Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னை அம்பிகை உணவுத்தவிர்ப்புப் போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது

Featured Replies

22 hours ago, பெருமாள் said:

நீங்கள்  சொல்வது இரண்டுதரப்பும் பொறுப்பற்று நடந்து கொண்டது ஓகே ஆனால் அப்படி நடக்க வைத்தவர்களும் இதே அனுசாரணையாக இருந்தவர்களுமே என்பதை நாம் மறந்து விடலாகாது  பழைய கதைகள் திரும்ப திரும்ப சொல்வதால் எதுவும் வரப்போவதில்லை ஆனால் எமது விடயத்தில் தோல்வியடைந்த அனுசாரணையாக இருந்தவர் மீண்டும் மீண்டும் தென்னாசியவின் முக்கிய காலகட்டங்களில் வந்து கருத்துக்களை கூறுவதேன் ? இங்கு ஒரு விடயத்தில் தோல்வி அடைந்தால் கேட்டு கேள்வியின்றி பொது வாழ்க்கையில் இருந்து நேரே வீடுதான் யூரோ பிரிட்டன் பிளவு விடயத்தில் டேவிட் மக்ரோன் தோல்வியை ஒத்துக்கொண்டு வீடு போனார் அதேபோல் அதே விடயத்தில் டெரசே மே  அம்மையார் முயன்று பார்த்தார் முடியவில்லை நேரே வீடுதான் இவர்கள் பிரதமர் பதவியில் இருந்து விடைபெற்ற  பின் இந்த பிரிக்ஸ்ட்  சம்பந்தமாய் வாய் துறப்பதில்லை அதுதான் பண்பாடு இப்படியான மேட்குலகின் நிலை இருக்க அதே இடத்தில் இருந்து வந்த எரிக் படு தோல்வியான நிலைக்குப்பிறகும் எமது விடயத்தில் அவ்வப்போது தேவையற்ற கருத்துக்கள் வைப்பது உங்களுக்கு வலிக்காது ஆனால் முள்ளிவாய்க்காலில் நின்றவனுக்கு வலிக்கும் .

எம்மை பொறுப்பற்றவர்களாக அடுத்தவன் ஆக்கினான் என்று கூறுவதே மிகபெரிய நகைச்சுவை.  எரிக் சோல்கஹைம் ஒரு அனுசரணையாகளாக தான் தனது பங்கை வகித்தார். அவர் மத்தியஸ்ர‍ர் அல்ல. பேச்சுவாரத்தை நடத்திய இரு தரப்பினர் மீதும் தனது அதிகாரத்தை செலுத்தும்  நிலை அங்கு இருக்கவில்லை.அவ்வாறு அவர் செய்ய முற்படவும் இல்லை. பேச்சுவார்த்தைகளில் அனைத்து முடிவுகளையும் சம்பந்தப்ட்ட இரு தரப்பினருமே எடுத்தனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி என்பது சம்பந்தபட்ட இரு தரப்பினருக்குமான தோல்வியே தவிர அனுசரணையாளரின் தோல்வி அல்ல. நீங்கள் கூறிய பிரிட்டன் அரசியல் பண்பாட்டை கடைப்பிடிப்பதானால் உண்மையில் முடிவுகளை எடுத்த தரப்புகள் தான் தோல்விக்கான பொறுப்பை ஏற்று வீட்டுக்கு செல்லவேண்டும்.  பொறுப்புடன் நடந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் நின்ற மக்களுக்கு வலித்திருக்காது. 

பத்திரிகளையாளர்களை கேள்வி எழுப்பும்போதும் Zoom Conference ல் அழைத்தவர்கள் கேள்வி எழுப்பும்போதும் அதற்கு பதில் கூறும் உரிமை அவருக்குண்டு. உலக அரசியலை புரிந்து கொள்ள விரும்பாமல்  எமது தவறான அரசியலால் நாமே எமது தலையில் மண் அள்ளிப்போட்ட எமக்கு அவர் கருத்து கூறுவதால் எமக்கு எந்த நட்டமும் வரப்போவிதில்லை. 

என்னைப்பொறுத்தவரை மேற்குலகு செய்த பெரிய  தவறு இரு தரப்பின்  மீதும் பாரிய அழுத்த‍த்தை பிரயோகித்து  ஒரு நடைமுறை சாத்தியமான தீர்வை ஏற்றுக்கொள்ள நிர்பந்திருக்கவேண்டும்.  அன்று அதை அவர்கள் செய்திருந்தால்  இரு தரப்பும் வாலை சுருட்டிக்கொண்டு பொஸ்னியா போல் ஒரு தீர்வுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும். பொஸ்னியாவில் அப்படி தான் நடைபெற்றது.  

