Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசறை விபத்தில் பஸ் சாரதி உட்பட 9 ஆண்களும் 6 பெண்களும் பலி;இருவர் கவலைக்கிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பசறை விபத்தில் பஸ் சாரதி உட்பட 9 ஆண்களும் 6 பெண்களும் பலி;இருவர் கவலைக்கிடம்

பதுளை- செங்கலடி வீதி 13ஆவது மைல்கல் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் பதுளை மாகாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பசறை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் வைத்திய அதிகாரி கே.எம். சமரபந்து தெரிவித்தார்.

accident-bus.jpg

விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 6 பெண்களும் அடங்குகின்றனர். பதுளை மாகாண வைத்தியசாலையில் 16 ஆண்களும், 14 பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 9பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 2அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

1616211069-bus-accidenta-2.jpgவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விசேட வைத்திய குழுக்களும், சுகாதார குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக 8 அம்பியூலன்ஸ் வண்டிகள் சேவையிலுள்ளன.

சீசி டிவி காட்சிகளின் படி எதிர்த்திசையில் வந்த டிப்பர் ரக வாகனத்தை தாண்டிச் செல்ல முற்பட்ட வேளையிலே பஸ் வண்டி வீதியை விட்டு விலகி 200அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் பஸ்ஸின் சாரதியும் உயிரிழந்துள்ளார். பசறை பொலிஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

https://thinakkural.lk/article/115387

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பசறை விபத்து சாரதி கைது! ஊவாவில் ஒன்றரை வருட காலப் பகுதியில் 30 வாகன விபத்துகள்!

March 21, 2021

1 Min Read

Pasarai.jpg

பசறை பகுதியில் நேற்று காலை (20.03.21) இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிப்பர் வாகனத்தின் ஓட்டுநரே இவ்வாறு கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், ஊவா மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் 30 வாகன விபத்துகள் இடம்பெற்றிருப்பதாகவும் காவற்துறை ஊடக பேச்சாளரான பிரதிப் காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளா ர்.

கவனயீனமாக வாகனங்களை செலுத்துதல் மற்றும் பஸ் வண்டிகளுக்கு இடையில் போட்டித் நிலைமைகளினால் விபத்துக்கள் சம்பவிப்பதாக பிரதி காவற்துறை மா அதிபர்அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

கவயீனத்துடன் சாரதி வாகனத்தை செலுத்தியமையே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவித்த அவர், விபத்து நடந்த இடத்திற்கு அருகிலிருந்த உடல் மற்றும் சுற்றுச்சூழல் சான்றுகள் ஓட்டுநரால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதைக் காட்டுகின்றது எனவும், இவ்வாறான வாகன விபத்துக்கள் நெருக்கடியாக அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொனராகலை – பதுளை வீதியில் 13 ஆவது மைல்கல் என்ற இடத்தில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 33 பேர் காயமடைந்திருப்பதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 30 பேர் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக பதுளை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கருணாரட்ன குறிப்பிட்டார்.

அவர்களில் 16 பேர் பெண்களாவர். காயமடைந்த 14 ஆண்களும், காயமடைந்தவர்களில் ஐந்து பிள்ளைகளும் அடங்குவர். பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் 03 சிறார்களும் அடங்குகின்றனர்.

பலத்த காயமடைந்த இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார். 7 பேர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் சாரதி தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்

பசறை லுணுகலை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இதேவேளை நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்காக தலா 55 000 ரூபா ஆயிரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் 30 ,000 ஆயிரம் ரூபாவை ஊவா மாகாண ஆளுநர் அலுவலகமும் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் வழங்கவுள்ளன. இதற்கு மேலுதிகமாக தலா 30 ,000 ஆயிரம் ரூபா வீதம் இறுதி சடங்கு செலவுக்காக வழங்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த பஸ் எதிரே வந்த லொரியொன்றை கடந்த செல்ல முற்பட்ட போது வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

https://globaltamilnews.net/2021/158336/

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்த பஸ் எதிரே வந்த லொரியொன்றை கடந்த செல்ல முற்பட்ட போது வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

ஒரு செய்தியை போட தெரியாதவர்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.