Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனகதுர்கை அம்மன் அங்கத்தவர் பட்டியல் மாயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனகதுர்கை அம்மன் அங்கத்தவர் பட்டியல் மாயம்

லண்டன் கனகதுர்கை அம்மன் அடியார் அங்கத்தவர் பட்டியலில் 1300 சந்தாதாறர்கள் இருந்து வந்தார்கள் இன்னும் 3 நாட்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் 1000 சந்தாதாறரின் பெயர் பட்டியலை தற்போது கோவிலை அடாத்தாக வைத்திரக்கும் கும்பல் நீக்கியுள்ளது. இது இலங்கை அரச கொடுமையிலும் கொடுமையானது என்று பாதிக்கபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் கடந்த இரு வருடங்களாக நாசகாரிகளின் கையில் சிக்கிசிதறுண்டசெய்தி அறிந்திருப்பீர்கள். நீதிமன்றம் ஏறி தடையுத்தரவு வாங்கி ஆலயத்தை சின்னாபின்னப்படுத்தியதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆலயங்கள் வெறுமனே வருமான நோக்கமின்றி சமூக சிந்தனையுடன் செயற்பட வேண்டுமென சிந்தித்து 2001இல் இருந்து தன்னார்வ தொண்டர் தலமையிலான நிர்வாகம் பொறுப்பேற்றது முதல் தமது கடமை உணர்ந்து தாயக உறவுகளின் துயர்துடைப்பில் தம்பணியை தொடங்கியது.

1. வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் கணனி கல்வி நிலையங்கள்(12)

2. வடக்கு கிழக்கு பகுதியில் விதவைகளுக்கு தையல் பயிற்சியும், உதவியும்

3. வடக்கு கிழக்கு பகுதியில் அங்கவீனர்களுக்கு அவயங்கள் பொருத்துதல் (வெண்புறா ஊடாக 1250க்கும்மேல்)

4. வடக்கு கிழக்கு பகுதியில் 483க்கு மேற்பட்ட அனாதைப்பிள்ளை பொறுப்பேற்று பராமரித்தல் மற்றும் அதன் நிலையங்கள்.

5. ஒரு லட்சம் பவுண்ட்ஸ் அதாவது 2 கோடி ருபாய் செலவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவியும் வீடுகள் கட்டி மீள்குடியேற்றலும்.

6. வடக்கு கிழக்கில் முதியோர், வலது குறைந்தோர் காப்பகங்கள்.

7. அனாதைச் சிறார் இல்லங்களை தாயகத்தின் சகல பகுதிகளிலும் நிறுவிபரமரித்தலுடன் ஏனையோரின் இல்லங்களையும் பராமரித்தல்.

சதிசெய்து சூழ்ச்சியுடன் பொறுப்பேற்றவர்கள் என்ன செய்தனர்? கருணைலிங்கம் தலமையிலான நிர்வாககாலப்பகுயில் வருடத்திற்கு 10 லட்சம் பவுண்ட்ஸ்கள் செலவில் அமுல்படுத்திய செயற்திட்டங்கள் அனைத்தும் தேசவிரோதிகளுடன் கூட்டுச்சேர்ந்து திட்டமிட்ட முறையில் வடக்கு கிழக்கிற்கு அனுப்பபட்ட நிதிகள் நிறுத்தபட்டது.

தற்போதய நிர்வாக குழு என்ன செய்துள்ளது? அனைத்தையும் நிறுத்தி நமது சொந்த கிராமத்தில் உள்ள கோவிலுக்கும் தமது உறவினருக்கும் அனுப்பி வருகின்றனர். ஏதற்கும் கணக்ககள் இல்லை. கணனி பயிற்சிலையங்களுக்கு மூடுவிழா நடந்துள்ளது. ஆலயத்தின் பெயரில் பராமரிக்கப்பட்ட சில அனாதை இல்லங்கள் இழுத்து மூடி அனாதைச்சிறார்களை நடு வீதிக்கு அனுப்பிய செயல் ஏன்? ஆலய அடியார்கள் தரும் பணத்தில் ஒரு குழந்தை ஒருநேர கஞ்சி குடிப்பதையே தடுத்து நிறுத்தியவர்கள் எம்மவர்களின் துயர் துடைக்க முன்வருவார்களா?

- நிதர்சனம்

கனகதுர்கை அம்மன் அங்கத்தவர் பட்டியல் மாயம்...

