Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் படகில் ஜப்பான் ராடார்கள்- சீன இயந்திரங்கள்: கொழும்பு ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் படகில் ஜப்பான் ராடார்கள்- சீன இயந்திரங்கள்: கொழும்பு ஊடகம் [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 14:34 ஈழம்] [செ.விசுவநாதன்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் படகில் ஜப்பானிய தயாரிப்பு ராடார் மற்றும் சீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி:

விடுதலைப் புலிகள், சீன தயாரிப்பு இராணுவ தளபாடங்களை பயன்படுத்துவது குறித்து பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ராடார்கள் உள்ளிட்ட ஜப்பானிய தளபாடங்களை போராளிகள் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.

பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த வாரம் நடந்த உக்கிர மோதலின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் கலத்திலிருந்து சக்தி வாய்ந்த ராடார் கைப்பற்றப்பட்டபோது இது தெரியவந்துள்ளது.

அது ஜப்பானிய தயாரிப்பு என்று பாதுகாப்பு தரப்பு அதிகாரி தெரிவித்தார். மேலும் 250 குதிரை வலுத்திறன் கொண்ட 4 யமஹா இயந்திரங்கள் அந்தக் கலத்தில் பொருத்தப்பட்டிருந்தது என்றும் அவை ஜப்பானிய தயாரிப்பு என்றும் இத்தகைய இயந்திரங்கள் அரசாங்கத்தின் உரிய அனுமதி இல்லாமல் கொண்டுவர முடியாது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

விடுதலைப் புலிகளின் கலம் ஒன்றில் முன்னர் 14.5 எம்.எம். டிவின் பரெல் ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை சீனத் தயாரிப்பு என்பதால் சீன அரசாங்கத்தின் கவனத்துக்கு அது கொண்டு செல்லப்பட்டது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - புதினம்

இது என்ன கோமாளிக்கதையாய் இருக்கிறது. எந்த சந்தர்ப்பத்திலும் புலிகள் தங்கள் இராணுவ நுட்பங்கள் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதில் தங்கள் உயிரைக்கூட மதியாதவர்கள் ??????????

மதுக்கா அந்த படகு கைபற்றியது உண்மை போல தெரிகின்றது இலங்கை பாதுகாப்பு அமைச்சு அதன் படங்களை வெளியிட்டிருகின்றது போரில் இழப்புகள் சகஜமே.

20070620_04.jpg

20070620_05.jpg

:):rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்ன கோமாளிக்கதையாய் இருக்கிறது. எந்த சந்தர்ப்பத்திலும் புலிகள் தங்கள் இராணுவ நுட்பங்கள் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்பதில் தங்கள் உயிரைக்கூட மதியாதவர்கள் ??????????

அது கோமாளிக்கதை இல்லை உண்மை.

அது மட்டுமல்ல இனிமேலும் இதேபொல இழப்புகள் அதிகம் ஏற்படும் என்பதை நாங்கள் எதிர்பார்து இருக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு அரசியல் சித்து வேளை :D ... சில வேளைகளில் நாம் பொறிக்குள் மாட்டு பட்டுவிட்டதாகவும் காட்டிக்கொள்ள வேண்டும். ஆனால் அதைப்பார்த்து வேறுசிலர் பயப்படவும் வேன்டும். இது தான் விடுதலைப்புலிகளின் வெற்றிக்கு காரணம். விடுதலைப் புலிகளுக்கு இலங்கை இராணுவம் ஒரு பொருட்டல்ல.

அதன் பின்புலம் தான் பிரச்சனை.

தமிழீழ விடுதலைக்கு எதிரி => பாப்பாணரும் உலக பொலிஸ்காரனும்

பாப்பாணருக்கும் உலக பொலிஸ்காரனும் எதிரி GREEN TEA

ஆகவே எதிரிக்கு எதிரி நண்பணாகலாம் :lol:

அட போங்கப்பா நாம சிவாஜி பற்றி பேசலாம் :)

சிறிலங்காவில் ஆட்களைக் கடத்தி பணம் பறிக்கிறார்களே அதற்கும் அரசின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?. அரசின் அனுமதி பெறப்பட்டு தான் பொருட்களை இறக்குமதி செய்யவேண்டுமென்று ஒரு விடுதலை இயக்கத்தைப் பணிப்பதற்கு இவர்கள் இன்னும் நாட்டின் நிலைமையை சரிவர புரிந்துகொள்ளவில்லை என்பதைத் தான் காட்டுகிறது. வி. புலிகள் இந்த இந்த நாட்டுப் பொருட்களையும் ஆயுத தளபாடங்களையும் தான் பயன்படுத்த வேண்டுமென்ற கட்டுப்பாட்டை விதிப்பதற்கு இவர்கள் யார்?

எந்த நாட்டு பொருட்களையும் தங்கள் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பாவிப்பதற்கு முடியும்.

