Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் இரத்தக்களரியை ஏற்படுத்திய சிங்களம் மட்டும் சட்டமூலம் – இன்று 65 வருடங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இரத்தக்களரியை ஏற்படுத்திய சிங்களம் மட்டும் சட்டமூலம் – இன்று 65 வருடங்கள்

 
banda-01-696x348.png
 53 Views

இலங்கையில் பெரும் இரத்தக்களரிக்கு வழிவகுத்த சிங்களம் மட்டும் சட்டமூலம் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட தினம் இன்றாகும்.

சிங்களம் மட்டும் சட்டம், அதிகாரபூர்வமாக, “1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம்” என்ற பெயரில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு ஜூ ன் 5 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

“சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி” என்ற சட்டத்தைக் குறிக்கும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சி மொழியாக அதுவரை காலமும் இருந்த ஆங்கில மொழி அகற்றப்பட்டு பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.

தமிழ் எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டமூலம் உடனடியாகவே இலங்கையில் பெரும் இரத்தக்களரிக்கு வழிவகுத்தது. இனநெருக்கடி தீவிரமடைந்து – ஆயுதப் போராட்டமாக வளர்ச்சியடைவதற்கும் இந்தச் சட்டமூலமே முக்கிய பங்களிப்பை வழங்கியது.

1944 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்தனா ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களத்தை அதிகாரபூர்வ மொழியாக்க வேண்டும் என அரசாங்க சபையில் கோரினார். ஆனாலும் ஆங்கிலம் தொடர்ந்து 1956 வரை ஆட்சி மொழியாக இருந்து வந்தது

1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்று டொமினியன் அந்தஸ்து பெற்றது. 1951 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சியின் மகாஜன எக்சத் பெரமுன கூட்டணி 1956 தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது.

பண்டாரநாயக்காவின் அமைச்சரவை பதவியேற்று 53 நாட்களுக்குள் (1956, ஜூன் 5) சிங்களம் மட்டும் சட்டம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்தது. தமிழ்க் கட்சிகள், மற்றும் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்டுகள் எதிர்த்து வாக்களித்தனர்.

இச்சட்டமூலத்தின் காரணமாக அரசுப் பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். இதனை எதிர்த்து அரசப் பணியிலிருந்த தமிழர்கள் பலர் பதவி விலகினார்கள்.

இச்சட்டத்தினை சில தமிழ், மற்றும் சிங்கள இடதுசாரி உறுப்பினர்கள் கூட எதிர்த்தனர். எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் பல போராட்டங்கள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழர் பகுதிகளில் அரசின் செயற்பாடுகள் இயங்க விடாது செய்யப்பட்டன.

“ஒரு மொழி இரண்டு நாடுகள்! இரண்டு மொழிகள் ஒரு நாடு” என இது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் போது லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராக இருந்த கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா அப்போது தீர்க்கதரிசனமாகச் சொல்லியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவற்றுக்கு மத்தியிலும் உறுதியாக நின்று இச்சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தினார் பண்டாரநாயக்க. நாட்டில் ஒரு பாரிய இரத்தக்களரிக்கான அத்திவாரத்தை இதன்மூலம் அவர் போட்டார்.

 

 

https://www.ilakku.org/?p=51514

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியில் சில விடயங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன. அவையாவன:

1. தமிழர் மட்டுமல்ல, பெரும்பாலான நகர்ப்புற சிங்களவர்களும் சிங்களம் மட்டும் சட்டத்தால் பதவி இழந்தார்கள். இதற்கு காரணம் இவர்களுக்கு சிங்களத்தில் எழுத படிக்க தெரியாததே. இவர்கள் அனைவரும் சிறுவயதில் இருந்தே ஆங்கில மொழியில் கல்வி கற்று ஆங்கில மொழியிலேயே தொழில்புரிந்து வந்தவர்கள். 

