Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளி வாய்க்கால் நினைவு கூரல் – பயங்கரவாத வாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்கால் நினைவு கூரல் – பயங்கரவாத வாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரும் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் மே 18 ஆம் திகதி முள்ளி வாய்க்காலில் இறந்த உறவினர்களையும், நண்பர்களையும் நினைவு கூர்ந்தமைக்காக பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உட்பட 10 பேரையும் எதிர்வரும் 03.06.2021 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனை உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே 18 ஆம் திகதி செவ்வாய் கிழமை கிரான் கடற்கரையில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏற்பாட்டாளரான குருசுமுத்து வி.லவக்குமார் உட்பட 9 பேரும் கல்குடா பொலிசாரால் கைது செய்யப்பட்டு பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

 

இந் நபர்களை மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனை நீதிபதி எம்.எச்.எம்.பசில் முன்னிலையில் இன்று பொலிசாரினால் முன்னிலைப்படுத்தப்பட்டது.

இதன்போது சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட நீதிபதி சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இவ் வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி கே.சுகாஸ்,சட்டதரணி ரம்சின் மற்றும் சட்டத்தரணி ஜெயசிங்கம் ஆகியோர்கள் ஆஜராகியிருந்தனர்.

இதேவேளை இவ் வழக்கு தொடர்பாக சட்டத்தரணி கே.சுகாஸ் பின்வருமாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்…..

ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்க்கின்ற போது இந் நாட்டிலே தமிழர்களாக பிறந்தமைக்கு வெட்கப்பட வேண்டிய வேதனைப்பட வேண்டிய நிலமையில் இருக்கின்றோம். இறந்த உயிர்களை நினைவு கூறுகின்றமை தொடர்பாக இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட எல்.எல்.ஆர்.சி.அறிக்கை, சர்வதேச சட்டங்கள் மற்றும் அரசியல் அமைப்பிலே கூறப்படுகிறது. இவற்றுக்கு மாறாக பூனைகளை எல்லாம் இவ்வரசு புலிகளாக்கின்றது. துரதிஸ்ட வசமாக இவ் வழக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்துள்ள காரணத்தினால் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குகின்ற அதிகாரம் இவ் நீதவான் நீதிமன்றத்திற்கு கிடையாது. ஆகவே இவ் வழக்கினை இலங்கையின் உயர் நீதி மன்றத்திலே அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

S6760073-300x169.jpg?6bfec1&6bfec1

S6760157-300x169.jpg?6bfec1&6bfec1

S6760082-300x169.jpg?6bfec1&6bfec1

S6760148-300x169.jpg?6bfec1&6bfec1

S6760154-300x169.jpg?6bfec1&6bfec1

S6760155-300x169.jpg?6bfec1&6bfec1

S6760158-300x169.jpg?6bfec1&6bfec1

S6760169-300x169.jpg?6bfec1&6bfec1

S6760162-300x169.jpg?6bfec1&6bfec1


 

https://www.meenagam.com/முள்ளி-வாய்க்கால்-நினைவு/

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொண்ட 10 பேருக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

1-300x169.jpg?6bfec1&6bfec1

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் மே 18 ஆம் திகதி முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொண்ட 10 பேரையும் எதிர்வரும் 16.06.2021 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனை உத்தரவிட்டுள்ளது.

இதன் வழக்கு மீண்டும் இன்றைய திகதியில் நீதிமன்றிக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ் வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி கே.சுகாஸ்,சட்டதரணி ரம்சின் மற்றும் சட்டத்தரணி ஜெயசிங்கம் ஆகியோர்கள் ஆஜராகியிருந்தனர்.
இதேவேளை இவ் வழக்கு தொடர்பாக சட்டத்தரணி கே.சுகாஸ் பின்வருமாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்…

இவ் வழக்கில் 2 பெண்களும் பொலிசாரல் காரணமின்றி கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுட்டிகாட்டப்பட்டதாகவும் நீதி மன்றம் மிகுந்த கரிசனையோடு பெண்கள் தொடர்பான விசேட அறிக்கையினையை அடுத்த தவணையில் தாக்கல் செய்யுமாறு பணித்திருக்கிறது. அடுத்த தவணையில் பொலிசார் பெண்கள் தொடர்பான சாதகமான அறிக்கையினை சமர்ப்பிப்பார்கள் என நம்புகின்றோம் என தெரிவித்தார்.

