Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதகர்கள் எனக் கூறி கத்தோலிக்க மதத்தை இழிவுபடுத்தும் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - பேராயர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

 

போதகர்கள் எனக் கூறி போலி பிரசாரங்களை செய்வதோடு , துன்பத்திலிருந்தும் மக்களின் கவலைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கத்தோலிக்க மதத்தை இழிவுபடுத்தும் வகையில் செயற்படும் அடிப்படைவாத குழுவினர் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

25.jpg

கர்தினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகை அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு - பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

முறையாக பயிற்சிகள் எதனையும் பெறாமல் தம்மை போதகர்கள் என்று கூறி மக்கள் மத்தியில் போலியான பிரசாரங்களை முன்னெடுப்பவர்களும் இலங்கை கத்தோலிக்க திருச்சபைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

இவ்வாறானவர்கள் துன்பத்திலுள்ள மக்களின் கஷ்டங்களை போக்குவதாகக் கூறி அவர்களை ஏமாற்றுபவர்களாவர். குறுக்கு வழியில் கஷ்டங்களிலிருந்து மீள முடியும் என்று கத்தோலிக்க சமயத்தில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை.

எனவே இவ்வாறானவர்கள் யார் , அவர்களுக்கு தலைமை வகிப்பவர்கள் யார் , வெளிநாடுகளில் எவ்வாறான அமைப்புக்களுடன் இவர்கள் தொடர்பு கொண்டுள்ளார்கள் ? , எங்கிருந்து இவர்களுக்கு நிதி கிடைக்கிறது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயுமாறு அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். துன்பத்திலுள்ள மக்களை ஏமாற்றி பிழைக்கும் இவ்வாறானவர்களால் கத்தோலிக்க மதத்திற்கு இழுக்கு ஏற்படுகிறது.

கத்தோலிக்கர்கள் என்று கூறும் இவ்வாறான அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளுக்கு துணை போகாமல் அவர்களுக்கு ஏமாறாமல் இருக்குமாறும் , தம்மை கிறிஸ்தவர்கள் என்று கூறினாலும் அவர்கள் கத்தோலிக்கத்திற்குள் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுமாறும் கத்தோலிக்க மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

போதகர்கள் எனக் கூறி கத்தோலிக்க மதத்தை இழிவுபடுத்தும் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - பேராயர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பலவந்தமாக ஒரு தொகுதி மக்களின் வழிபாட்டு தலங்களை இடிப்பதும், உரிமை கோருவதும், அவர்களது சுதந்திரத்தை தடுப்பதையும் சேர்த்து  கண்டியுங்கள். வெறும் கத்தோலிக்கத்துக்கு மட்டும் குரல் கொடுப்பது கத்தோலிக்கமாகாது.

எமது அதி உத்தம பேராயர் சிங்கள மக்களுக்கும், பவுத்தர்களுக்கும் குரல் கொடுப்பதில் முன்னிட்ப்பவர் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. உன்னைப்போல உன் அயலனாயும் நேசி என்றுதான் இயேசு கூறினார். அதாவது எல்லோரையும் நேசி என்றுதான் கூறினார். ஆனால் இவரோ உன்னைப்போல உன் இனத்தானையும் (சிங்களவனை)  நேசி என்பதுபோல போதிக்கிறவர். இவர் ஒரு பவுத்த துறவியாக போக வேண்டியவர் இங்கு வந்து விழுந்து விடடார். பாவம் கத்தோலிக்க மக்கள். ஊருக்குத்தான் உபதேசம் உனக்கிலையடி என்பதுபோலதான் இருக்கு இவரது உபதேசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.