Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாங்கல்ய தாரணம்

Featured Replies

மாங்கல்ய தாரணம்

மாங்கல்யதாரணம் - தாலி கட்டுதல். மனித வருக்கம் நீங்கலாகமற்றப் பிராணி வருக்கங்க ளெல்லாவற்றிலும் கலியாணமில்லாமலே வருக்க விருத்தி நடந்துவருகிறது. மனித வருக்கத்தில் அப்படிப்பட்டவிருத்திகுறைவு. கலியாணம் என்பது மனித வருக்கத்திற்றானுண்டு. கலியாணஞ் செய்யும் விதம் தேசந் தோறும், சமுகந்தோறும், சமயந்தோறும் பேதப்பட்டிருக்கும். அப் பேதங்களில் சைவசமயத்தவரின் கலியாணம் ஒன்று. அது தனக்கென விதிமுறை யுடையது. அவ்விதிமுறை சிவாகம சார்பாயது. அது சிறப்புடைய புராண சரித்திரங்கள் பலவற்றில் அமைந்து கிடப்பதைக் காணலாம். மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டுவது ஒரு விதி. கிறிஸ்தவக் கலியாணங்கள் கிறிஸ்தவக் கோவில்களில் நடைபெறுகின்றன. ஆனால் இசுலாமியரின் கலியாணங்கள் அவர்களுடைய வீடுகளில் நடக்கும்; மசூதிகளில் நடவா. இந்துக்கள் எனப்படுவோரின் கலியாணமும் நாளிதுவரை வீடுகளிற்றான் நடந்து வருகிறது. ஒரு சமயத்தின் பழக்க வழக்கத்தை இன்னொரு சமயம் காபியடிப்பதாயின், காபியடிக்குஞ் சமயம் அந்த அளவில் எளிமையுடைய தென்பதே பொருள். கிறிஸ்தவ முறையைப் பின்பற்றிப் போலும் சில காலமாகச் சைவ சமயக் கோவில்களில் சைவ சமய கலியாணங்கள் சில நடத்தப்பட்டு வருகின்றன. தாலி கட்டப்படுவது அங்கே தான். நூலுரைத்த விதி ஏற்கப்படுவதில்லை. ஒருவன் ஒருத்தியுடனும், ஒருத்தி ஒருவனுடனும் கூட்டு வாழ்க்கை முதன் முதலில் நாலுபேரறியத் தொடங்கினால் அதுவே எதிர் காலத்திற் போதும் என்பது இக்காலைக் கருத்து.அவ்வாழ்க்கை கோவில்களிலிருந்து தொடங்கலாம் என்கிறார் சிலர்.

'கோவில்களில் அம்மன் சிலை இருக்கும் அர்த்த மண்டபத்தில் மாப்பிள்ளையும் மணப் பெண்ணும் நிற்க வேண்டும். அம்மனின் பாதத்தில் திருமாங்கல்யத்தை கோவில் பட்டர் வைத்து அர்ச்சனை செய்வார். அம்மனுக்கு தீபாராதனை முடிந்த பின்பு திருமாங்கல்யத்தை எடுத்து மாப்பிள்ளையின் கையில் பட்டர் கொடுப்பார். அதை மணப் பெண் கழுத்தில் மாப்பிள்ளை கட்டுவார்' (9-3-1963 தினமலர்) எனச் சென்னைச் சட்டசபையில் தாலி கட்டும் விஷயம் பேசப்பட்டது. கலியாணம் உலக விஷ்யம், அதற்கும் சமயத்துக்குந் தொடர்பில்லையென்றால் சட்டசபையில் சொன்னபடி கலியாணத்துக்குங் கோவில்களுக்கும் சம்பந்தம் வேண்டாம். கலியாணம் கோவில்களில் நடக்க வேண்டும் என்றால், கலியாணம் நடக்குங் கோவில் எந்தச் சமயத்தைச் சார்ந்ததோ அந்தச் சமயத்தைத்தான் அக்கலியாணமுஞ் சார்ந்ததாகும். அது பற்றிய பிரசினை அச்சபையில் வேண்டுமா? நிதிமந்திரி மொரார்ஜி தேசாய் 'தாலி மிகவும் புனிதமானது என்பதை நான் மறுக்கவில்லை' ஆனால், புனிதத்தன்மை தாலிக்குத்தான் இருக்கிறது: தங்கத்துக்கு இல்லை' (10-6-1963 தினமணி) எனக் கூறித்தாலியின் புனிதத்தன்மையைச் சம்மதித்தார். அவர் தங்கத்தில் தாலி செய்வதைச் சம்மதியா விட்டாலும் இரும்புத் துண்டிலும் ஈயத்துண்டிலும் அது செய்ய அவருக்கு மனமிராது என்னலாம். தாலிகளும் பலவிதமா யிருக்கும். அவற்றுள் சைவ சமயத்தாலி எவ்விதமுள்ளது? மணமக்களாவது அதனை அறிந்திருக்க வேண்டும். அதிற் சின்னமொன் றிருக்கும். அது பிள்ளையார். 'இலகொரு மருப்ப னெனமலர் கமல மெனவெழிற் சிவலிங்க மெனச் செய்-தலரொளி யரும்பைந் திழைத்துறு துணைபாலாக்கிமற் றதனிடையிரண்டு-குலவிய கனகக்கயிறுகோத் ததுதான் கோதின்மங் கிலியமாங்கண்டாய் - மலர்தலை யுலகம் வியத்தகு மன்றல் வரவினைப் புகலுதுங் கேளாய்' என்றது திருவானைக்காப் புராணம்.

