Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை பெறுவதற்காகவே வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது – சி வி விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை பெறுவதற்காகவே வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது – சி வி விக்னேஸ்வரன்

 
1-127-696x377.jpg
 50 Views

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை பெறுவதற்காகவே வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகள் சீனா கம்பெனி ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

அண்மையில் ஒரேநாளில் இரு வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நாளில் அரசானது இரண்டு வேறுபட்ட தீர்மானங்களை எடுத்து ள்ளது கிழக்கு  முனையத்தினைஇந்தியாவிற்கு கொடுக்க முடியாது என அறிவித்துள்ளது.

அதேபோல வடக்கு மாகாணத்தில்உள்ள மூன்று தீவுகளில் நெடுந்தீவு ,அனலைதீவு நயினாதீவு ஆகிய மூன்றையும் சீன கம்பனிக்கு மின்சக்தி தயாரிப்பதற்காக கொடுப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள் இது மிகவும் பாரதூரமான விடயமாகும் முதலாவது இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தினை கொடுக்காமை சம்பந்தமாக இந்தியா  பார்த்துக்கொள்ளும் ஆனால் வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளை கொடுப்பது என்பது எமது வடமாகாண பாதுகாப்பிற்கு மிகவும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது  எனதுகருத்து.

 தற்போதைய அரசானது இந்தியாவிற்கு எதிராக செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காக செயற்படுகின்றார்கள்13 வது   திருத்தச் சட்டத்தின்படி எமது பகுதி காணிகளை ஜனாதிபதி வழங்குவதாக இருந்தால் கூட அது மாகாண சபையின் ஊடாக செய்யப்பட வேண்டும் என்று இருக்கின்றது எனினும் மாகாண சபையுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் அதற்கு பதிலாக ஆளுநரின் ஊடாக அதற்குரிய அனுமதியைப் பெற்று செய்வது மிகவும் சட்டத்திற்கு முரணானது. எமது தமிழ் பிரதிநிதிகளும் இது தொடர்பில் தமது தீர்மானத்தை தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது எதிர்காலத்தில் எமது  சந்ததியினருக்கு இதனால் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய நிலை காணப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து 49 கிலோ மீற்றர் தூரத்திலேஉள்ள தீவுகளை இவ்வாறு வேறு ஒரு நாட்டுக்கு கொடுப்பது என்பது பாரதூரமான விடயமாகும் அதேபோல் இலங்கை அரசானது இதனைதெரியாமல் செய்யவில்லை தெரிந்துகொண்டுதான் செய்கின்றது.

அதாவது ஜெனிவாவில் இந்தியாவினுடைய ஆதரவை தாங்கள் பெறுவதற்காகஇவற்றை நிறுத்துவதாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஜெனிவாவில் நன்மைகள் பெற்று தரவேண்டும் என்ற  அடிப்படையிலும் இவற்றை செய்கின்றார்கள் என்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என மேலும் தெரிவித்தார்.

 

https://www.ilakku.org/?p=42196

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் குடிம்பி ஏற்கனவே இலங்கையின் பிடியில், இப்போ சீனாவும்...... 😂

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, உடையார் said:

ஜெனிவாவில் இந்தியாவினுடைய ஆதரவை தாங்கள் பெறுவதற்காகஇவற்றை நிறுத்துவதாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஜெனிவாவில் நன்மைகள் பெற்று தரவேண்டும் என்ற  அடிப்படையிலும் இவற்றை செய்கின்றார்கள்

காரியம் முடிந்தவுடன் சிங்களவன் மக்களை உசுப்பேத்தி, எல்லாவற்றையும் பிரட்டிபோடுவான். இந்தியா முறுக்கிப்போட்டு அடங்கவேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.