்கும் அரச தலைவருக்கு இராணுவ உத்தி தெரியாது. ஆகையால் அவர் தலையிடாமல் இருக்க வேண்டும். முப்படைகளின் தலைவராக இருக்கும் அரச தலைவர் வழிகாட்டுதல்களை மேற்கொண்டாலும் போர் நடவடிக்கைகள், ஆட்சேர்ப்பு, உத்திகள் அனைத்துமே இராணுவத்தினரிடம்தான் இருக்க வேண்டும்.

இந்த நாட்டை ஒரு பயங்கரவாத இயக்கம், பிளவுபடுத்தி அறவிடுதலை அனுமதிக்க முடியாது. நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அரச தலைவரின் கடமை. அதற்காகத்தான் மக்கள் அவரைத் தெரிவு செய்துள்ளனர். பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறிலங்காவின் இராணுவச் செலவு அதிகம் இல்லை. இராணுவத்துக்கு மிகக் குறைவாக செலவு செய்து அதிக அபிவிருத்தியைப் பெறுவதுதான் நாட்டுக்கு நன்மையானது. அதே நேரத்தில் அண்மைய அனைத்துலக நடப்புகளைப் பார்த்தால் ஒவ்வொரு நாடுமே தனது பாதுகாப்பு குறித்து கவலை கொள்கிறது. உலகம் முழுவதும் கொடிய பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்களிடையே வேறுபாடு ஏதும் இல்லை. அவர்கள் ஒரு நாட்டின் இராணுவச் செலவுகளை மட்டும் அதிகரிக்கச் செய்யவில்லை. பொருளாதார ரீதியாகவும் பெரும் நாசம் செய்கின்றனர். காப்பீடுகள், கடனுதவிகள் என அனைத்துலக அமைப்புகளையும் நெருக்கடிகளுக்குள்ளாகின்றன

Edited by யாழ்வினோ

மனுசன் ரொம்பவே குழம்பிப் போயிருகிறார் என்று வலு தெளிவாகவே தெரியுது. தற்போதைய போர் நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளை பலவீனப் படுத்தி பேச்சு மேசைக்குக் கொண்டுவர என்று வரிக்கு வரி சொலிப்போட்டு ஓரிடத்தில் அவர்களை அழிக்க கால எல்லைகள் எல்லாம் போட முடியாது என்கிறார். வன்னியில் இடங்கள் பிடிக்கப்போகவில்லை ஆனால் "தற்போதைய இடத்திலிலிருந்து 11 கிலோமீற்றர் முன்னால் உள்ளோம்" என்கிறார். இன்னுமோரிடத்தில் "கொழும்பு கடத்தல்களை ஒப்புக்கொண்டதாக நான் கூறிய விடயத்திலும் உண்மை ஏதும் இல்லை" என்று சொல்லிப்போட்டு "கடத்தல்கள் என்பது நடக்கின்றனதான் ; அதனால்தான் நாம் நிறுத்த முயற்சிக்கிறோம்" என்று புட்டுப்புட்டு வைக்கிறார். இத்தனை கொடுமைகளையும் செய்து போட்டு கர்மாவிலும் நம்பிக்கை வைக்கும் கோத்தபாயாவுக்கு நிகர் கோத்தபாயாதான்.

சிறு புள்ளி.

  • கருத்துக்கள உறவுகள்

பயம் குழப்பம் பிதற்றல் அடங்கியது

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு இராஜதந்திர ரீதியாக அழுத்தங்கள் வருகின்றதோ அப்போதெல்லாம் சிறிலங்கா அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு பிரபாகரன் தள்ளிவிடுகிறார். ஆகையால் விடுதலைப் புலிகளின் மனோநிலையை புரிந்து கொள்வது என்பது முக்கியமானது. அந்த உத்தியை வீழ்த்துவதை விட அறிவாளித்தனமாக எதிர்வினையாற்ற வேண்டும்.

உதாரணமாக, இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளின் மீது அரசாங்கம் அழுத்தங்களைத் தருகின்றபோது, மனித உரிமைகள் விடயத்தை பிரபாகரன் பயன்படுத்திக் கொள்கிறார். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள அரசியல் கட்சிகள், அனைத்துலக ஊடகங்கள் கண்களையும் காதையும் திறந்துவைத்துக் கொண்டு பிரபாகரன் மீண்டும் மீண்டும் பின்னுகிற இந்தச் சுற்றாடலில் சிக்காமல் நிலைமைகளை ஆராய வேண்டும்.

இவர்களின் புலிகள் மீதான அழுத்தங்களுக்கும், இவர்களின் மனித உரிமை மீறலுக்கும் என்ன சம்பந்தம்?

புலிகளா சொன்னார்கள்? அப்பாவிகளைக் கொலை செய்தும், இளைஞர்களைக் கடத்தி கொண்டு போய் கொன்று குவிக்கவும் சொன்னார்கள்? அல்லது அப்பாவி மக்கள் மீது குண்டு போட்டு இரத்தவெறி கொள்ளச் சொன்னார்கள்?

தங்களின் கொலைகளையும், தமிழ் மக்கள் மீதான வன்புணர்ச்சியையும், ஒரு இராணுவநடவடிக்கை என்று சிந்திக்கின்ற இந்தக் கும்பல்களோடு எவ்வாறு இணைந்து வாழ முடியும்?

இவர்;களைத் தன்னிச்சையாக மக்கள் கொலைகளைச் செய்து மனித உரிமை விடயங்களில் பிரபாகரன் மாட்ட வைக்கின்றார் என்றால் அது "மோட்டுச் சிங்களவன்" என்று தங்களை ஒப்புக் கொள்கின்றாரா? அதுவல்ல உண்மை.

தங்களின் மனித உரிமை மீறலுக்கு சிங்கள மக்கள் மத்தியில் நியாயம் கற்பிக்கின்றார்

குழம்பிப் போய் இருப்பார்கள் என்று தான் நினத்திருந்தேன். ஆனாலும் இவ்வளவு குழம்பிப் போய் இருப்பார்கள் என்று நினைக்கவில்லை. GOAT-BOY யின் ஒவ்வொரு வார்த்தையிலும் நடுக்கம் தெரிகிறது. துணிச்சலை காட்ட நினைக்கும் நடிப்பும் தெரிகிறது. Goat-Boy why did you try to be a cowboy? see, now what happened!!

அதனால்தான் 30வருடமாக உரிமை குரல் எழுப்ப பாடுபடுகிறார் நம் தலைவர் தலைவரின் ராஜ தந்திரத்தால் மகிந்த குடும்பம் கலங்கி இருப்பது புலணாகின்றது என்க 11 கிமீ முன்னோக்கி உள்ளனர் பல நாள் செலவளித்து பிடித்த இடத்தை அண்மையில் சில மணித்தியாலத்தில் பிடித்தனர் புலிகள் அத்துடன் நெடுந்தீவு அடி வேற விமானப்படை பேதி வேற இப்படியும் தொடை நடுங்கியாக எந்த பாதுகாப்பு செயலாளரும் இருந்ததில்லை என்ன கொடுமையப்பா இது இவனெல்லாம் பாதுகாப்பு அமைசின் செயலாலர் கேலிக்கூத்தாக இல்லை

அதுதான் இன்னும் 50 000 படைச்சேர்ப்பு. சேர்த்துக் கொண்டு வாங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.