Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மநீம நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா... கமல்ஹாசனின் சர்வாதிகாரம்தான் காரணமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மநீம நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா... கமல்ஹாசனின் சர்வாதிகாரம்தான் காரணமா?

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து நிர்வாகிகள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், கமலின் சர்வாதிகாரப் போக்குத்தான் காரணம் எனப் பலரும் விமர்சனம் செய்கின்றனர். உண்மையான காரணம் என்ன என விசாரித்தோம்...

தமிழக சட்டப்பேரவை முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் எதிர்பாராத வகையில் பல்வேறு காட்சிகள் அரங்கேறிவருகின்றன. அவற்றில் சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கியப் பொறுப்பிலிருந்து எட்டுப் பேர் வெளியேறியிருப்பது மிக முக்கியமான விவாதப் பொருளாகியிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டது முதல் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகிவந்தது. பா.ஜ.க-வின் பி டீம். தி.மு.க ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவே பா.ஜ.க வழிகாட்டுதலின் பேரில் கமல்ஹாசன் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். தேர்தல் முடிந்ததும் கட்சியைக் கலைத்துவிடுவார் எனப் பல விமர்சனங்கள் மக்கள் நீதி மய்யம் மீது வைக்கப்பட்டது. இந்த விமர்சனங்களையெல்லாம் தாண்டி நாடாளுமன்றத்தில் கணிசமான வாக்கு விகிதத்தைப் பெற்றது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். அதேபோல தனியாகக் கூட்டணி அமைத்து, சட்டப்பேரவைத் தேர்தலையும் சந்தித்தது. இதில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட கமல், சிங்காநல்லூர் தொகுதியில் டாக்டர் மகேந்திரன், மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பெற்று கவனம் ஈர்த்தனர். தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகளைப் பெறவில்லை.

 
மக்கள் நீதி மய்ய அறிக்கை
 
மக்கள் நீதி மய்ய அறிக்கை

தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு கட்சியைச் சீரமைக்க உள்ளதாகக் கூறி மூத்த நிர்வாகிகளைப் பதவி விலகக் கோரியுள்ளார் கமல்ஹாசன். அந்தக் கூட்டத்திலேயே துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் கட்சியின் பதவியை மட்டுமல்ல, கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கமலின் நடவடிக்கையில் இருக்கும் அதிருப்தியே அதற்குக் காரணம் என பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் மகேந்திரன் கூறினார். கமீலா நாசர் சில வாரங்களுக்கு முன்புதான் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகினார். கட்சி தொடங்கப்பட்டது முதல் கமல்ஹாசனுடன் இருந்த பலரும் தற்போது கட்சியிலிருந்து விலகிவருகின்றனர். இதற்கு, கமலின் சர்வாதிகாரப் போக்கும் காரணம் எனக் கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் கூறிவருகின்றனர்.

 

