Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கடத்தல் - பயங்கரவாதிகள் அட்டூழியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கடத்தல் - பயங்கரவாதிகள் அட்டூழியம்

நைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கடத்தல் - பயங்கரவாதிகள் அட்டூழியம்

நைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றுள்ளனர்.
பதிவு: பிப்ரவரி 26,  2021 15:54 PM
அபுஜா,

நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ.எஸ்,  பண்டிட்ஸ், போகோ ஹராம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.


இதற்கிடையில், பயங்கரவாதிகள் அவ்வப்போது பள்ளிக்கூடங்களுக்குள் நுழைந்து அங்கு கல்வி பயின்று வரும் மாணவ\மாணவிகளை கடத்தி சென்று அவர்களை பயங்கரவாத செயல்களுக்கும், பிணைகைதிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியின் சம்ஃபரா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவிகள் தங்குவதற்கான விடுதி பள்ளிக்கூடத்திற்கு அருகே அமைந்துள்ளது. அந்த விடுதிக்குள் இன்று ஆயுதங்களுடன் நுழைந்த பண்டிட்ஸ் பயங்கரவாதிகள் குழுவினர் அங்கு தங்கி இருந்த பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை கடத்திச்சென்றுள்ளனர்.

பள்ளிமாணவிகள் கடத்தப்பட்ட சம்பவத்தை சம்ஃபரா மாகாண கவர்னரின் செய்தித்தொடர்பாளர் ஜிலானி பப்பா உறுதி செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

https://www.dailythanthi.com/News/TopNews/2021/02/26155429/Kidnappers-abduct-schoolchildren-in-northwest-Nigeria.vpf

 

 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்

 
1-239.jpg
 18 Views

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

நைஜீரியாவில் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 317 மாணவிகளைத் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.  முன்னதாக, கடந்த வாரம் நைகர் மாகாணத்தின் காகரா நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒரு மாணவரைச் சுட்டுக் கொன்று, 40 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களைக் கடத்திச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், “நைஜீரியாவில் பள்ளி மாணவிகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதைக் கண்டு நாங்கள் வருத்தம் அடைந்துள்ளோம். டிசம்பர் மாதத்திலிருந்து இது மூன்றாவது கடத்தல் சம்பவம். இது குழந்தைகள் மீது செலுத்தப்படும் பயங்கரமான வன்முறை. அவர்கள் மனநிலை மிகவும் பாதிக்கப்படக் கூடும். கடத்தப்பட்ட மாணவிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் எந்தவிதத் துன்புறுத்தலும் இல்லாமல் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியா நாட்டில் கடந்த சில வருடங்களாகவே தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

2002-ல் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட போகோ ஹராம் தீவிரவாதிகள், இதுவரை சுமார் 27,000 பேரைக் கொன்றுள்ளனர். இதனால் 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=43301

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நைஜீரியா: பள்ளி மாணவிகள் 300 பேர் கடத்தல்; அதிர்ச்சியில் பெற்றோர்கள்! - என்ன நடக்கிறது?

மாணவிகள் கடத்தல்

மாணவிகள் கடத்தல்

``நாங்கள் எங்கள் குழந்தைகளை மீட்கப் போகிறோம், ஏனெனில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசாங்கம் தயாராக இல்லை. எங்கள் குழந்தைகளை கடத்திச் சென்றுள்ளார்கள். நாங்கள் அனைவரும் அவர்களை காட்டுக்குள் பின்தொடர முடிவு செய்துள்ளோம்”

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கிராமத்திற்குள் புகுந்து பொதுமக்களை கொன்று குவிப்பதோடு, பள்ளி மாணவ மாணவிகளை கடத்திச் சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாழக்கமாக கொண்டுள்ளனர்.

வடமேற்கு நைஜீரிய மாநிலமான ஜம்பாராவில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் வகுப்பறைக்குள் புகுந்து 317 பள்ளி மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளதாக காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஜம்பேரா மாநில தகவல் ஆணையர் சுலைமான் தனவ் அன்கா, பத்திரிகையாளர்களிடம், ``பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் வந்து… சிறுமிகளை கடத்திச் சென்றுள்ளனர். எனக்கு கிடைத்த தகவல்படி அவர்கள் வாகனங்களுடன் வந்து மாணவர்களை கடத்திச் சென்று உள்ளார்கள். சம்பவம் நடந்த பகுதியிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்" என்று கூறினார்.

நைஜீரியா: பள்ளி மாணவிகள் 300 பேர் கடத்தல்; அதிர்ச்சியில் பெற்றோர்கள்! - என்ன நடக்கிறது?
 

ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் நிதியம் (யுனிசெஃப்), 300க்கு மேற்பட்ட சிறுமிகள் கடத்தப்பட்டு உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் யுனிசெஃப் நைஜீரிய பிரதிநிதி பீட்டர் ஹாக்கின்ஸ், "பயங்கரவாதிகள், சிறுமிகளை கடத்திய சம்பவம், கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் மீது மற்றொரு மிருகத்தனமான தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளோம்" என்றார்.

ஜம்பரா மாநிலத்தில் உள்ள ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் அறிவியல் மேல்நிலைப்பள்ளியில் அதிகாலை 1 மணி அளவில் சந்தேகத்திற்கிடமான கும்பல் தங்கியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

காவல்துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஷெஹு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்பாரா மாநில காவல் படை, இராணுவத்துடன் இணைந்து அரசு பெண்கள் அறிவியல் மேல்நிலைப் பள்ளியில் பயங்கரவாதிகளால் ஆயுத முனையில் கடத்தப்பட்ட 317 மாணவர்களை மீட்கும் நோக்கில் தேடும் வேட்டை மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரக்தியில் மக்கள் :-

கடத்தப்பட்ட மாணவிகளில் தனது இரு மகள்களும் இருப்பதாக பெற்றோர் ஒருவர் கூறியுள்ளார், "10 மற்றும் 13 வயது உடைய எனது மகள்கள் இருவரும் கடத்தப்பட்டு உள்ளார்கள். எனது இரு குழந்தைகளையும் ஒரே நேரத்தில் பிரிந்து தவித்து வருகிறேன்" என்றார்.

நைஜீரியா: பள்ளி மாணவிகள் 300 பேர் கடத்தல்; அதிர்ச்சியில் பெற்றோர்கள்! - என்ன நடக்கிறது?
 
Ibrahim Mansur

அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகள் மீது கோபத்தில் உள்ளார்கள். அதன் வெளிப்பாடாக அவர்கள் எந்த அரசு அதிகாரிகளின் பேச்சையும் கேட்காமல் அங்கு வரும் வாகனங்களில் கற்களை வீசி தாக்கி வருகிறார்கள்.

மேலும் கடத்தபட்ட மாணவியின் தந்தை ஒருவர் கூறுகையில், "நாங்கள் எங்கள் குழந்தைகளை மீட்கப் போகிறோம், ஏனெனில் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசாங்கம் தயாராக இல்லை. எங்கள் குழந்தைகளை கடத்திச் சென்றுள்ளார்கள். நாங்கள் அனைவரும் அவர்களை காட்டுக்குள் பின்தொடர முடிவு செய்துள்ளோம். நாங்கள், எங்கள் குழந்தைகளை மீட்கும் வரை இப்போது யார் பேச்சையும் கேட்க மாட்டோம்" என்றார்.

கடந்த மூன்று மாதங்களுக்குள் நைஜீரியாவின் மூன்றாவது பள்ளி தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதல் சம்பவம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மிகவும் ஆபத்தானது என்று கருதுகிறார்கள்.

 

https://www.vikatan.com/news/international/gunmen-kidnap-over-300-girls-in-nigeria-school

  • கருத்துக்கள உறவுகள்

நைஜீரியாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட சுமார் 300 மாணவிகள் விடுவிப்பு

வடமேற்கு நைஜீரிய மாநிலமான ஜம்பாராவில் உள்ள ஒரு உறைவிடப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 300 சிறுமிகளை கடத்தல்காரர்கள் பாதுகாப்பாக விடுவித்துள்ளதாக மாநில ஆளுநர் உறுதிபடுத்தியுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

zamfara.jpg

அதன்படி ஜம்பாரா ஆளுநர் பெல்லோ மாதவல்லே,  மாணவர்கள் அதிகாரிகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எவ்வித பணமும் செலுத்தப்படவில்லை என்று செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.

மேலும் மீட்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

ஜம்பரா மாநிலத்தின் தொலைதூர ஜங்கேபே கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை படாசாலையில் 100 க்கும் மேற்பட்ட துப்பாக்கிதாரிகள் நடத்திய சோதனையில் 317 சிறுமிகள் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஆனால் கடத்தப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 279 என்று மாதவல்லே அல் ஜசீராவிடம் கூறியுள்ளார்.

வடமேற்கு மற்றும் மத்திய நைஜீரியாவில் கடுமையாக ஆயுதமேந்திய குற்றவியல் கும்பல்கள் சமீபத்திய ஆண்டுகளில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன. 

நைஜீரிய இராணுவம் 2016 ஆம் ஆண்டில் இப்பகுதிக்கு அனுப்பப்பட்டது மற்றும் கொள்ளைக்காரர்களுடன் சமாதான ஒப்பந்தம் 2019 இல் கையெழுத்திட்டனது. ஆனால் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறுகின்றன.
 

 

https://www.virakesari.lk/article/101431

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.