ஜப்பான் தயாரிப்பு இயந்திரங்களை புலிகள் தமது படகுகளில் பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்லவே. அதுபோலவே புலிகள் அணியில் சீனத்தயாரிப்பு உபகரணங்களின் பயன்பாடும் பழைய கதைதான். ஆனால் இதில் உள்ள முக்கிய விடயம் என்னவெனில் இதைப் பயன்படுத்தி சிறிலங்கா ஜப்பானையும் சீனாவையும் தனக்குச் சார்பாக மாற்றுவதற்கு அழுத்தங்கொடுக்கும் ஒரு காரணியாக பயன்படுத்துவதற்காக தான் சிறிலங்கா அரசு முயற்சிக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Norwegian

ஒன்றை மட்டும் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். யாரும் எதையும் பாவிக்கலாம். ஆனால் அரசியல் களத்தில் அல்லது இராணுவ களத்தில் சீனா சிங்கள அரசை ஆதரிப்பதால் அதற்கு ஒருவித இலாபமும் இல்லை. சீனாவுக்கு தெரியும் பண்டார நாயக்கா சர்வதேச மண்டபத்தை இலங்கையில் நிறுவிய பின்பு இலங்கையில் நடந்த அரசியல் குழப்பங்களும் காட்சி மாற்றங்களும். எக்காரணத்தைக் கொண்டும் சீன அரசு சிங்கள அரசை நம்பாது.

அமெரிக்காவுக்கு ஒரு இஸ்ரேல் போல

சீனாவுக்கும் ஒரு ????????????? வேண்டும்

நாம் இந்தியாவை நம்பி இருந்தால் கடைசியாக நடந்த கடற் சமரில் இந்தியா இலங்கை கடற்படைக்கு எப்படி உதவியதோ அதைப் போல பல மடங்கு சிங்கள படைக்கு உதவும்.....

தற்போது எமக்கு தேவை தமிழர் நலன் மட்டும் தான் புரிந்தால் சரி.

பாலிட்டிக்ஸில்........ சைனாவும் '?????????????வும்' கிட்டத்தட்ட ஒரே மதிரியான அரசியல் அமைப்பை கொண்டவை.

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு அரசியல் சித்து வேளை :D ... சில வேளைகளில் நாம் பொறிக்குள் மாட்டு பட்டுவிட்டதாகவும் காட்டிக்கொள்ள வேண்டும். ஆனால் அதைப்பார்த்து வேறுசிலர் பயப்படவும் வேன்டும். இது தான் விடுதலைப்புலிகளின் வெற்றிக்கு காரணம். விடுதலைப் புலிகளுக்கு இலங்கை இராணுவம் ஒரு பொருட்டல்ல.

அதன் பின்புலம் தான் பிரச்சனை.

தமிழீழ விடுதலைக்கு எதிரி => பாப்பாணரும் உலக பொலிஸ்காரனும்

பாப்பாணருக்கும் உலக பொலிஸ்காரனும் எதிரி GREEN TEA

ஆகவே எதிரிக்கு எதிரி நண்பணாகலாம் :lol:

அட போங்கப்பா நாம சிவாஜி பற்றி பேசலாம் :)

எத்தினை நாளைக்குத்தான் சிவாஜியைப்பத்தி கதைக்கிறது.கொஞ்சம் பொறுங்கோ இவர் கமலலின்ரை படம் வரப்போகுதெல்லே.அதை வைச்சு கொஞ்ச நாளைக்கு காலத்தை ஓட்ட மாட்டம்?அதுசரி சிலோன்லையிருந்து ஏதாவது புதினம்..................? :)

சீனாவும் யப்பானும் தான் இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்குவதாக நான் கேள்விப்பட்டேன். இப்போ சங்கதி இப்படி என்றால் இலங்கை அரசு யோசிக்கவேண்டிய விடயம். ரம்புட்டான் மாமாவின் அறிக்கைதான் பதில் சொல்ல வேண்டும். ஈழவன் இப்போது பாதுகாப்பு அமைச்சின் இணையத்தலதில் நிறைய நேரம் செலவலிக்கிறீங்கள் போல தெரியுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Wed Jun 27 6:35:28 EEST 2007

புலிகளிடம் ஜப்பானிய தயாரிப்பு ராடர் கருவிகளும் உண்டாம் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிடும் ஊகம்

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஜப் பானியத் தயாரிப்பான ராடர் கருவிகள் உட்பட போர் சாதனங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனப் போர் சாதனங்களே புலிகளி டமிருப்பதாகவே முன்னர் கருதப்பட்ட தாகவும் இப்போது ஜப்பானிய தயாரிப்பு கள் அவர்களிடம் இருப்பது கண்டறி யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித் துள்ளனர்.

கடந்த வாரம் பருத்தித்துறைக் கடற் பகுதியில் இடம்பெற்ற கடும்சமரின் போது கைப்பற்றப்பட்ட புலிகளின் கடற் கலம் ஒன்றிலிருந்து அதிசக்திவாய்ந்த ராடர் கருவி மீட்கப்பட்டதை அடுத்து இந்த விவரம் தெரியவந்திருப்பதாக அவர் கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சேதமாக்கப்பட்ட புலிகளின் கலனிலி ருந்து ராடர் கருவியுடன் பல ஆயுதங் களையும் கைப்பற்றியிருப்பதாக கடற்படை யினர் கூறுகின்றனர். (அப)

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.