கமல்ஹாசன், கட்சி உறுப்பினர்களிடம் சர்வாதிகாரமாக நடந்துகொள்கிறாரா என மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய வழக்கறிஞர் ராஜசேகரிடம் பேசினோம். “கமல்ஹாசன் திரைத்துறையில் எப்படி சர்வாதிகாரமாக இருக்கிறாரோ, அதேபோலத்தான் கட்சியிலும் நடந்துகொள்வார். மக்கள் நீதி மய்யத்தில் சேரும் ஒருவரையும் கட்சியில் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் முதலில் அதிக கவனம் கொடுத்து, ஈர்ப்புடன் பேசுவார் கமல். ஆனால், இரண்டு மாதம் ஆன பின்னர்தான் அவரது சுயரூபம் வெளியே வரும். தன்னுடைய சுயலாபத்துக்கு ஒருவரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது கமல்ஹாசனுக்கு அத்துப்படி. அதைப் புரிந்துகொண்டு முதல் ஆளாகக் கட்சியிலிருந்து வெளியேறியவன் நான்தான். இப்போது இன்னும் சிலரும் அதைப் புரிந்துகொண்டு வெளியேறிவருவதைப் பார்க்க முடிகிறது. வெளியேறுபவர்களின் எண்ணிக்கை இனி அதிகரிக்கும். கட்சியில் கமல் சர்வாதிகாரத்தனத்துடன் மட்டுமல்ல, பணத்தைக் குறிக்கோளாக வைத்து, அதைப் அடைவதற்காகவும் எந்த எல்லைக்கும் செல்வார். இப்போது கமல் கட்சியிலிருக்கும் பலரும் பெரும் பணக்காரர்கள்தான். மாற்று அரசியலை எதிர்பார்க்கும் யாரும் இப்போது மக்கள் நீதி மய்யத்தில் இல்லை. ஊதியத்துக்காகப் பணியில் இருப்பவர்கள்தான் இப்போது கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்கள். கட்சியில் யாருக்கும் அதிகாரம் இருக்காது. `பிக் பாஸ்’ நிகழ்ச்சிபோலத்தான் மக்கள் நீதி மய்யக் கட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் இருக்கும். உணர்வும் உணர்ச்சியும் பிணைந்து இருக்கும் அரசியல் கட்சிகள்தான் மக்கள் மத்தியில் வெற்றிபெறும். கமல்ஹாசன் தனக்கு சினிமாவில் இருக்கும் புகழைவைத்து அரசியலில் வெற்றி பெறலாம் என்ற ஆசையில் கட்சியைத் தொடங்கினார். ஆனால், ஒரு நாள் எந்த அறிவிப்பும் இல்லாமல் ட்விட்டரிலேயே கட்சியைக் கலைத்துவிட்டு நடிக்கச் சென்றுவிடுவார் பாருங்கள்.

 
வழக்கறிஞர் ராஜசேகர்
 
வழக்கறிஞர் ராஜசேகர்

கட்சியிலிருக்கும் எந்த உறுப்பினரும் சுயமரியாதையோடு நடத்தப்படுவதில்லை. மாறாக, கார்ப்பரேட் கம்பெனிகளின் பாணியில் ஆண்டான், அடிமை முறையில்தான் நடத்தப்படுகிறார்கள். தலைவரே தொண்டர்களை அவமானப்படுத்துவது மக்கள் நீதி மய்யத்தில்தான் நடக்கும். இதைத்தான் நான் கட்சியிலிருந்து வெளியில் வந்தது முதல் சொல்லிவருகிறேன். தற்போது டாக்டர் மகேந்திரனும் அதைச் சொல்லியிருக்கிறார்.”

 

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மௌரியாவிடம் பேசினோம். “கட்சி ஜனநாயகரீதியில்தான் நடக்கிறது. எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனையுடன்தான் செயல்படுத்தப்படுகின்றன. கட்சியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அனுபவம் இருக்கும். அவற்றை எப்படி எதிர்கொள்கிறோம், எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமக்கான அனுபவங்களும் அமையும். அப்படித்தான் கட்சியிலிருந்து வெளியில் செல்லும் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வி அடைந்த பின்னர் அது குறித்து விவாதிக்க, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் தலைவர் கமல்ஹாசன் அழைத்தார். “சட்டமன்றத் தேர்தல் தோல்வியை ஒட்டி, கட்சியைப் புனரமைக்க வேண்டியிருக்கிறது. அதனால் தற்போது பதவியில் இருப்பவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். கட்சியைப் புனரமைக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கு ஒத்த கருத்து இருந்ததால், அதை ஏற்று, பதவியை ராஜினாமா செய்தோம். இதில் எந்த முரண்பாடும் யாருக்கும் இல்லை. முரண்பாடு இருந்தவர்கள் வெளியேறியிருக்கிறார்கள். அவர்களைத் தலைவர் தடுக்கவும் இல்லை. இன்னும் ஒன்றிரண்டு நாள்களில் கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர். அதற்கான அனைத்து அதிகாரத்தையும் தலைவருக்குச் செயற்குழு உறுப்பினர்கள் அளித்துள்ளோம்.

மௌரியா - மநீமா முன்னாள் பொதுச்செயலாளர்
 
மௌரியா - மநீமா முன்னாள் பொதுச்செயலாளர்
 

மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரை, கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு, தொடர்ந்து நான் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து செயல்படுவேன். மற்றபடி கட்சியில் சர்வாதிகாரப்போக்கு நிலவுவதாகப் பேசுவதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை” என்றார்.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/kamal-is-the-is-reason-behind-the-mahendran-and-all-resign-form-party

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.