 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

எம்மை பொறுப்பற்றவர்களாக அடுத்தவன் ஆக்கினான் என்று கூறுவதே மிகபெரிய நகைச்சுவை.  எரிக் சோல்கஹைம் ஒரு அனுசரணையாகளாக தான் தனது பங்கை வகித்தார். அவர் மத்தியஸ்ர‍ர் அல்ல. பேச்சுவாரத்தை நடத்திய இரு தரப்பினர் மீதும் தனது அதிகாரத்தை செலுத்தும்  நிலை அங்கு இருக்கவில்லை.அவ்வாறு அவர் செய்ய முற்படவும் இல்லை. பேச்சுவார்த்தைகளில் அனைத்து முடிவுகளையும் சம்பந்தப்ட்ட இரு தரப்பினருமே எடுத்தனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி என்பது சம்பந்தபட்ட இரு தரப்பினருக்குமான தோல்வியே தவிர அனுசரணையாளரின் தோல்வி அல்ல. நீங்கள் கூறிய பிரிட்டன் அரசியல் பண்பாட்டை கடைப்பிடிப்பதானால் உண்மையில் முடிவுகளை எடுத்த தரப்புகள் தான் தோல்விக்கான பொறுப்பை ஏற்று வீட்டுக்கு செல்லவேண்டும்.  பொறுப்புடன் நடந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் நின்ற மக்களுக்கு வலித்திருக்காது. 

பத்திரிகளையாளர்களை கேள்வி எழுப்பும்போதும் Zoom Conference ல் அழைத்தவர்கள் கேள்வி எழுப்பும்போதும் அதற்கு பதில் கூறும் உரிமை அவருக்குண்டு. உலக அரசியலை புரிந்து கொள்ள விரும்பாமல்  எமது தவறான அரசியலால் நாமே எமது தலையில் மண் அள்ளிப்போட்ட எமக்கு அவர் கருத்து கூறுவதால் எமக்கு எந்த நட்டமும் வரப்போவிதில்லை. 

என்னைப்பொறுத்தவரை மேற்குலகு செய்த பெரிய  தவறு இரு தரப்பின்  மீதும் பாரிய அழுத்த‍த்தை பிரயோகித்து  ஒரு நடைமுறை சாத்தியமான தீர்வை ஏற்றுக்கொள்ள நிர்பந்திருக்கவேண்டும்.  அன்று அதை அவர்கள் செய்திருந்தால்  இரு தரப்பும் வாலை சுருட்டிக்கொண்டு பொஸ்னியா போல் ஒரு தீர்வுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும். பொஸ்னியாவில் அப்படி தான் நடைபெற்றது.  

 

 

உங்களுக்கு நான் சொல்லி புரியவைக்க முடியாது  கீழே குணாவின் அனுமதியுடன் போனவருடம் 18 டிசம்பரில் அவருடைய ஆக்கம்  ஒன்று .

https://www.youtube.com/watch?v=JID2glWo9P4

https://youtu.be/JID2glWo9P4

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

எம்மை பொறுப்பற்றவர்களாக அடுத்தவன் ஆக்கினான் என்று கூறுவதே மிகபெரிய நகைச்சுவை.  எரிக் சோல்கஹைம் ஒரு அனுசரணையாகளாக தான் தனது பங்கை

குணாவின் கருத்துக்களை பார்த்து  இருப்பீர்கள் இப்ப விளங்கி இருக்கும் எரிக் இன்  உண்மை முகம் போருக்கு பின் அங்குள்ளவர்களையும்  இங்குள்ளவர்களையும் உணர்ச்சி அரசியல் செய்ய சொல்லி தூண்டுபவர்கள்தான் எமது விடயத்தில் முதன்மை குற்றவாளிகள் இப்படியானவர்களிடம் தான் உங்கள் கேள்வியும் கோபமும் தர்க்கமும் இருக்கனும் அதைவிட்டு ............................

