Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாலைகளில் கொரோனா நோயாளிகள்; பெங்களூரில் மட்டும் 63.7% பாதிப்பு! - கர்நாடகாவின் நிலை என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாலைகளில் கொரோனா நோயாளிகள்; பெங்களூரில் மட்டும் 63.7% பாதிப்பு! - கர்நாடகாவின் நிலை என்ன?

கொரோனா

கொரோனா ( Twitter/Ani )

கர்நாடகாவில் கண்டறியப்படும் கொரோனா தொற்று எண்ணிக்கையில் 63.7 சதவிகிதத் தொற்றுகள் பெங்களூரு நகர்ப் பகுதிகளிலிருந்தே கண்டறியப்படுகின்றன.

2021-ம் ஆண்டு தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இரண்டரை லட்சத்தைத் தாண்டிக்கொண்டிருந்தது அமெரிக்கா. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20,000-க்கும் குறைவாகவே இருந்தது. அப்போது, `அமெரிக்க மக்கள் அலட்சியமாகச் சுற்றித் திரிகிறார்கள்', `அமெரிக்காவின் நிலைக்கு அதிபர் ட்ரம்ப்தான் காரணம்' என்றெல்லாம் நம்மில் பலரும் பேசிக்கொண்டிருந்தோம். பாதிக்கும் மேலான இந்தியர்கள் கொரோனா என்று ஒரு நோய் இருப்பதையே மறந்துபோயிருந்தனர். மத்திய அரசைச் சேர்ந்த சிலர், ``நாம் கொரோனாவை வென்றுவிட்டோம்'' என்று சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.

இந்தியா - கொரோனா
 
இந்தியா - கொரோனா Hasif Khan

இதுவரை உலக நாடுகள் எதுவும் சந்திக்காத அளவில், தினசரி பாதிப்பு எண்ணிக்கையைத் தொட்டுக்கொண்டிருக்கிறது இந்தியா. கடந்த 10 நாள்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை நான்கு லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் அமெரிக்காவின் தற்போதைய தினசரி தொற்று எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாகவே இருந்துவருகிறது.

`இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு இரண்டு வாரங்கள் கடந்துவிட்டால், கூட்டம் அதிகமில்லாத இடங்களில் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயமில்லை' என்றும் அறிவித்திருக்கிறது அமெரிக்கா. இந்தியாவிலோ இரண்டு மாஸ்க்குகள் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

 

மோசமான நிலையில் கர்நாடகா!

இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள்தான் கொரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்து வரும் முதல் மூன்று மாநிலங்கள். அதிலும் கர்நாடகாவில், கடந்த மூன்று தினங்களாக கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டிருக்கிறது. மே 5-ம் தேதி மட்டும் 50,112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மே 6-ம் தேதி 49,058 பேரும், மே 7-ம் தேதி 48,781 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் (மே 7) 592 பேர் கொரோனா தொற்றால் மரணமடைந்திருக்கிறார்கள். நேற்றைய நிலவரப்படி, கர்நாடகாவில் 5,36,641 பேர் கொரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொரோனா
 
கொரோனா

கர்நாடக மாநிலத்திலுள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத காரணத்தால், மருத்துவமனைக்கு வெளியே உள்ள சாலைகளில் கொரோனோ நோயாளிகள் படுத்துக்கிடப்பது போன்ற புகைப்படங்களும், காணொலிகளும் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. கர்நாடகா சந்தித்துக்கொண்டிருக்கும் மோசமான நிலைமையை இந்தப் புகைப்படங்களும் காணொலிகளும் விளக்குகின்றன. கர்நாடகாவின் சில பகுதிகளில் படுக்கைகள் பதுக்கிவைக்கப்படுவதாகவும், அதிக பணம் கொடுப்போருக்குப் படுக்கைகள் வழங்கப்படுவதாகவும் தொடர்ச்சியாகப் புகார்கள் எழுந்துவருகின்றன.

கர்நாடக மாநிலம், நெலமங்கலாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான ஐசியூ படுக்கைகள் 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின்பேரில் அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று பேரைக் கைதுசெய்திருக்கிறது மத்திய பிரிவு காவல்துறை. இப்படியாகப் பல இடங்களிலும் படுக்கைகள் விற்பனை செய்யப்படுவதால், படுக்கைகள் கிடைக்காமல், மக்கள் மருத்துவமனைக்கு வெளியே படுத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சில தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இருந்தும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதால் கொரோனா நோயாளிகளுக்கு இடம் அளிக்க மறுத்துவருகின்றனர்.