2. செல்வநாயகத்தின் வேண்டுகோளை ஏற்று, சட்டரீதியாக தமிழர் பகுதிகளில் தமிழ் அரசகரும மொழியாகவும் கல்வி மொழியாகவும் பயன்பாட்டுக்கு வந்தது. இது பண்டாரநாயக்கவாலேயே நியாயமான தமிழ் பயன்பாடு என சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது. மிக நீண்டகாலத்தின் பின் பிரேமதாசவால் தமிழும் சிங்களத்துக்கு நிகராக உத்தியோக மொழியாகவும் தேசிய மொழியாகவும் நாடளாவிய அளவில் சட்டமாக்கப்பட்டது.

3. ஆங்கிலம் அரசகரும மொழியாக இருந்த காலத்தில் மிகப்பெரும்பானமையான தமிழரும் சிங்களவரும் ஆங்கிலம் புரியாத காரணத்தால் வேலைவாய்ப்பில்லாமலும் அரசாங்கத்துடன் தொடர்புகொள்ள முடியாமலும் மிகவும் வருந்தினார்கள். “சிங்களம் மட்டும்”சட்டம் இந்த சிங்களவர்கள் சிங்களத்திலும், தமிழர் தமிழ் பகுதிகளில் தமிழிலும் உயர்கல்வி கற்கவும் அரச வேலைவாய்பபுகளை பெறவும் அரசாங்கத்தோடு தொடர்புகொள்ளவும் வழிவகுத்தது.

இனவெறி கொண்டவர்களும், இனவெறியால் அரசியல் ஆதாயம்தேட மக்களை பலிகொடுத்தவர்களும் மேற்படி தகவல்களை முழுமையாக எப்போதும் இருட்டடிப்பு செய்து வருகிறார்கள்.

 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கற்பகதரு said:

இந்த செய்தியில் சில விடயங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன. அவையாவன:

1. தமிழர் மட்டுமல்ல, பெரும்பாலான நகர்ப்புற சிங்களவர்களும் சிங்களம் மட்டும் சட்டத்தால் பதவி இழந்தார்கள். இதற்கு காரணம் இவர்களுக்கு சிங்களத்தில் எழுத படிக்க தெரியாததே. இவர்கள் அனைவரும் சிறுவயதில் இருந்தே ஆங்கில மொழியில் கல்வி கற்று ஆங்கில மொழியிலேயே தொழில்புரிந்து வந்தவர்கள். 

2. செல்வநாயகத்தின் வேண்டுகோளை ஏற்று, சட்டரீதியாக தமிழர் பகுதிகளில் தமிழ் அரசகரும மொழியாகவும் கல்வி மொழியாகவும் பயன்பாட்டுக்கு வந்தது.

3. ஆங்கிலம் அரசகரும மொழியாக இருந்த காலத்தில் மிகப்பெரும்பானமையான தமிழரும் சிங்களவரும் ஆங்கிலம் புரியாத காரணத்தால் வேலைவாய்ப்பில்லாமலும் அரசாங்கத்துடன் தொடர்புகொள்ள முடியாமலும் மிகவும் வருந்தினார்கள். “சிங்களம் மட்டும்”சட்டம் இந்த சிங்களவர்கள் சிங்களத்திலும், தமிழர் தமிழ் பகுதிகளில் தமிழிலும் உயர்கல்வி கற்கவும் அரச வேலைவாய்பபுகளை பெறவும் அரசாங்கத்தோடு தொடர்புகொள்ளவும் வழிவகுத்தது.

இனவெறி கொண்டவர்களும், இனவெறியால் அரசியல் ஆதாயம்தேட மக்களை பலிகொடுத்தவர்களும் மேற்படி தகவல்களை முழுமையாக எப்போதும் இருட்டடிப்பு செய்து வருகிறார்கள்.

 

இதென்ன புதுக்கதை.

பிரிட்டிஷ் காலத்தில், ஆங்கிலம் படித்து, சிவில் வேலைகளில் இருந்த தமிழர்களுக்கு ஆப்பு வைக்கவே இந்த சமூலம் வந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.