9 hours ago, பெருமாள் said:

குணாவின் கருத்துக்களை பார்த்து  இருப்பீர்கள் இப்ப விளங்கி இருக்கும் எரிக் இன்  உண்மை முகம் போருக்கு பின் அங்குள்ளவர்களையும்  இங்குள்ளவர்களையும் உணர்ச்சி அரசியல் செய்ய சொல்லி தூண்டுபவர்கள்தான் எமது விடயத்தில் முதன்மை குற்றவாளிகள் இப்படியானவர்களிடம் தான் உங்கள் கேள்வியும் கோபமும் தர்க்கமும் இருக்கனும் அதைவிட்டு ............................

எரிக் சோல்ஹைம்  தனிப்பட எந்த முடிவுகளையும் எடுக்க முடியாத சாதாரண அனுசரணையாளராக செயற்பட்டதும் இணை தலைமை நாடுகளை மீறி எதுவும் செய்ய முடியாதவர்  என்பதை விளங்கி கொள்ள ஒரு ஆய்வாளர் தேவையில்லை. சாதாரண மனிதரின் சாதாரண அறிவே அதற்கு போதும். 

எரிக் என்ற தனி மனிதர் மீது பழி போட்டு தப்பிக்கும் தேவை புலம்பெயர் சில தேசிய(என்று கூறும்) குழுக்களிடம் இருக்கலாம். அப்படி அவர் மீது பழி போடுவது அவர்களின் குறுகிய  அரசியல் தேவையாக இருக்கலாம். ஆனால் அதனால் தமிழ் மக்களுக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை. 

சர்வதேசத்தில் எமக்கு சாதகமான இருக்கும் சிறு சிறு துரும்புகளை எனினும் பற்றி பிடித்து  அதை சிறிது சிறிதாக பலப்படுத்தி இலங்கை தீவில் தமிழ் மக்களின் இருப்பையேனும் தக்கவைக்க வேண்டிய நிலையிலேயே  உள்ளோம் என்ற புரிதலும் பொறுப்புணர்வும் தமிழ் மக்களுக்கா அரசியல் செய்கிறோம் என்று கூறும் குழுக்கள் அரசியல் கட்சிக்களுக்கு வேண்டும் என்பதே எனது கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

எரிக் சோல்ஹைம்  தனிப்பட எந்த முடிவுகளையும் எடுக்க முடியாத சாதாரண அனுசரணையாளராக செயற்பட்டதும் இணை தலைமை நாடுகளை மீறி எதுவும் செய்ய முடியாதவர்  என்பதை விளங்கி கொள்ள ஒரு ஆய்வாளர் தேவையில்லை. சாதாரண மனிதரின் சாதாரண அறிவே அதற்கு போதும். 

எரிக் என்ற தனி மனிதர் மீது பழி போட்டு தப்பிக்கும் தேவை புலம்பெயர் சில தேசிய(என்று கூறும்) குழுக்களிடம் இருக்கலாம். அப்படி அவர் மீது பழி போடுவது அவர்களின் குறுகிய  அரசியல் தேவையாக இருக்கலாம். ஆனால் அதனால் தமிழ் மக்களுக்கு ஆகப்போவது ஒன்றும் இல்லை. 

சர்வதேசத்தில் எமக்கு சாதகமான இருக்கும் சிறு சிறு துரும்புகளை எனினும் பற்றி பிடித்து  அதை சிறிது சிறிதாக பலப்படுத்தி இலங்கை தீவில் தமிழ் மக்களின் இருப்பையேனும் தக்கவைக்க வேண்டிய நிலையிலேயே  உள்ளோம் என்ற புரிதலும் பொறுப்புணர்வும் தமிழ் மக்களுக்கா அரசியல் செய்கிறோம் என்று கூறும் குழுக்கள் அரசியல் கட்சிக்களுக்கு வேண்டும் என்பதே எனது கருத்து. 

 

12 hours ago, பெருமாள் said:

போருக்கு பின் அங்குள்ளவர்களையும்  இங்குள்ளவர்களையும் உணர்ச்சி அரசியல் செய்ய சொல்லி தூண்டுபவர்கள்தான் எமது விடயத்தில் முதன்மை குற்றவாளிகள் 

இங்கு சொல்லப்படும் விடயம் போருக்கு பின் அந்த மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கைதான் வேணும் இப்பவும் வந்து போராடுங்க என்று சொல்லும் எரிக் மீது உங்கள் கேள்விகளை வைப்பது அழகு அதைவிட்டு எரிக்கின்  உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுபவர்கள் மீதல்ல .

ஏன் போராடுங்க என்று எரிக் கேட்க்கிறார் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.