18.05.2021 ஆம் திகதி செவ்வாய் கிழமை கிரான் கடற்கரையில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏற்பாட்டாளரான குருசுமுத்து வி.லவக்குமார் மற்றும் 2 பெண்கள் உட்பட 9 பேரும் கல்குடா பொலிசாரால் கைது செய்யப்பட்டு பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனை நீதிபதி எம்.எச்.எம்.பசில் முன்னிலையில் பொலிசாரினால் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

 

https://www.meenagam.com/முள்ளிவாய்க்கால்-நினைவ-9/

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டு கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு - கைதான 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

 மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றினால் ஏற்கனவே திகதி இடப்பட்டதன் அடிப்படையில் இன்று புதன் கிழமை (30.6.2021)ஆம் திகதி வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

 அதன் அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உட்பட 10 பேரையும் எதிர்வரும் 13.07.2021 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசில் கட்டளை பிறப்பித்துள்ளார்.

கடந்த மே 18 ஆம் திகதி செவ்வாய்கிழமை கிரான் கடற்கரையில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏற்பாட்டாளரான குருசுமுத்து வி.லவக்குமார் உட்பட 9 பேரும் கல்குடா பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ் வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி ரட்ணவேல் தலைமையில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி கே.சுகாஸ் உட்பட சட்டத்தரணிகளான ரம்சின், ஜெயசிங்கம்,நிரஞ்சன்,ரணித்தா,சித்திக் ஆகியோர்கள் ஆஜராகியிருந்தனர்.

 இவ் வழக்கு தொடர்பாக சட்டத்தரணி கே.சுகாஸ் பின்வருமாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

'இன்றைய தினம் சந்தேக நபர்கள் சார்பில் சமர்ப்பணமொன்றை மேற்கொள்வதற்கான அனுமதியொன்றை நீதிமன்றில் கோரியிருந்ததாகவும்,எதிர்வரும் 13ம் திகதி அதற்கான அனுமதி கிடைத்திருப்பதாகவும்,அன்றைய தினம் சந்தேக நபர்களின் சார்பில் சமர்ப்பணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அந்த சமர்ப்பணத்திற்கு நீதிமன்றம் வழங்கும் கட்டளையைப் பொறுத்து அடுத்த கட்டமாக நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இலங்கையின் உயர் நீதி மன்றத்திலே மூத்த சட்டத்தரணி ரட்ணவேல் தலைமையில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/108532

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.... நல்ல நீதிபொறிமுறை நாட்டில். கொலைகாரருக்கு விடுதலை, இறந்த உறவுகளை நினைவு கூர்ந்தவர்களுக்கு மறியல்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்கால் நினைவேந்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு – கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில், 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்குத் தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தி அதனைப் படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அவர்களைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கல்குடா பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற அனுமதியினை பெற்று 3 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து இன்று (13) குறித்த வழக்கு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் 10 பேரின் சார்பில் சிரேஷட சட்டத்தரணி இரட்ணவேல் தலைமையில் கனகரத்தினம் சுகாஸ் ஆகியோர் ஆஜராகினர்.

இந்நிலையில் கோவிட் தொற்று காரணங்களால் நீதிமன்றத்துக்கு அழைத்துவர முடியாத நிலையில் அவர்களைத் தொடர்ந்தும் 27 திகதிவரை 14 நாட்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 

https://www.meenagam.com/முள்ளிவாய்கால்-நினைவேந-2/

  • கருத்துக்கள உறவுகள்

கருணா கும்பலுக்கு பிணை.. பிள்ளையான் கும்பலுக்கு பிணை.. டக்கிளஸ் கும்பலுக்கு பதவி.. கொலைகாரச் சிங்களவர்களுக்கு ஆட்சியில் அதிகாரம்.. மன்னிப்பு.. ஆனால்.. முள்ளிவாய்க்காலில்.. சொந்த உறவுகளை இழந்ததை நினைவு கூர்ந்தால்.. அது மோசமான குற்றம். சொறீலங்கா நீதித்துறை என்பது ஒரு கோமாளித்துறை. 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிரானில் நினைவேந்தல் மேற்கொண்டவர்களுக்கு ஆகஸ்ட் 09 திகதிவரை விளக்கமறியல் நீடிப்பு

 
1.jpg


ரூத் ருத்ரா

மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  நிகழ்வு நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கல்குடா பொலிசாரினால் கடந்த மே18 திகதி  இரு பெண்கள் உட்பட்ட 10பேர் கைது செய்யப்பட்ட வழக்கு இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது

வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் அவர்கள் முன்னிலையில் இவ் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் மனித உரிமை செயற்பாட்டாளருமான சட்டத்தரணி ரெட்ணவேல் மற்றும்  கே.சுகாஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள்  கைது செய்யப்பட்ட (10) பேர் சார்பாக ஆயராகியிருந்தனர்.

குறித்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட்  மாதம் 09.08.2021 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் எவ்விதமான அறிக்கை மற்றும் அடையாளங்களும் மன்றில்  பொலிசார் சமர்ப்பிக்க வில்லை.

அத்தோடு பத்து சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவில்லை

 

http://www.battinews.com/2021/07/09.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.