Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வர்த்தமானியூடாகவும் வன்முறைகள்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'வர்த்தமானியூடாகவும் வன்முறைகள்' - சபேசன்

கடந்த 10.06.07 அன்று வெளியாகிய, சிறிலங்காவின் அரச வர்த்தமானியின் ஊடாக, மகிந்த ராஜபக்சவின் சிங்கள-பௌத்தப் பேரினவாதச் சிந்தனை, மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டிருக்கிறது. 'சம்பூரை உள்ளடக்கிய மூதூர் கிழக்குப் பிரதேசங்களை, அதியுயர் பாதுகாப்பு வலையமாகப்' பிரகடனப்படுத்தி உள்ள இந்த அரச வர்த்தமானி, 'அங்கே மக்கள் மீளக் குடியேற முடியாது' என்றும் 'மீறி அப்பகுதிகளுக்குள் நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றும் அறிவித்துள்ளது.

தமிழ் மக்களின் பாரம்பரிய மண்ணைப் பறிப்பதற்காகச் சிறிலங்கா அரசுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற பேரினவாதச் செயற்பாடுகளின் நீட்சிதான், இந்த வர்த்தமானி அறிவித்தலாகும்.! தமிழ் மக்களின் தாயகப் பிரதேசங்களை அபகரிப்பதற்காகப் பல்வேறு வழிகளைச் சிறிலங்கா அரசுகள் பயன்படுத்தி வந்திருக்கின்றன. 'நீர்ப்பாசனத்திட்டம்' என்றும், 'காணி அபிவிருத்தித் திட்டம்' என்றும், 'புனித நகரத் திட்டம்' என்றும், 'சிறப்புப் பகுதி' என்றும், 'உயர் பாதுகாப்பு வலையம்' என்றும், 'இராணுவ நடவடிக்கை' என்றும் பலவிதமான அராஜகச் செயற்பாடுகளைச் சிறிலங்கா அரசுகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன. இவற்றின் மூலம் தமிழ் மக்களை அவர்களுடைய சொந்த நிலத்திலிருந்து விரட்டி அடித்துவிட்டு, அப்பகுதிகளில், சிங்களக் குடியேற்றங்களைச் சிங்கள அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன.

சிறிலங்கா அரசுகளின் மிக நீண்ட காலத் திட்டங்களாகிய இவை குறித்துச் சில தகவல்களைத் தருவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கைத் தீவு, பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பின்னரும்கூட, திருகோணமலையில் பிரித்தானிய அரசு, தனது படைத்தளங்களை வைத்திருந்தது. ~பிரித்தானியாவின் படைத்தளங்கள் இனிமேல் இலங்கையில் இருக்;கக்கூடாது என்று 1956-களில் சிங்கள அரசு நச்சரிக்கத் தொடங்கியதை அடுத்து திருகோணமலையில் இருந்த, பிரித்தானியாவின் படைத்தளங்கள் அகற்றப்பட்டன. அதன் பின்னர் திருகோணமலையில் வசித்த, மற்றும் வேலை செய்து வந்த தமிழர்களைச் சிங்கள அரசு, தனது அழுத்தங்கள் மூலம் விரட்டியடித்தது. பின்னர் திருகோணமலையில் சிங்களவர்களைச் சிங்கள அரசு குடியேற்ற ஆரம்பித்தது.

திருகோணமலையில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழர்களைப் பதவியாவில் குடியமர்த்தி, அங்கே அவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என்று சிங்கள அரசு அன்று அறிவித்தது. பதவியாய் என்றழைக்கப்படுகின்ற பிரதேசம், உண்மையில் பதவில்குளம் என்ற பாரம்பரியப் பெயரைக் கொண்ட தமிழ்ப்பகுதியாகும். அப்போதேயே பதவில் குளத்தில் சிங்களக் குடியேற்றத்தைச் சிங்கள அரசு ஆரம்பித்து விட்டது. தமிழ்ப்பகுதியான பதவில் குளத்தில் சிங்களக் குடியேற்றத்தை நடத்திக் கொண்டு, திருகோணமலைத் தமிழர்களை அங்கே கொண்டு போய்க் குடியமர்த்தும் செயற்பாட்டைச் சிங்கள அரசு முன்னெடுத்தது.

இங்கே ஒரு விடயத்தை நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம். பிரித்தானிய அரசு, தனது படைத்தளத்தைத் திருகோணமலையில் இருந்து அகற்றியபோது, அங்கிருந்த தமிழர்களுக்கு, அங்கேயே - அதாவது திருகோணமலையிலேயே - மறுவாழ்வு கொடுக்காமல் அவர்களை வேறு எங்கேயோ கொண்டுபோய், சிங்கள அரசு குடியமர்த்துகின்றது. சிங்கள அரசு தமிழர்களைக் குடியேற்றிய பதவில் குளம் என்கின்ற தமிழ்ப்பகுதியோ, அப்போது படிப்படியாகச் சிங்களப்பகுதியாக மாற்றப்பட்டு வருகின்றது.

இந்த விசித்திரமான செயற்பாட்டினூடாகப் பின்னர் நடந்தேறிய விடயங்கள், சிங்கள அரசின் தமிழினத் துவேஷத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன.

1979 ஆம் ஆண்டு அன்றைய காணி அமைச்சரான காமினி திசநாயக்கா, மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமைந்த 'ட' (எல்) வலையத்தைச் 'சிறப்புப் பகுதியாக' அறிவிக்கின்றார். அந்தப் பகுதிதான் தமிழ் மக்களின் மணலாற்றுப் பகுதியாகும்! கருநாட்டுக்கேணி, கொக்கிளாய், தென்னமரவாடி போன்ற பல கிராமங்களை உள்ளடக்கிய மணலாற்றுப் பகுதியில் உள்ள சுமார் 43 தமிழ்க் கிராமங்களிலிருந்து 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 22 ஆம் திகதியன்று, 13,500-க்கும் மேற்பட்ட தமிழ்க்குடும்பங்கள் இரவோடு இரவாக இராணுவத்தால் விரட்டியடிக்கப்படுகின்றார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.