Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

83 இனப் படுகொலைக்கே மன்னிப்பு கேட்காத போது சிலரை வெளியேற்றியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமா?: பெர்னாண்டோபுள்ளே.

Featured Replies

83 இனப் படுகொலைக்கே மன்னிப்பு கேட்காத போது சிலரை வெளியேற்றியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமா?: பெர்னாண்டோபுள்ளே.

1983 ஆம் ஆண்டு தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்காக அரசாங்கமோ அல்லது சிங்களவரோ மன்னிப்புக் கேட்கவில்லை. அப்படியான நிலையில் தற்போது சில தமிழர்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்காக ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகிந்தவின் அமைச்சரான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் முஸ்லிம் ஊடக மையத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை நான் ஆதரிக்கவில்லை.

ஒரு தனியரசு கேட்கும் சிறுபான்மை இனத்துக்கு மிகச் சிறிய மாவட்ட அளவிலான சபை அதிகாரத்தை முன்வைப்பது என்பது இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தாது. இந்திய இணைப்பாட்சி முறை இங்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இந்திய இணைப்பாட்சி முறையை அறிமுகப்படுத்துவதால் இனப் பிரச்சினைக்குத் தீர்வு மட்டுமல்ல- இந்தியாவும் நமக்கு உத்தரவிட்டுக் கொண்டிருக்காது. இந்தியாவும் நமக்கு உதவக்கூடிய நிலைமை உருவாகும். இருப்பினும் இது தொடர்பில் சுதந்திரக் கட்சிக்கு எதிராக வாக்களிக்கமாட்டேன்.

நான் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன் என்று அழுத்தமாகக் கூறுகிறேன். ஜே.வி.பி. போன்றவைகள்தான் நாட்டின் ஒட்டும்மொத்த பிரச்சினைகளுக்குமே காரணம்.

மகிந்த அரசாங்கமானது விடுதலைப் புலிகள் தொடர்பில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்வதால் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றம் போன்றவை நிகழ்கின்றன. இவை நிகழ்ந்தாலும் அதன் மூலமாக கொழும்பில் உள்ள அனைவருமே அச்சமின்றி வாழ முடிகிறது.

நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் குறிப்பிட்ட மக்கள் குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடபகுதியில் சிங்களவரால் வாழ முடியுமா? எங்கும் எவரும் வாழலாம் என்பது கடுமையாக மீறப்பட்டுள்ளது. ஆனால் சில தமிழர்களை வெளியேற்றினால் அரசாங்கம் மிகக் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகிறது. இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

1983 ஆம் ஆண்டு இனப்படுகொலைகளுக்காக அரசாங்கமோ அல்லது சிங்களவரோ மன்னிப்புக் கேட்டனரா? இப்போது மட்டும் ஏன் கேட்க வேண்டும்?

சிறிலங்கா அரசாங்கம் பைத்தியக்காரர்களால் நடத்தப்படுவதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார். இப்படியான தரம் தாழ்ந்த சொல்லாடல்களை அவர் எப்படிப் பயன்படுத்தலாம்?

சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் இல்லை என்கிறார்கள். ஊடக சுதந்திரம் இருப்பதால்தான் ஊடகங்கள் நாளிதழ்களை வெளியிட்டு வருகின்றன என்றார் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் குறிப்பிட்ட மக்கள் குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடபகுதியில் சிங்களவரால் வாழ முடியுமா? எங்கும் எவரும் வாழலாம் என்பது கடுமையாக மீறப்பட்டுள்ளது. ஆனால் சில தமிழர்களை வெளியேற்றினால் அரசாங்கம் மிகக் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகிறது. இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

வடக்குக் கிழக்கு முழுக்க தமிழரின் நிலத்தை அத்துமீறி ஆக்கிரமித்துக் குடியேறிய பிறகுமா இக்கேள்வியை ஜெயராஜ் பெனாண்டோப்பிள்ளை கேட்கின்றார். அதை விடப் புலிகள் பயங்கவாத இயக்கம் என்கின்றீர்்கள். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தோடு உங்களின் அரசைச் சமாந்தரமாகக் கதைப்பதன் மூலம், உங்கள் அரசும் பயங்கவாத அரசு என்பதை ஏற்கின்றீர்களா? இது மகிந்தவிற்கு உள்ளுக்குள் இருந்து குழி பறிக்கும் செயலாகத் தோன்றினால், அவர் பயங்கவாதியாக மாறிடக் கூடும். அவதானம்.

83 இல், ஐதேக செய்த செயலுக்கு மன்னிப்புக் கேட்டதாக என்பதல்ல பிரச்சனை. அதைத் தமிழர்கள் மன்னிக்கவில்லை. அது போலத் தான் இன்று மக்களைத் துரத்திய செயற்பாட்டை ஐதேகவுடனான அரசியல் விளையாட்டாகவே பார்க்கின்றீர்களே தவிர, துரத்தப்பட்ட மக்களை மந்தைக் கூட்டம் போல உங்கள் அரசு அடைத்துக் கொண்டு அலைக்கழித்ததைப் பற்றி ஒரு கவலை கூட உமக்கு வரவில்லை என்பது சிங்கள அடிவருடி நீர் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றது

ஆளாளுக்கு தேவைக்கேற்றபடி அவலங்களைத் தோற்றுவித்து ஆட்சியில் வசதியாக அமர்ந்து கொண்டு கேள்விகளைக் கேட்கலாம். மன்னிப்பு என்ன மற்றவரை சாந்தப்படுத்தும் சொல்லா? அது அவரவர் பிழைகளை உளப்பூர்வமாக உணர்ந்து திருந்திவிட்டதாகக் கூறும் வெளிப்பாடு. இந்தப் புள்ளேயின் வெளிப்பாடுதான் என்ன? மன்னிப்புக் கேட்கமாட்டோம் திருந்தமாட்டோம் அனைத்தையும் செய்து கொண்டேயிருப்போம் என்பதுதானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"1983 ஆம் ஆண்டு இனப்படுகொலைகளுக்காக அரசாங்கமோ அல்லது சிங்களவரோ மன்னிப்புக் கேட்டனரா? இப்போது மட்டும் ஏன் கேட்க வேண்டும்?

சிறிலங்கா அரசாங்கம் பைத்தியக்காரர்களால் நடத்தப்படுவதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார். இப்படியான தரம் தாழ்ந்த சொல்லாடல்களை அவர் எப்படிப் பயன்படுத்தலாம்?

சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் இல்லை என்கிறார்கள். ஊடக சுதந்திரம் இருப்பதால்தான் ஊடகங்கள் நாளிதழ்களை வெளியிட்டு வருகின்றன என்றார் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே."

-Puthinam-

இவரின்க்குற்ற்றிலிருக்கும் செய்தி மிகப்பெரியதும் அபத்தமானது

எனக்கு ஒரு சந்தேகம்?

இவர் ஜெயராஜ் பெனான்டோ பிள்ளை அரசாங்க பிரதம கொரடாவாக இருந்து கொண்டு இப்படி கதைத்து அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிக் கொண்டுவர பாடுபடுகின்றாறோ? தொடக்கி வைத்த ஜே.வி.பியும், கெலஉறுமயவுமே இவரின் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.

தான் தமிழன் என்று வேறு சொல்கின்றார். உண்மையில் இவர் தமிழர் பக்கம் தான் போலுள்ளது! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.