Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிச்சை எடுத்தோ, திருடியோ, கடனுக்கோ ஆக்சிஜன் வாங்குங்கள்; மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிச்சை எடுத்தோ, திருடியோ, கடனுக்கோ ஆக்சிஜன் வாங்குங்கள்; மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு
 
பிச்சை எடுத்தோ, திருடியோ, கடனுக்கோ ஆக்சிஜன் வாங்குங்கள்; மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு
 

கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தலைநகர் டெல்லியில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. டெல்லியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்சிஜன் இல்லாததன் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக, வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி ஐகோர்ட் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தது.

இதற்கிடையில், டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று தங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு போதிய ஆக்சிஜன் இல்லாத சூழல் இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் தங்களுக்கான ஆக்சிஜனை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிடுமாறும் மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி ஐகோர்ட்  உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு தனது கண்டனங்களை தெரிவித்தது.

நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது என்பது அரசின் அடிப்படைக் கடமை. அதனை மத்திய அரசு சரிவர செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால், ஆக்சிஜன் சப்ளையை செய்யுங்கள்" என மத்திய அரசை காட்டமாக டெல்லி ஐகோர்ட்  கேட்டுக்கொண்டது.

வழக்கின் விசாரணையை ஒருநாள் ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசின் வழக்கறிஞர் கேட்டபோது, இன்று இரவு ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா எனக் கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன்களை மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டியதுதானே என கேள்விகளை எழுப்பினர்.

தொழிற்சாலைகள் தயாரிக்கும் ஆக்சிஜன் அவர்களுக்கு ஆனது. அதுமட்டுமில்லாமல், பெட்ரோலியம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கான ஆக்சிஜன் தேவை என்பது கட்டுப்பாடில்லாமல் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழலில் நீங்கள் தொழிற்சாலைகள் குறித்து கவலைப்படுகிறீர்கள், டெல்லியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் இருக்கக்கூடிய சூழல் மிகவும் அபாயகரமானது. நாங்கள் வெறும் டெல்லியை குறித்து மட்டும் பேசவில்லை ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாமல் பார்க்க வேண்டியது அரசின் பொறுப்பு. இதற்காக தொழிற்சாலைகளுக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன்களை உடனடியாக மருத்துவ சேவைகளுக்கு திருப்பி விடுங்கள்" என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/04/22124219/Delhi-High-Court-to-Centre-Beg-borrow-steal-its-your.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மிகப்பெரிய சோகம் ஏற்படலாம் பிரதமர் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை

ஆக்சிஜன் பற்றாக்குறையால்  மிகப்பெரிய சோகம் ஏற்படலாம்  பிரதமர் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை
 

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நாட்டி. பெரிய சோகம் ஏற்படலாம் என பிரதமர்ருடனா ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ட்ரிவால் எச்சரிக்கை விடுத்தார்.
பதிவு: ஏப்ரல் 23,  2021 14:27 PM மாற்றம்: ஏப்ரல் 23,  2021 14:43 PM
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 279 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 54 லட்சத்து 78 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி தற்போது அவரச ஆலோசனை நடத்தி வருகிறார். 

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளின் போது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக "பெரிய சோகம்" ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் அனைத்து ஆக்சிஜன் ஆலைகளையும் ராணுவம் மூலம் கையகப்படுத்த வேண்டும்.

டெல்லிக்கு வரும் ஆக்ஸிஜன் டேங்கர்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களையும் வழிநடத்த வேண்டும்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அதிகமானபேர் வேதனையில் உள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மிகப்பெரிய சோகம் ஏற்படக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்,  ஒருபோதும் நம்மை மன்னிக்க முடியாது. ஆக்சிஜன் டேங்கர்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்ய அனைத்து முதல்வர்களையும் வழிநடத்துமாறு கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன். 

"நெருக்கடியைச் சமாளிக்க நமக்கு ஒரு தேசிய திட்டம் தேவை. மத்திய அரசு அனைத்து ஆக்சிஜன் ஆலைகளையும் இராணுவத்தின் மூலம் கையகப்படுத்த வேண்டும், மேலும் ஆக்ஸிஜன் ஆலையில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு டேங்கரிலும் இராணுவ துணை வாகனம் இருக்க வேண்டும்.

ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து டெல்லிக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள ஆக்சிஜன்  விமானம் மூலம் அனுப்பப்பட வேண்டும் அல்லது மத்திய அரசால்  தொடங்கப்பட்ட ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் கொண்டு வரப்பட வேண்டும் என கூறினார்.

மாநில அரசுகளிடமிருந்தும், கொரோனா  தடுப்பூசிக்கு மத்திய அரசு   வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதையும் முதல்வர் ஆட்சேபித்தார், மேலும்  ஒரு நாடு, ஒரே விலை  கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என கூறினார்.

கூட்டத்தில்  மராட்டியம்,  உத்தரபிரதேசம், கேரளா, சத்தீஸ்கார், மத்தியப் பிரதேசம்  மாநில முதலமைச்சர்களும் அடங்குவர்.

இதற்கிடையில், "கெஜ்ரிவால்  பிரதமர்-முதல் அமைச்சர்கள்  சந்திப்பு கூட்டத்தை அரசியல் விளையாட்டிற்கு பயன்படுத்தினார்" என்று மத்திய அரசின் வட்டாரங்கள் குற்றம் சாட்டி உள்ளன. 

ஆக்சிஜனை விமானத்தில் ஏற்றிச்செல்ல வேண்டுமென கூறினார். ஆனால் அது ஏற்கனவே செய்யப்பட்டு வருகிறது என்று அவருக்கு தெரியவில்லை. ரெயில்வேயின் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் பற்றி அவர் பேசினார், ஆனால் ரெயில்வேக்கு இது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை என்று ரெயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. 

கூட்டத்தை தடுப்பூசி விலை குறித்து பொய்களை பரப்ப அவர் தேர்வு செய்தார் . மத்திய அரசு ஒரு தடுப்பூசி விலையை  தன்னுடன் வைத்திருக்காது, மாநிலங்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்கிறது என்பதை அவர் அறியவில்லை.  அனைத்து முதல் அமைச்சர்களும் நிலைமையை மேம்படுத்த அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி பேசினர். இருப்பினும், கெஜ்ரிவால் அவர் என்ன செய்கிறார் என்பது பற்றி எதுவும் பேசவில்லை, "என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/04/23142728/Big-tragedy-may-happen-due-to-oxygen-shortage-in-hospitals.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.