Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் யுத்தக் குற்றவாளியில்லை- கமால் குணரட்ண

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் யுத்தக் குற்றவாளியில்லை- கமால் குணரட்ண

நாங்கள் யுத்த குற்றவாளிகள் இல்லை,நான் எனது தேசத்திற்கும் மக்களி;ற்கும் எனது சேவையை செய்துள்ளேன் என பாதுகாப்பு செயலாளர் கமால்குணரட்ண தெரிவித்துள்ளார்.

நான் எனது இளமை முழுவதையும் பயங்கரவாதிகளிற்கு எதிரான போராட்டத்தில் காடுகளில் செலவிட்டதன் காரணமாகவே உங்களால் இன்று சுதந்திரமாக நடமாட முடிகின்றது எனத் தெரிவித்துள்ள கமால் குணரட்ண என்னை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கவேண்டியது அரசாங்கத்தினதும் வெளிவிவகார அமைச்சினதும் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

kamal-guna.jpg

.

நான் எதனை பார்த்தும் அஞ்சவில்லை நான் யுத்த குற்றவாளியல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்து நான் கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால் அது முற்றிலும் nonsense

நான் முழு அர்த்தத்துடனேயே தெரிவிக்கின்றேன் . என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

இதனை விட அதனை வர்ணிப்பதற்கு வேறு வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ள கமால் குணரட்ன அந்த அறிக்கையில் காணப்படும் விடயங்களை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் அவர்கள் எதனடிப்படையில் அந்த முடிவிற்கு வந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனது பெயரும் அறிக்கையில் உள்ளதால் நான் இது குறித்து மேலும் கருத்து கூறவிரும்பவில்லை ஆனால் என்னைப் பொறுத்தவரை அறிக்கை மிகவும் பரிதாபகரமானது, நான் என்ன தெரிவிக்க விரும்புகின்றேன் என்றால் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையும் அதன் ஆணையாளரும் கௌரவமிக்கவர்களாக காணப்பட வேண்டும்,அவர்கள் ஒரு விடயம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது அது கௌரவமானதாகக் காணப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து தரப்பினரையும் அவர்கள் செவிமடுக்க வேண்டும், சிலரை மாத்திரம் செவிமடுத்துவிட்டு அதனை உலகிற்கு வெளியிடுவது – இதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டதாக நான் கருதவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

https://thinakkural.lk/article/110653

 

  • கருத்துக்கள உறவுகள்

அழுது  பலனில்லை road to nandikadal எனும் ஒப்புதல் வாக்கு மூலம் புளுகும்போது தெரிந்து இருக்கனும் .

  • கருத்துக்கள உறவுகள்

கயிறு இறுகுகிறது என்பதை சிங்களம் சிறிதாக உணரத் தொடங்குகிறது. ஐ. நாவுக்கு பாடம் நடத்துகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

அழுது  பலனில்லை road to nandikadal எனும் ஒப்புதல் வாக்கு மூலம் புளுகும்போது தெரிந்து இருக்கனும் .

சட்ட அறிவுரை பெறாமல் அதை பிரிசுரித்திருப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kadancha said:

சட்ட அறிவுரை பெறாமல் அதை பிரிசுரித்திருப்பாரா?

கோத்தாவின் சிங்கள அறிவுசார்அமைப்பு தொடங்குமுன் சிங்கன் வெளியீடு செய்துவிட்டார் நான் இன்னும் படிக்கவில்லை தணிக்கைக்களுக்கு முந்திய பிரதி வெளியில் கசிந்து உள்ளது என்கிறார்கள் அதுதான்  கதறுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

கோத்தாவின் சிங்கள அறிவுசார்அமைப்பு தொடங்குமுன் சிங்கன் வெளியீடு செய்துவிட்டார் நான் இன்னும் படிக்கவில்லை தணிக்கைக்களுக்கு முந்திய பிரதி வெளியில் கசிந்து உள்ளது என்கிறார்கள் அதுதான்  கதறுகிறார். 

தமிழரை வெற்றிகொண்ட அக்களிப்பில் பலர் வெளியிட்ட  வெற்றி கதைகள்  இப்போ வாக்குமூலங்களாக  அவர்களுக்கே எதிராக மாறிவிட்டது. "நுணலும் தன் வாயால் கெடும்."

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

என்னை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கவேண்டியது அரசாங்கத்தினதும் வெளிவிவகார அமைச்சினதும் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்துக்கு நன்றாகத் தெரியும் தாங்கள் இழைத்த குற்றம் என்ன? அதற்கான தண்டனை என்ன என்பது. அதை மறைப்பதற்காகவே இராணுவத்தை நான் காட்டிக்கொடுக்க மாட்டேன் நானே தூக்குக்கயிறை ஏற்பேன் என்று வீர வசனம் பேசி, மக்களை ஏமாற்றி, தன்னை ஓரு தியாகி போல காட்டினார். பதவி இழந்தால் எங்கே தான் சொன்னது நடந்துவிடுமோ என அஞ்சி, மின்சாரக் கதிரைக்கு அனுப்பப் போகிறார்கள் என்று மக்களை கெஞ்சினார். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் அவர்களை காத்தது. மீணடும் தங்களை காத்துக்கொள்ள அந்த அரசாங்கம் நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக் கொடுத்துவிட்டது  என்று கூறி தம்மைப் பாதுகாத்துக்கொண்டதோடு, இராணுவ அதிகாரிகளுக்கு பதவிகளை கொடுத்து அவர்கள் தனக்கு எதிராக கிளம்பாமல் பாத்துக்கொண்டது.  ஆனால் சரியான ஆதாரங்கள் கிடைக்கும்வரை காத்திருந்த ஐ. நா. இப்போது ராஜபக்க்ஷ குடும்பமே இத்தனை குற்றத்துக்கும் பொறுப்பு என நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது. இப்போ உள்ள நிலையில் ஒன்று, பக்க்ஷாக்கள்  குற்றத்தை ஒப்புக்கொண்டு ராணுவத்தை விடுவிக்க வேண்டும். அல்லது இராணுவம் கோத்தாவைக் காட்டிக்கொடுத்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது இப்பிடியிருக்க நம்ம துரோகிகளின்,  எட்டப்பர்களின்  நிலை என்ன? அவர்கள் எதிலும் சேர்க்கப்பட முடியாதவர்கள். துரோகிகளை  சிங்களம் வேண்டுமென்றால் தன் தண்டனையில்  பங்கு போட அழைக்கலாம்,  எட்டப்பர்கள் அரசைக் காப்பாற்ற எல்லா இடங்களிலும் புத்திசாலிகள் போல் மூக்கை நுழைத்து  மூக்குடைபடலாம். 

 

14 hours ago, கிருபன் said:

நான் எனது இளமை முழுவதையும் பயங்கரவாதிகளிற்கு எதிரான போராட்டத்தில் காடுகளில் செலவிட்டதன் காரணமாகவே உங்களால் இன்று சுதந்திரமாக நடமாட முடிகின்றது

கமால் குணரட்னவின் செய்தி தன்னை விடுவிக்க வேண்டும் எனும்  கோரிக்கையாகக் கூட இருக்கலாம்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.