Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா தொற்றால் பிரேஸிலில் ஒரே நாளில் 4,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றால் பிரேஸிலில் ஒரே நாளில் 4,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிரேசிலில் முதன் முறையாக செவ்வாய்க்கிழமை மாத்திரம் கொரோனா தொற்றினால் 4,000 க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

EyUTTtiWQAYrocj.jpg

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மிக மோசமான நாளான நேற்றைய தினம் அங்கு மொத்தம் 4,195 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

அதனால் நாட்டில் கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை சுமார் 337,000 ஆக உள்ளதாக பிரேஸில் சுகாதார அமைச்சகம் புதன்கிழமை காலை அறிவித்துள்ளது.

212 மில்லியன் மக்களைக் கொண்ட பிரேஸில் கடந்த வாரத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 2,757 கொவிட்-19 தொடர்பான உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது.

பிரேசிலின் 27 மாநிலங்களில் 18 மாநிலங்கள் கொரோனா தொற்று காரணமாக மிகவும் அவசரகால நிலையில் உள்ள நிலையில் 13 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 

https://www.virakesari.lk/article/103410

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலை அச்சுறுத்தும் P.1 கொரோனா - ஒரே நாளில் 4,000 மரணங்கள் - என்ன நடக்கிறது

தென்னமெரிக்க நாடான பிரேசிலில் முதல்முறையாக ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன, சிகிச்சைக்காக பல நாள்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக சுகாதாரக் கட்டமைப்பை நிலைகுலைந்து போகும் சூழல் உருவாகி இருக்கிறது.

உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக உயிர்களைப் பறிகொடுத்திருக்கும் நாடு பிரேசில். இங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,37,000.

ஆனால் அதிபர் பொல்சனோரோ இன்னும் மாறவில்லை. கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் கூடாது என்று கூறிவந்தார். இன்னும் அந்த வாதங்களை அவர் விட்டுவிடவில்லை. கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பைவிட, பொதுமுடக்கத்தால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகள் அதிகம் என்கிறார் போல்சனாரோ. உள்ளூர் நிர்வாகங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்.

உடல் பருமனும், மன அழுத்தமும் கோவிட் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று பேசினார். தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

புதன்கிழமை மட்டும் பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,195. மொத்த பாதிப்பு 1.3 கோடியைக் கடந்துவிட்டது.

பிரேசிலின் நிலை, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் உலக நாடுகளின் முயற்சிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அந்நாட்டின் நிலையைக் கண்காணித்து வரும் மிகுயேல் நிகோலெலிஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

"ஒவ்வொரு நாளும் புதிய வகையில் உருமாற்றம் பெரும் கொரோனா வைரஸ்கள் பரவி வரும் நிலையில், பிரேசில் நிலை மட்டும் கட்டுக்குள் இருந்து விட்டால் பூமியே பாதுகாப்பாக மாறிவிடும்" என்கிறார் அவர்.

பிரேஸில்

அவசர சிகிச்சைப் பிரிவில் 90 சதவிகித படுக்கைகள், கொரோனா பாதித்தவர்களால் நிரம்பியிருக்கிறது. பல மாநிலங்களில் ஆக்சிஸனும், மயக்க மருந்துகளும் போதிய அளவில் இல்லை. நிலை மோசமாக இருந்தாலும் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியிருக்கின்றன.

"உண்மையில் அதிபர் பொல்சனாரோவின் கருத்து வெற்றி பெற்று விட்டது" என்கிறார் பிரேசில் சுகாதார கொள்கைகளுக்கான கல்வி அமைப்பின் மிகுயேல் லேகோ. அதிபர் பொல்சனரோவின் ஆதரவாளர்களும், தொழிலதிபர்களாலும் தங்களுக்குச் சிக்கல் ஏற்படும் என்பதால் மேயர்களும் ஆளுநர்களும் கொரோனா கட்டுப்பாடுகளை வலியுறுத்துவதில்லை என்கிறார் அவர்.

பிரேஸில்

கொரோனா கட்டுப்பாடுகளைப் பற்றி மட்டுமின்றி, தடுப்பூசிகளுக்கு எதிராகவும் பேசுபவர் பொல்சனாரோ. ஆய்வில் உறுதி செய்யப்படாத சிகிச்சை முறைகளை பரிந்துரை செய்பவர் அவர்.

பிரேசில் நாட்டில் 92 கொரோனா திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் "P.1" எனப்படும் பிரேசில் திரிபு, மிக வேகமாகப் பரவக்கூடியது. கடந்த நவம்பர் மாதம் அமேசானோஸ் மாகாணத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், ஜனவரி மாதத்துக்குள்ளாக 73 சதவிகித பாதிப்புகளுக்குக் காரணமாக அமைந்தது. வேறு நாடுகளுக்கும் அது பரவி வருகிறது.

பிரேசிலை அச்சுறுத்தும் P.1 கொரோனா - ஒரே நாளில் 4,000 மரணங்கள் - என்ன நடக்கிறது - BBC News தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.