Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலை விவகாரம் -சுமந்திரனின் கருத்துக்கு சிவாஜிலிங்கம் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை விவகாரம் -சுமந்திரனின் கருத்துக்கு சிவாஜிலிங்கம் கண்டனம்

 
1-31-696x435.jpg
 45 Views

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என மறைக்காதீர்கள் என சுமந்திரனின் கருத்துக்கு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம்  பதில் அளித்துள்ளார்.

இனப்படுகொலை நடைபெற்றதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம்,

“இனப்படுகொலை என்பது நேற்று இன்று நடந்தது இல்லை இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்ற ஒரு விடயம். வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமல்லாது மாகாண சபையில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்போடு இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .

இனப்படுகொலை என்பது இன்று நேற்றல்ல 1977ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் இனப்படுகொலை நடந்ததற்கு பல்வேறுபட்ட ஆதாரங்கள் காணப்படுகின்றன.

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் விசாரிக்க வேண்டும் என நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

தந்தை செல்வா- பண்டா ஒப்பந்தத்தில் கூட எதிர்காலத்தில் சிங்கள குடியேற்றங்கள் நடத்தப்படாமல் இருக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1965ம் ஆண்டு காலத்தில் இடம்பெற்ற ஒப்பந்தத்தில் கூட இனப்படுகொலை நடந்தது தொடர்பான விடயங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூட வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழரின் வாழ்வியல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமந்திரன் இனப்படுகொலை நடக்கவில்லை என கூறுவது ஐனாதிபதி சட்டத்தரணியாக இருக்கும் அவருக்கு விளங்கவில்லையா? நான் அவருக்கு இனப்படுகொலை விடயம் தொடர்பில் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை 1983 ல் இனத்தினை அழிக்கும் எண்ணத்தோடு இனத்தை அழிக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

எனவே இனப்படுகொலை என்பது ஒரு இனத்தை தெரிவு செய்து படுகொலை செய்ய நினைப்பது என்பதை நிரூபிக்க முடியும் உலகில் எத்தனை நாடுகளில் இனப்படுகொலை நடைபெற்றமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என மறைக்காதீர்கள் எமது மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

உங்களால் முடியாவிட்டால் ஒரு பக்கம் ஒதுங்கிக் கொள்ளுங்கள் நாங்கள் விசாரணை நடாத்தி இனப்படு கொலை நடை பெற்றதற்கான ஆதாரங்களை தகவல்களை திரட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்கு முன்னர் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் இடம்பெற்ற தாக்குதல்கள் படுகொலைகள் தொடர்பில் தகவல்களை சேகரித்து நாங்கள் நிரூபித்து காட்டுகிறோம்” என்றார்.

 

https://www.ilakku.org/?p=46399

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தரப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வுநோக்கிய வெவ்வேறு வேலைத்திட்டங்களை எமது அரசியல்வாதிகள் முன்னெடுத்துவருவதாக தெரிகிறது ஆயினும் எவருக்கு எந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இதுவரை எந்த தமிழ் அரசியல்வாதியும் குறிப்பிட்டு சொல்லும்படியான நன்மைகளை தமிழினத்துக்கு பெற்றுத்தந்ததாக சரித்திரமும் இல்லை.

இலங்கையில் கடந்த காலங்களில் இனப்படுகொலை ஒன்று நடந்தது என்பதுதான் தமிழர் தரப்பின் பொதுவான கருத்து. அதை அனுபவித்த பாதிக்கப்பட்ட இனத்துக்குதான் அது கண்கூடு. ஆனால் அதை வெளி உலகத்துக்கு சொல்வதற்குதான் எமக்கு ஆதாரங்கள் தேவை. இன அழிப்பை செய்தவன் அந்த ஆதாரங்களை விட்டுவைக்கபோவதும் இல்லை. தீர்வுக்கான கால இழுத்தடிப்புகளும் இந்த ஆதார அழிப்புகளுக்கு துணைபோகும் ஒரு அபாய அறிவிப்பு என்பதை எமது தலைமைகள் உணர்ந்ததாக தெரியவில்லை. ஆதாரங்கள் உண்டோ இல்லையோ இலங்கையில் இனப்படுகொலை நடந்தது உண்மை என்ற தமிழ் தரப்பின் நிலைப்பாட்டை மாற்ற எந்த அரசியல்வாதிக்கும் உரிமை கிடையாது.

அதேவேளை இலங்கையில் இன்று தமிழர் மத்தியில் இராஜதந்திரிகள் என்று சொல்லும்படியாக எவரும் இல்லை. தமிழ் அரசியல்வாதிகள் தாமே வலிந்து தமது தகமைக்கும் அப்பாற்சென்று இராஜதந்திரிகள் போன்று செயற்பட முயற்சிக்கிறார்கள். கூடவே வேறொருவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பை அல்லது கடமையை தான் அவரிலும் நல்லபடியாக செய்வேன் என்று எண்ணும் மனப்பான்மையும் சில அரசியல்வாதிகளிடம் இருப்பது தெரிகிறது.

தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை பேசித்தீர்க்க எண்ணாமல் அதை கொண்டுவந்து திறந்த வெளியில் விமர்சிப்பதும் ஏட்டிக்கு போட்டியாக சவால் விடுவதும் நிறுத்தப்பட வேண்டும். இனத்துக்காக ஏதாவது செய்ய நினைத்தால் என்ன செய்தீர்கள் என்பதும் அதன் பெறுபேறுகள் என்ன என்பது மட்டும் தான் செய்திகளாக வெளியில் வரவேண்டுமே தவிர தங்கள் மத்தியில் உள்ள பூசல், போட்டி, புடுங்குப்பாடுகளை செய்தியாக்குவதையும் அறிக்கை விடுவதையும் எமது அரசியல்வாதிகள்  நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.