சுப்பிரப்பேதம் என்னும் ஆகம விஷயம் அப்புராணப்பாடல். சைவ சமயத்தாலி சிவலிங்க வடிவத்துடன் அல்லது விநாயக வடிவத்துடன் கூடியதாயிருக்க வேண்டு மென்பது கருத்து. கமல வடிவம் அவ்விருவரின் திருவடிக் கடையாளம். வெறுந் தங்கத்துண் டல்லாமல் சிவலிங்க வடிவத்துடன் கூடிய அத்தாலியை அம்மன் பாதத்தில் வைக்க வேண்டுமாம்; ஏன் சாமி பாதத்தில் வைக்கக் கூடாது? அம்மன் கழுத்திலும் தாலியுண்டு. அதை அவ்வம்மன் தன் பாதத்தில் வைக்கச் செய்து பிறகு சாமி கையிற் கொடுப்பித்துத் தன் கழுத்தில் கட்டிக் கொண்டாளோ? சிவலிங்க வடிவத் தாலியைச் சிவலிங்கத்தி னடியில் வைப்பதுதானும் நியாயமன்று. சிவபிரானுக்குக் கோவிலிலுள்ள அம்மன் மனைவி, முருகன் மகன், தெய்வயானையும் வள்ளியும் மருகியர். அவ்வம்மன் முதலியவர்களின் பாதங்களில் அத்தாலியைக் கொண்டு போய் வைப்பது கணவன் தந்தை முதலிய உறவி லிருப்பவரின் கால்மாட்டிற் கிடத்துவது போலாகும். எத்துணைப் பயங்கரமான சிவநிந்தை அது! 'வெருவருஞ் செலவின் வேழ முகத்தனை விதித்த சாபப்-பெருவலி தன்னைச் சாரும் பெற்றியாற் சாபங் கூறா-னருவரை நெஞ்ச போழ்ந்த- வள்ளிலை வடிவேற் செங்கை-முருகனை வணிகர் தம்மின் மூங்கையாகென்றா னிப்பால்' என்ற திருவிளையாடற் புராணத்தால் சிவபிரானாராலும் சபிக்கப்படாதவர் விநாயகர் என்பது தெரிகிறது. அவரது பிரபாவத்தை விநாயக புராணத்தாலுந் தெரியலாம். அவர் வடிவத் தாலியை அம்மனின் பாதத்திலும் தம்பியாகிய முருகனின் பாதத்திலும் வைத்தலும் அப்படிப்பட்ட நிந்தையே. சைவ மக்கள் தம் வாழ்வையே மலர வைக்கிற மகிழ வைக்கிற தாலியை அதிலுள்ள வடிவங்களைக் கருதாமல் மேலே சொன்னபடி கோவில்களிற் கொண்டு போய் வைக்க இடங் கொடுப்பது சைவ சமய தருமமாகாது.தாலி போன்றதொரு சின்னம் தேசியக் கொடி. அதை இப்படித்தான் உருவாக்க வேண்டும். இன்னின்ன கருத்துடையதெனத்தான் பாவிக்கவேண்டும். இப்படித்தான் பறக்கவிட வேண்டும் இப்படித்தான் வணங்கவேண்டும் என நிலையான பல விதிகளிருக்கின்றன. அவற்றின்படிதான் அத் தேசத்தவர் அக்கொடியை மதிக்க வேண்டும். அப்படியின்றி அதனை எவரும் தம் போக்குப் போலக் கையாள முடியாது. தாலியும் அத்தகையதொரு கெளரவமுடையது. அதனைத் தரிப்பதற்கு முன் அதனை நூல் சொன்ன முறையில் மதிப்பதே நியாயம். சைவ சமயக் கலியாணம் வீடுகளில் நடத்தற்குரிய வைபவம். திருஞான சம்பந்த சுவாமிகளின் கலியாணம் வீட்டில் நடந்தது. அவர்கள் தன் மனைவியாருடன் சென்று 'கல்லூர்ப் பெருமணம் வேண்டா' எனச் சிவபிரானிடம் வேண்டிக் கொண்ட விடம் கோவில். கலியாணத்தை வெறுக்க வேண்டுமிடத்தில் கலியாணஞ் செய்வதை விட்டு வீட்டிற் கலியாணஞ் செய்து கொள்வதாயின் அங்கே தாலி மதிப்புற்று விளங்கும்.

Edited by ArumugaNavalar

  • கருத்துக்கள உறவுகள்

தாலி மஞ்சளைக் மஞ்சள்பொடியில் தோய்த்த கொடியில் செய்யப்படுவதா? அல்லது பொன்னுருக்கி 9 பவுண், 11 பவுண், ... என்று தங்கத்தில் செய்வதா? ஏதாவது விளக்கம் இருந்தால் உபயோகமாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.