Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்ளி வாய் பிசாசுடன் கொஞ்சம் நேரம்

Featured Replies

இரவு பத்தரை இருக்கும் இங்கு வீ்ட்டின் பின் பக்கம் அவல குரலுடன் கீச்சிடும் சத்தம் கேட்டு தேய்ந்து .ஓய்ந்தது இந்த குரலை எங்கையோ கேட்டிருக்கிறன். ஆ..அது ஒரு பறவையின் குரல் இந்த வினோதமான குரலை நீண்ட காலத்துக்கு பிறகு கேட்டிருக்கிறன்.ஆ..இதை சுடலை குருவி என்று சொல்லுவினம்..நாடு கடல் மைல்கள் காலங்கள் தாண்டி ஒலித்த இந்த குரல் திரும்ப திரும்ப ஒலித்து பேயறைந்தவன் போல் என்னை ஆக்கி கொண்டிருந்தது.

நீண்ட பரந்த செவ்வக வடிவமுள்ள வயல் பரப்பு பகுதியின் வடகிழக்கு மூலையில் அந்த ஊர் சுடலையும் அடர்ந்த பனங்காணியும், வட மேற் மூலையில் வேப்பமரத்துடனூன வைரவர் கோயிலும் இருக்கு தென் மேற்கு மூலையில் தனித்து விடப்பட்ட மாமரத்து உடனனா பழங்கால வீடும் அதன் பின் சில இடை வெளி விட்டு தான் நெருங்கிய ஊர் மனைகளின்

http://sinnakuddy.blogspot.com/2007/06/blog-post_28.html

  • 2 weeks later...

பயப்பிடுத்துறீங்களே :)

நான் அடிக்கடி மேய விட்ட மாட்டை அவிழ்த்து வர போறதுண்டு.

அங்க தூரமா வயலும்..சுடலையும் தான்.

அடிக்கடி இந்த குருவி கத்தும்..அவ்வளவு தான்...ஒரே ஓட்டம்!

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளி வாய் பிசாசுடன் கொஞ்சம் நேரம் இருந்தால் பயம் தான் வரும் சின்னகுட்டி..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சொல்லுகினம் அப்படி என்றதற்கு எனக்குத் தெரிஞ்ச காரணம் இது தான்.

. பிரேதத்துக்கு கை காட்ட கூடாதாம் கை காட்டினால் கை அழுகிடுமாம். இப்படி எத்தனை புலுடாவை சொல்லி வைச்சிருக்கினம் சனம்

ஒரு துன்பகரமான மரணநிகழ்வு ஒன்று நடக்கேக் குழந்தைகள் சத்தம் போட்டுக் கொண்டு திரிவது என்பது பொருத்தமான விடயமாக இருக்காது. அதலா குழந்தைகளை அடக்குன்றதற்காக பின்னால கைகட்டி வைக்க வேணும் என்று வெருட்டி வைக்கலாம். அப்ப தான் குழந்தைகள் தங்கடபாட்டில் இருப்பினம்.

ஆனால் வயது வந்தாலும் எல்லாத்தையும் மூட நம்பிக்கையாக எடுக்கின்ற எங்களுக்கு ஏன் அப்படிச் சொல்லுகினம் என்றதைப் பகுத்தறியக் கூடிய தகுதி இல்லை. ... என்ன.. நான் சொல்லுறது?

பாத்தியள் என்றாலே புரியும். ஒரு சவ ஊர்வம் போகக்கே பின்னுக்குக் கை கடடி நிற்க வேணும் என்றது அந்தச் சவத்துக்கு கொடுக்கின் மரியாதை. அது மூட நம்பிக்கையில்லை.

நல்ல கதை ஒன்று சின்னக்குட்டி. ஆனால் குழந்தை மனநிலையாக உங்களை உருவகிக்கும்போது, பெரியாக்கள் மாதிரியும் இடையிடையே சிந்திக்கின்ற மாதிரிக் கருத்தோட்டம் தோணுது.

  • தொடங்கியவர்

பயப்பிடுத்துறீங்களே :)

நான் அடிக்கடி மேய விட்ட மாட்டை அவிழ்த்து வர போறதுண்டு.

அங்க தூரமா வயலும்..சுடலையும் தான்.

அடிக்கடி இந்த குருவி கத்தும்..அவ்வளவு தான்...ஒரே ஓட்டம்!

வணக்கம் பிரியசகி. நன்றி. பயப்பட ஒன்றுமில்லை பயப்படுத்தும் நோக்கம் இல்லை .. அந்த நெருப்பு சதுப்பு நில வாயு என தெளிவாக கூறி இருக்கிறேன்.

வணக்கம் கறுப்பி சகி பயப்பிட என்னும் கூட வெருட்டுறியள் என்ன

  • தொடங்கியவர்

நல்ல கதை ஒன்று சின்னக்குட்டி. ஆனால் குழந்தை மனநிலையாக உங்களை உருவகிக்கும்போது, பெரியாக்கள் மாதிரியும் இடையிடையே சிந்திக்கின்ற மாதிரிக் கருத்தோட்டம் தோணுது.

வணக்கம்..ம.ராசா.. விமர்சன நோக்கில் உங்கள் கருத்து ஒரு பகுதி நியாயம் என்றால் கூட. குழந்தை மனநிலையில் எழதோணும் அம்பிலிமாமா கதை மாதிரி தான் எழுதோணும்... நான் சின்னனிலை என்ற பதம் தான் பாவித்திருக்கிறன்.. 20 ,21 வயது முன் அதாவது புலம் பெயர்வுக்கு முன் இருந்த என் ஊர் நினைவு களை எழுத முயற்சி செய்கிறன் .சொல்ல போனால் பெரியாக்காளாக இப்ப இருக்கிற சிதைஞ்சு போய் இருக்கிற உணர்விலும் பார்க்க அந்த நேரம் நிறைய சமுதாய கோபமும் போர்க்குணமும் இருந்தது.

நீங்கள் சொல்லும் தவறுகள்.. நான் அநுபவ மீட்டலாக எழுதாமால் சிறுகதை என்ற வடிவத்தில் எழுதினால் இலகுவாக களையாலும் என நினைக்கிறன்.

என் வாழ் நாளில் சிறு கதை என்பதே எழுதியது இல்லை என்பதால் .. ஏன் வீண் பல பரீட்சை என்று பார்க்கிறன்.

எதுக்கும் பார்ப்பம்...

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படைப்பு சிறுவயதில் பக்கத்து வீட்டுக்கு போகும் போதும் தேவாரம் பாடி கொண்டு போனது ஞாபகம் வருகிறது,தொடரட்டும் உங்கள் படைப்புகள்.

  • தொடங்கியவர்

வணக்கம்.புத்தன்...பதிவை பார்த்து கருத்து கூறியதுக்கு நன்றிகள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.