Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருச்சி சிறப்பு முகாமில் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி சிறப்பு முகாமில் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகள்

Capture.JPG-1-1-696x352.jpg
 87 Views

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகள் உட்பட அங்கு தடுப்பில் உள்ளவர்கள் தங்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று(09) ஆரம்பித்துள்ளனர். 

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் தாங்கள் இந்த சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த அரசாங்கத்தில் தங்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்றும், தற்போதைய அரசாங்கம் தங்களுக்கு சரியான நீதியை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Capture-6-1024x645.jpg

  • தமிழக முதல்வருக்கு எங்களது கோரிக்கை! சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத் தமிழரை சித்திரவதை செய்வது ஏன்?
  • இந்தக் கொடிய கொரோனா காலத்தில் எங்கள் குடும்பத்தினர் வெளியில் உள்ளனர். கருணை அடிப்படையில் எங்களை எங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழவிடுங்கள்.
  • நீதி வேண்டும். நீதி வேண்டும். தமிழக அரசே நீதி வேண்டும். சிறு சிறு குற்ற வழக்கு. தீர்வு இன்றி தண்டனைக் காலத்திற்கும் மேலாக சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ளோம்.

போன்ற பதாகைகளை வைத்து, தமிழக அரசிடம் தங்களுக்கான நீதியை வேண்டி இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ள மகேந்திரன் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், தான் 8 வருடங்களாக இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் பிறந்தவர்களும் இந்த முகாமில் உள்ளதாகவும், சென்ற அரசாங்கத்தில் தங்களுக்கான நீதி கிடைக்கவில்லை. இந்த அரசாங்கத்தில் அது கிடைக்கும் என்று நம்புகின்றோம். எங்களுக்கு உடனடியாக விடுதலை வேண்டும். நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு நாம் பெரும் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். முகாம்களில் எங்கள் உறவுகளுடன் வாழ கருணை காட்டுங்கள். நடவடிக்கை எடுங்கள். இல்லையெனில், எங்களை கொன்று எங்கள் உடல்களை எங்கள் உறவினர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். இந்த உண்ணாவிரதம் தொடரும். உண்ணாவிரதத்தில் இழப்புகளை சந்திக்காமல் எங்களுக்கு நல்லதொரு தீர்வினைத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

மேலும் ஒரு கைதி கருத்துத் தெரிவிக்கையில், தமிழக முதல்வருக்கு எங்கள் இரண்டாவது கோரிக்கை. சென்ற வாரம் ஒரு கோரிக்கையை வைத்திருந்தோம்.  மீண்டும் அதே கோரிக்கையை வைத்து எங்கள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். எங்களை தயவு செய்து விடுதலை செய்யுமாறு மிகத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறோம் என வீடியோ பதிவு செய்து சமூகவலைத் தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=51950

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணை கொலை செய்து விடுங்கள் – சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்

 
1-32.jpg
 15 Views

“சிறப்பு முகாம் எனும் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கருணை கொலை செய்து விடுங்கள்” என்ற கோரிக்கையை முன் வைத்து  ஈழ தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் 78 பேர் உள்ளனர்.

இந்நிலையில், தங்களை பொய் வழக்கில் கைது செய்தும் அந்த வழக்கில் தண்டனைக் காலத்திற்கு மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர் என்றும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஈழத் தமிழர்களிடம் காவல் உதவி ஆணையர் மணிகண்டன், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. அப்போது போராட்டம் நடத்தினால், வழக்குப் பதிவு செய்து, கைது செய்வோம் என்று  காவல்துறையின் மிரட்டுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=52016

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 80 ஈழத் தமிழர்கள் விடுதலை கோரி உள்ளிருப்பு போராட்டம்!

June 10, 2021
 

தமிழக அரசே!
ஈழத் தமிழர்களை அடைத்து வைத்துள்ள சித்திரவதை முகாம் எனும் திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடு என தமிழின உணர்வாளர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் நீண்ட நாட்களாக விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ள 80 ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

20210610_112259.jpg?resize=640%2C354
  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களின் போராட்டம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் மு.க.ஸ்டாலினுக்கு அவசர கடிதம்

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் இன்று திங்கட்கிழமை ஆறாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தம்மை விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல், கருணைக் கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த அவசர கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இலங்கை வாழ் தமிழ் மக்கள் அயல் நாடானா இந்திய தாய் திரு நாட்டில் அடைக்கலம் புகுந்த வேளையில் இது வரை காலமும் ஆற்றி வந்த அளப்பரிய நன்மைகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.மேலும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு முகாம்களில் வாழும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் சிரமங்களையும் கஸ்டங்களையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கான தீர்க்கமான சாகமான முடிவுகளை எடுக்குமாறு தங்களை வேண்டி நிற்கின்றேன்.அத்தோடு இந்த குடும்பங்களின் ஒரு சில குடும்ப தலைவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து தங்கள் வாழ்க்கையினை முன்னெடுக்க எதிர் பார்த்துள்ளனர்.

முகாம்களில் வாழும் ஈழத் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும், திருச்சி சிறப்பு முகாமில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களின் விடுதலை தொடர்பாகவும் இவர்களுடைய மன ஆதங்கத்தை கருத்தில் கொண்டு இவர்களுடைய விடுதலைக்காகவும் மேலான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் எனவும் நான் நம்புகிறேன் என குறித்த கடிதத்தில் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.(15)

 

 

http://www.samakalam.com/திருச்சி-சிறப்பு-முகாமில/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.