Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலில் இருந்து விலகிய சசிகலா: தி.மு.க-வுக்கு லாபமா... நஷ்டமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சசிகலா கொடுத்திருக்கும் அறிக்கையிலும், பொது எதிரியான தி.மு.க.வை வீழ்த்த ஒற்றுமையாக இருக்குமாறு குறிப்பிட்டிருக்கிறார். இதன் அர்த்தம், அ.ம.மு.க. தொண்டர்களும், முக்குலத்தோரும் அ.தி.மு.க-வுக்கே வாக்களியுங்கள் என்றுதான் பொருள் கொள்கிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலின்போது எதிர்பார்க்காத பல தரமான சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. கடந்தாண்டு இறுதியில் ரஜினி அரசியலில் அடியெடுத்து வைக்காமலேயே, விலகிச்சென்றார். இந்தாண்டு மார்ச்சில் சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். இது ஒருபக்கம் அ.தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க.வுக்கும் இடி என்றாலும், தி.மு.க.வுக்கு இது இடி செய்தியா... இல்லை, கொண்டாடித்தீர்க்கும் வெடி செய்தியா?

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
 
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

இதுகுறித்து தி.மு.க.வினரிடம் பேசுகையில், “தனியாகவோ, சேர்ந்தோ, எங்களை எதிர்த்துப் போட்டியிட்டாலும் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. அத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 30 சதவிகித வாக்குகளையும், தி.மு.க. கூட்டணி 52 சதவிகித வாக்குகளை பெற்றது. அ.ம.மு.க. தனித்துப் போட்டியிட்டு 5.5 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஒருவேளை 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் ஒன்றாக இணைந்தாலும் கூட 35 சதவிகிதமாக சற்று உயரும். ஆனால், தி.மு.க.வின் 52 சதவிகித வாக்குகளில் இருந்து இறக்கம் கண்டிப்பாக இருக்காது.

சசிகலா-ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி
 
சசிகலா-ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒன்றாக இருந்த சமயத்தில் முக்குலத்தோர் லாபியில் இயங்கிவந்த அ.தி.மு.க., எடப்பாடியார் முதல்வரானதும் கவுண்டர் டாமினண்டுக்கு போய்விட்டது. ஏற்கனவே, தலையில் கைவைத்து ஆசீர்வதித்த மோடி, சசிகலாவை சிறையில் அடைத்து சோதனை கொடுத்தார் என்பதில் முக்குலத்தோர் சமூகம் பா.ஜ.க. மீதும், அ.தி.மு.க. மீதும் கோபத்தில் உள்ளது. தற்போது அதே இருவர் சேர்ந்து விடுதலையான சசிகலாவை ஒதுங்க வைத்துவிட்டதால், இன்னும் அதிக கோபத்தில் இருக்கின்றது முக்குலத்தோர் சமூகம். இது தேர்தலில் எதிரொலிக்கும் வகையில் எந்த ஒரு முக்குலத்தோரும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆட்சி இல்லையென்றாலும், கட்சியாவது நம்மிடம் கிடைக்க வேண்டும் என எண்ணத்தில் தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள்!” என்றார்கள்.

தி.மு.க. சீனியர் நிர்வாகி ஒருவர் நம்மிடம், “சசிகலா விடுதலையாகி வந்ததில் தி.மு.க.தான் குஷியாக இருந்தது. அ.தி.மு.க. ஒருபக்கம் கூட்டணி போட்டு போட்டியிடும், அ.ம.மு.க. ஒருபக்கம் சிறு கட்சிகளை இணைத்துக்கொண்டு போட்டியிடும், இடையில் சசிகலா புகுந்து தான் தான் உண்மையான அ.தி.மு.க. என பிரசாரம் மேற்கொள்வார், இதனால் டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், அ.தி.மு.க.வின் வாக்குகள் மிகப்பெரிய அளவுக்கு பிரியும், இதன்மூலம் எளிதாக ஜெயித்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், என்ன விலை கொடுத்தேனும் எங்களை ஆட்சியமைக்க விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் பா.ஜ.க., சசிகலாவுக்கு நெருக்கடி கொடுத்து ஒதுங்க வைத்துவிட்டது.

சசிகலா கொடுத்திருக்கும் அறிக்கையிலும், பொது எதிரியான தி.மு.க.வை வீழ்த்த ஒற்றுமையாக இருக்குமாறு குறிப்பிட்டிருக்கிறார். இதன் அர்த்தம், அ.ம.மு.க. தொண்டர்களும், முக்குலத்தோரும் அ.தி.மு.க-வுக்கே வாக்களியுங்கள் என்றுதான் பொருள் கொள்கிறது. திகரனுக்கு வாக்களிக்கச் சொல்லாமல், அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கச் சொல்லும்போதே சசி எந்தளவு நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் என்பது புரிகிறது. இதனால் ஓட்டு பிரியாமல் அ.தி.மு.க.வுக்கு விழுந்துவிட்டால், தி.மு.க.வுக்கு கொஞ்சம் சறுக்கல் ஏற்படத்தான் செய்யும்” என்றார்.

அரசியலில் இருந்து விலகிய சசிகலா: தி.மு.க-வுக்கு லாபமா... நஷ்டமா? | will Sasikala's decision benefit DMK? - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

ஏற்கனவே, தலையில் கைவைத்து ஆசீர்வதித்த மோடி, சசிகலாவை சிறையில் அடைத்து சோதனை கொடுத்தார் என்பதில் முக்குலத்தோர் சமூகம் பா.ஜ.க. மீதும், அ.தி.மு.க. மீதும் கோபத்தில் உள்ளது. தற்போது அதே இருவர் சேர்ந்து விடுதலையான சசிகலாவை ஒதுங்க வைத்துவிட்டதால், இன்னும் அதிக கோபத்தில் இருக்கின்றது முக்குலத்தோர் சமூகம்.

இதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் எவ்வளவு சாதி வெறி உள்ளது என்பது தெரிகிறது.
சாதி பார்பதை society என்று கவுரபெயர் கொடுத்து விட்டார்களே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.