 

சிக்கித் தவிக்கும் பெங்களூரு!

கர்நாடகாவில் ஏற்படும் கொரோனா தொற்றுகளில் பெரும்பாலானவை நகர்ப்புறங்களிலிருந்தே கண்டறியப்படுவதாகச் சொல்லப்படுகிறது. தினசரி கர்நாடகாவில் கண்டறியப்படும் கொரோனா தொற்று எண்ணிக்கையில் 63.7 சதவிகித தொற்றுகள் பெங்களூரு நகர்ப் பகுதிகளிலிருந்தே கண்டறியப்படுகின்றன. இந்திய அளவில் கொரோனா சிகிச்சை பெற்றுவருபவர்களில் 9.2 சதவிகிதம் பேர் பெங்களூருவின் நகர்ப் பகுதியிலிருந்தே சிகிச்சை பெறுகின்றனர். பெங்களூருவில் நேற்று மட்டும் 21,376 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்றைய தினம் கர்நாடகாவில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில் 58.45 சதவிகிதம் பேர் பெங்களூரில் சிகிச்சை பெற்றவர்கள்தாம். இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் நம்மை அச்சத்தில் ஆழ்த்துகின்றன.

பெங்களூரு
 
பெங்களூரு

ஆக்ஸிஜன் பிரச்னை!

கர்நாடக மாநிலத்தில் நாளொன்றுக்கு 812 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள ஆக்ஸிஜன் தேவைக்கு மத்திய அரசைத்தான் நம்பியிருக்கிறது கர்நாடக அரசு. கடைசியாகப் பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ``கர்நாடகத்துக்கு நாளொன்றுக்கு 1,471 டன் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது'' எனத் தெரிவித்திருந்தார். சமீபத்தில் பேட்டியளித்த கர்நாடக தலைமைச் செயலாளர், நாளொன்றுக்கான ஆக்ஸிஜன் தேவை 1,471 டன்னிலிருந்து 1,792 டன்னாக உயர்ந்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்
 
ஆக்ஸிஜன் சிலிண்டர் AP Photo / Mukhtar Khan
மே 3 முதல் மே 6-ம் தேதி வரை ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக, கர்நாடகாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40!

நாளுக்கு நாள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துவருவதால் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது கர்நாடக அரசு. கர்நாடகா உயர் நீதிமன்றம், ``மக்கள் உயிரிழக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? எப்போது ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை அதிகரிக்கப் போகிறீர்கள்?'' என்று காட்டமாக மத்திய அரசிடம் கேள்வியெழுப்பியிருக்கிறது. கூடவே, ``கர்நாடகத்துக்கு தினசரி 1,200 மெட்ரிக் டன் ஆக்ஸின் வழங்க வேண்டும்'' எனவும் உத்தரவிட்டிருக்கிறது.

 

கடைசி ஆயுதம்!

கர்நாடகாவில் ஆக்ஸிஜன் தேவை, ரெம்டெசிவிர் தேவை, மருந்துகள் தேவை, படுக்கைகளை அதிகரிப்பது உள்ளிட்ட கொரோனா பணிகளுக்காகச் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதற்குப் பொறுப்பாக ஐந்து அமைச்சர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர அந்த மாநில அரசு கடந்த ஒரு மாதமாகவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. இருந்தும், கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. எனவே, பிரதமர் மோடி சொன்னதுபோல, கடைசி ஆயுதமான `முழு ஊரடங்கை' கையிலெடுத்திருக்கிறது கர்நாடக அரசு.

ஊரடங்கு
 
ஊரடங்கு

மே 10-ம் தேதியிலிருந்து 24-ம் தேதி வரை முழு ஊரடங்குக்கு உத்தரவிட்டிருக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. ``இந்த முழு ஊரடங்கின் மூலம் கொரோனா தொற்று பரவல் சங்கிலியை நிச்சயம் முறியடிக்க முடியும். பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளும் விரைவில் கொரோனாவிலிருந்து மீளும்'' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.

கர்நாடகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே இந்தக் கொடிய நோயின் பிடியிலிருந்து விரைவில் மீளும் என நம்புவோம்!
 
https://www.vikatan.com/government-and-politics/healthy/covid-19-karnatakas-current-situation

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.