Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவை கட்டுப்படுத்த தனி மனிதன் ஒவ்வொருவரும் கவனமாக உணர்ந்து செயற்படவேண்டும் - பிள்ளையான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆடைத்தொழிற்சாலையை மூடிவிடமுடியும். ஏதோ இதை தடைசெய்துவிட்டால் மாத்திரம் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என எண்ணவேண்டாம்.

கொரோனா தொற்றை தடுத்துக் கொண்டு பட்டினியும் வராமல் பொருளாதாரத்தை வீழ்சியடையாமலும் கவனமாக வெற்றி நடைபோட மக்கள் கவனமாக உணர்ந்து செயற்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என அறியப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார் 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இன்று பலரிடம் இருந்து ஆடைத்தொழிற்சாலையில் இருந்து தொற்றுவருகின்றது முறைப்பாடுவருகின்றது ஆடைத்தொழிற்சாலையை மூடிவிடமுடியும் அதில் அதிகமான பிள்ளைகள் அதிகமாக பணியாற்றுகின்றார்கள்  என்பதற்காக கொரோனா தொற்றாது என்பற்கல்ல 

இதை எப்படிக் கட்டுப்படுத்தி அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் உற்பத்தியை அதிகரித்து வெளிநாட்டுவருமானத்தை ஈட்டக்கூயதை கவனமாக கையாளமுடியும் என்பதை ஆராயுங்கள் முடிந்தால் பணியாற்றுபவர்களை அவர்களது வீடுகளில் கவனமாக சென்று வருதற்கான சூழ்நிலை ஏற்படுத்த முடியுமானால் அதை செய்யவேண்டும்.

84.jpg

மக்கள் எல்லாவற்றையும் நிறுத்தவேண்டும் என்னமுள்ளவர்கள் நாங்கள் கிராம பொருளாதாரத்தில் வாழும் மக்கள் ஏன் ஒட்டுமொத்த நாட்டிலேயும் 40 வீதமான மக்கள் அன்றன்று உழைத்து வாழுகின்ற மக்கள் இதனைகருத்தில் கொள்ளாமல் இயங்கமுடியாது பொறுப்பாக சிந்தியுங்கள் ஏதோ இதை தடைசெய்துவிட்டால் மாத்திரம் கொரோனாவை கட்டுப்படுத்திவிடலாம் என எண்ணவேண்டாம். 

இந்த கொரோனா தொற்றை தடுத்துக் கொண்டு பட்டினியும் வராமல் பொருளாதாரத்தை வீழ்சியடையாமலும் கவனமாக வெற்றி நடைபோடவேண்டும் என்கின்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பது எமது கருத்து அதற்காக பொறுப்பு இல்லாமல் யாரும் இயங்கவேண்டாம். 

மட்டக்களப்பிலும் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது கவலையளிக்கின்றது கொரோனா தொற்று ஆரம்ப காலத்தில் ஏற்பட்டபோது மக்கள் அதிக கவனம் செலுத்தினார்கள.; ஆனால் தற்போது  அது குறைவாகவுள்ளது. இருந்தபோதும்  இப்போது எல்லாவிதமான தடைகளும் இருக்கும்போது மக்கள் கவனமாக தனித்தனி மனிதராக பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இருக்கவேண்டும.; 

உதாரணமாக மருதநகரில் ஒருவருக்கு சந்தேகத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு அறிக்கை வருவதற்கு முன்னர் அவர் அங்கு நடந்த மரணவீட்டில் கலந்து கொண்டார். அதன்காரணமாக அந்த மரணவீட்டில் கலந்துகொண்ட 25 பேருக்கு தொற்று ஏற்பட்டது எனவே ஒரு தனிநபருக்கு தெரியவேண்டும் எனக்கு சந்தேகம் வந்திருக்கின்றது பி.சி.ஆர் எடுத்திருக்கின்றேன் அறிக்கை கிடைக்கும் வரைக்கும் நான் வீட்டுக்குள் இருக்கவேண்டும் என.

இப்படியான விடயங்களினால் தற்போது 2 ஆயித்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று பரவியுள்ளதுடன் 25 பேர் மரணமடைந்துள்ளனர் இது விரைவாக அதிகரித்தால் எப்படி கட்டுப்படுத்துவது என சுகாதார பிரிவினருக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது ஆகையால் மக்கள் கவனமாக உணர்ந்து செயற்படவேண்டும் 

வீடுகளில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு  ஏனைய பிரச்சனைகள் வரலாம். இவ்வாறு பல நெருக்கடிகள் இருக்கமுடியும் இந்த நெருக்கடிகளை சமாளித்து கட்டுப்படுத்தினால் மாத்திரம் இதில் இருந்து மீளமுடியும். 

அரசாங்கம் என்ற அடிப்படையிலே நாங்கள் விரைவாக தடுப்பூசி  எற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம். அதற்கமைய சில நாட்களில் தடுப்பூசி  மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற நிர்வாகத்தை இயக்குவதற்கு கிராமம் தோறும் இருக்கின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு, உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து பணியாற்றுனகின்றவர்கள் மற்றும் பிரதேசசபை தவிசாளர்கள் போன்ற நேரடியாக மக்களுடன் கடமையாற்றுகின்றவர்களுக்கும் அடுத்த கட்டமாக வர்த்தகர்கள் வியாபாரிகள் போன்றவாகளுக்கு தடுப்பூசி ஏற்ற முயற்சி எடுத்துள்ளோம் என்றார். 

கொரோனாவை கட்டுப்படுத்த தனி மனிதன் ஒவ்வொருவரும் கவனமாக உணர்ந்து செயற்படவேண்டும் - பிள்ளையான் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.