Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் 234 தொகுதிகள், ஒரு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை; 75 மையங்களில் தொடங்கியது: 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 234 தொகுதிகள், ஒரு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை; 75 மையங்களில் தொடங்கியது: 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு

234-constituencies-one-lok-sabha-constituency-counting-of-votes-started-in-75-centers-1-lakh-police-security  
 

சென்னை

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணியில் 35,836 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தமிழகத்தில் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

 
 
 

ஒரு சுற்றுக்கு 500 தபால் வாக்குகள் எண்ணப்படும். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 3,30,380 தபால் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இந்த ஆண்டு கூடுதலாக மூத்த குடிமக்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்குகள் பதிவு செய்ய வாய்ப்பளித்ததன் காரணமாக கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் இருந்து நேற்று வரை 5,64,253 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு பதில் மாற்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொற்று காரணமாகத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 6 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய மூன்று மையங்களில் எண்ணப்படுகின்றன. இந்த மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் நான்கடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகள் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்தவக் கல்லூரியில் எண்ணப்படவுள்ளன.

சென்னை பெருநகரக் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட இந்த நான்கு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 3000 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாள் என்பதால் ஊரடங்கு கண்காணிப்பில் 7000 காவலர்கள் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டவுடன் தொடர்ந்து தொகுதிவாரியாக அந்தந்தந்த மையங்களில் தனித்தனியாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

காலை 11 மணிக்குத் தமிழகம் முழுவதும் முதல் சுற்றில் யார் முன்னணி என்கிற தகவல் வரத் தொடங்கிவிடும். யாருக்கு வெற்றி யார் முதலிடம், யார் இரண்டாம் இடம் என்பது குறித்த கள நிலவரங்கள் வரத் தொடங்கிவிடும். முழுமையான தேர்தல் முடிவுகள் வர இரவு ஆகிவிடும் என்றாலும் மதியத்துக்கு மேல் யார் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு என்பதற்கான ஒரு வடிவம் கிடைக்க வாய்ப்புள்ளது

 

https://www.hindutamil.in/news/tamilnadu/666313-234-constituencies-one-lok-sabha-constituency-counting-of-votes-started-in-75-centers-1-lakh-police-security-1.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: `234 தொகுதிகளில் 5,63,253 ஓட்டுகள்' - வெற்றியைத் தீர்மானிக்கும் தபால் ஓட்டுகள்?!

தமிழக தேர்தல் முடிவுகள் 2021

தமிழக தேர்தல் முடிவுகள் 2021

மே 2 - தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான செய்திகளின் முழு தொகுப்பு...!

Today at 9 AM
 
 
11 mins ago

`234 தொகுதிகளில் 5,63,253 ஓட்டுகள்' - வெற்றியைத் தீர்மானிக்கும் தபால் ஓட்டுகள்?!

கடந்த மாதம் 6-ந் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைத்  தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் 234 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில் முதலாவதாகத் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும் தபால் ஓட்டுகள் ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 4 மேஜைகளில் எண்ணப்பட இருக்கின்றன. ஒரு மேஜையில் அதிகபட்சமாக 500  தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இந்த முறை தேர்தல் ஆணையம் 80 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தபால் முறையில் வாக்குகளைச் செலுத்த அனுமதி வழங்கியிருந்ததன் காரணமாக, கடந்த சட்டசபைத் தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் அதிகளவில் பதிவாகி இருக்கின்றன.

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: `234 தொகுதிகளில் 5,63,253 ஓட்டுகள்' - வெற்றியைத் தீர்மானிக்கும் தபால் ஓட்டுகள்?!
 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, 'தமிழகத்தில் நேற்றுவரை மொத்தம் 5,63,253 தபால் ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக' நேற்று கூறியிருந்தார். கடந்த தேர்தலை விடவும் இந்தமுறை அதிகளவில் தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதால், ஒவ்வொரு தொகுதியிலும் 1,500 முதல் 5,000 தபால் வாக்குகள் பதிவாகி இருக்கும். எனவே, இழுபறியான தொகுதிகளில் இந்த தபால் ஓட்டுகள் களத்தில் வெற்றியை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
17 mins ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 - ஒரு பார்வை

 
 
26 mins ago

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை...!

  • 3/3
     
    vikatan%2F2021-05%2F9b436052-dc14-4507-bbf2-6780e33308c3%2FWhatsApp_Image_2021_05_02_at_07_39_32.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=576&dpr=1.0
  • 1/3
     
    vikatan%2F2021-05%2F1cc090e2-7097-4374-9ad1-0a02fd1d9f86%2FWhatsApp_Image_2021_05_02_at_07_39_33.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=576&dpr=1.0
  • 2/3
     
    vikatan%2F2021-05%2F79a2792a-b02b-470a-bf44-5de1f8d50df3%2FWhatsApp_Image_2021_05_02_at_07_39_32__1_.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=576&dpr=1.0
  • 3/3
     
    vikatan%2F2021-05%2F9b436052-dc14-4507-bbf2-6780e33308c3%2FWhatsApp_Image_2021_05_02_at_07_39_32.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=576&dpr=1.0
  • 1/3
     
    vikatan%2F2021-05%2F1cc090e2-7097-4374-9ad1-0a02fd1d9f86%2FWhatsApp_Image_2021_05_02_at_07_39_33.jpeg?auto=format%2Ccompress&format=webp&w=576&dpr=1.0

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

சென்னை கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலருக்கு கொரோனா காரணமாக, தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

 
Today at 9 AM

காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்
 
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்

தமிழகத்தின் அரசியல் போக்கை நிர்ணயிக்கும் வாக்கு எண்ணிக்கையானது இன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் நடைபெறவிருக்கிறது. கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவிருக்கும் வாக்கு எண்ணும் பணியானது இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது

 

https://www.vikatan.com/government-and-politics/politics/tamil-nadu-legislative-assembly-elections-live-results

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.