Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதமருடனான முஸ்லிம் உறுப்பினர்களின் சந்திப்பில் சந்தேகம் - இம்ரான் மகரூப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.மனோசித்ரா)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த இஃப்த்தார் நிகழ்வில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டிருந்தமை சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.

அரசாங்கம் அடுத்து கொண்டுவரவுள்ள சட்டமூலங்களுக்கு ஆதரவளிப்பதற்கு இவர்கள் தயாராகிறார்களா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் நேற்று வியாழனன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இஃப்த்தார் நிகழ்வில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டனர். இதில் பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திர கட்சி ஆகியவற்றின் முஸ்லிம்  பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. இது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

imran_maharoof.jpg

இவ்வாறான சந்திப்புக்களின் மூலம் அரசாங்கம் அடுத்து கொண்டுவரவுள்ள சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க தயாராகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் எதிர்வரும் காலங்களில் இரண்டு முக்கியமான சட்டமூலங்களை அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எண்ணியுள்ளது. ஒன்று துறைமுக நகரை மொத்தமாக சீனாவுக்கு தாரைவார்க்கும் சட்டமூலம். மற்றையது சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஒழிக்கும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான சட்டமூலமாகும்.

இந்த சட்ட்டமூலங்களுக்கும் இவர்களின் ஆதரவை பெறவா இந்த இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என்ற கேள்வி இன்று எமக்குள் எழுகிறது. ஆனால் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடவே இந்நிகழ்வுக்கு சென்றதாக அதில் கலந்துகொண்ட சிலர் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுவது உண்மையெனில் அது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் இவர்கள் கூறுவதை போன்று எந்த சமூக பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுத்தர முடியும்?

அபகரிக்கப்படும் கிழக்கு மாகாண காணிகளை இவர்களால் மீட்க முடிந்ததா? அல்லது இதை தடுக்க முடிந்ததா? றிசாத் பதியுதீன் அசாத் சாலி போன்றவர்களின் கைதை தடுக்க முடிந்ததா? அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள புர்கா தடையை நீக்க முடிந்ததா? இருபதுக்கு ஆதரவளித்த பின்  இவர்களால் எந்த சமூக பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காண முடிந்தது என்பதை இவர்களில் ஒருவராவது கூறுவார்களா?

எதிர்காலத்தில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் சட்டமூலங்களுக்கு இவர்கள் ஆதரவு வழங்குவார்களேயானால் அது  சிறுபான்மை சமூகத்தின் பல சந்ததிகளை பாதித்து எமது இருப்பையும் பிரதிநிதித்துவத்தையும் கேள்விக்குறியாக்கும் என்றார்.

பிரதமருடனான முஸ்லிம் உறுப்பினர்களின் சந்திப்பில் சந்தேகம் - இம்ரான் மகரூப் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை கைவிட்டு போகக்கூடதென களவாப்போனவை....அங்கை இருக்கிறவர்  பலே திருடனே...சாப்பாடைக் கொடுத்து கமுக்கமாய் அமுக்கிட்டார்....இப்ப இந்த முசுலிமுகள்  முக்கி முனகினம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.