அட இந்தக்காலத்தில் கோயிலில் வீற்றிருக்கும் அம்மனே காணாமல் போகின்றது. இது என்ன பெரிய விசயமா? கோயில்களில் வங்கி போல் பணம் புழங்குவதால் இங்கு எப்போதும் கோயிலைச் சுற்றி திருடர்கூட்டம் உலாவுகின்றது.

அம்மனுக்கே இந்த நிலையா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மன் விளையாட விட்டு வேடிக்கை பார்க்கிற போல...கொடுக்கும் போது நிறையவே கொடுப்பா...அப்ப வேண்டிக்கட்டும் போது விளையாட்டின் வேதனையை உணர்வார்கள்....சும்மாவா சொன்னார்கள் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று....

அம்மன் விளையாட விட்டு வேடிக்கை பார்க்கிற போல...கொடுக்கும் போது நிறையவே கொடுப்பா...அப்ப வேண்டிக்கட்டும் போது விளையாட்டின் வேதனையை உணர்வார்கள்....சும்மாவா சொன்னார்கள் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று....

தெய்வன் ஏன் உட்காராது எனி புரோபளம்!!!!!!!!!!

Edited by Jamuna

தெய்வம் நின்றுக் கொல்லாது இருந்தும் கொல்லாது.

அம்மனுக்காக காசு சேர்ப்பவர்களும் நாங்கள்தான். காசு போடுபவர்களும் நாங்கள்தான். கொள்ளை அடிப்பவர்களும் நாங்கள்தான்.

தண்டனை கொடுக்க மட்டும் தெய்வம் வருமா ? நாங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரியா சொன்னீங்க லிசான்...

தண்டனையும் மனிசரே குடுக்கணும்..

எப்ப எப்பிடி என்பது மட்டும் தெய்வம் நிர்ணயிப்பார் எண்டு நினைக்குறன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தெய்வன் ஏன் உட்காராது எனி புரோபளம்!!!!!!!!!!
தெய்வம் உட்காந்தால் நீங்கள் ஏறி மிதிச்சுப்போடுவியள்....சும்மா இருந்தாலே விடமாட்டிங்களாம்..பிறகு இருந்து வேற தண்டனை கொடுக்க விட்டுடுவியளா?
தெய்வம் நின்றுக் கொல்லாது இருந்தும் கொல்லாது.அம்மனுக்காக காசு சேர்ப்பவர்களும் நாங்கள்தான். காசு போடுபவர்களும் நாங்கள்தான். கொள்ளை அடிப்பவர்களும் நாங்கள்தான். தண்டனை கொடுக்க மட்டும் தெய்வம் வருமா ? நாங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்க வைப்பதும் அந்த தெய்வம் தான்.....இப்ப நீங்கள் அநீதி நடந்த உடனை நடவடிக்கை எடுப்பியளோ? இல்லாட்டி அந்த இடத்திலேயே நடவடிக்கை எடுக்கத்தான் முடியுமா இந்த ஐனநானய உலகில்?அரசனாலதான் முடியும் எடுத்தன் கவுத்தன் என்று முடிவு....அதனால நீங்கள் நீதிமன்றம் போகவேணும் இல்லாட்டி பொலிசுக்கு போக வேணும்...அதுக்கு பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும்...அதே போல தான்...தெய்வமும் நின்று கொல்லும் என்றதற்கு அர்த்தமாக்கும்.... :(

தெய்வம் உட்காந்தால் நீங்கள் ஏறி மிதிச்சுப்போடுவியள்....சும்மா இருந்தாலே விடமாட்டிங்களாம்..பிறகு இருந்து வேற தண்டனை கொடுக்க விட்டுடுவியளா?

தெய்வம் இருந்தா ஏனுங்கோ இவ்வளவு பிரச்சினை எல்லாம் வருது.........அதில அவர் இருந்தா தான் என்ன நின்றா தான் என்ன நான் சொல்லுறது சரி தானே..........

அப்ப வரட்டா :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வம் இருந்தால் பிரச்சனை வராது தான்...நீங்கள் சொல்ற போல தெய்வம் இப்ப இங்கை இல்லை போல... :unsure:

அப்பாடா நாதன் அண்ணாவுக்கு இப்பவாது விளங்கிச்சே..................தெய்வம் இருபது எங்கே வேறேங்கே!!!!! அது டைகர் பமிலியில் தான்.........

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கும்....ஆனால் எந்த தெய்வம் என்று சொல்லுங்கள்...? :unsure:

உதில நின்று கதைத்தா ஏச்சு விழ போகுது அண்ணா வாங்கோ எங்க பக்கத்துக்கு............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.