Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீளாய்வுக்கு உள்ளாகிறது பயங்கரவாத தடைச்சட்டம்: அலி சப்ரி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.ராம்)
நடைமுறையில் உள்ள 1979ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். 

அத்துடன், நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படும் விமர்சனங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பினை மையப்படுத்தியே இந்த மீளாய்வு முன்னெடுக்கப்பட்டு திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ali.jpg

இதற்காக நீதி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களும் கூட்டாக இணைந்து பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்காக செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  மேலும், இந்த மீளாய்வைச் செய்வதற்காக நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்குரிய அனுமதியை அமைச்சரவையிடத்திலிருந்து பெறவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

இதற்காக, அமைச்சரவைப் பத்திரமொன்றை முதலில் தயார் செய்வதற்கு நீதி, வெளிவிவகார, பாதுகாப்பு அமைச்சுக்களிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இந்த விடயத்தினை அடுத்துவரும் காலப்பகுதியில் விரைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

இதேவேளை, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அந்ததீர்மானத்தில் இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்தோடு, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவது, மீளாய்வு செய்வது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவை உட்பட சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவான புதிய சட்டத்தினை அல்லது திருத்தப்பட்ட சட்டத்தினை உருவாக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஜுன் மாதம் நான்காம் திகதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மீளாய்வுக்கு உள்ளாகிறது பயங்கரவாத தடைச்சட்டம்: அலி சப்ரி..! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

June 12, 20211:

அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இருதரப்பு வர்த்தக உறவுகளை இது பாதிக்கக்கூடும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் இன்று இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு பலமான செய்தியை சொல்லியுள்ளது.

மோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் தன்னிச்சையாக தடுத்துவைத்தல், சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றால் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக தனது கவனத்தை இந்தத் தீர்மானம் வெளிப்படுத்தியுள்ளது. சிறுபான்மை சமூகங்கள் உட்பட சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களை குறிவைக்க அரசாங்கம் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது. குறிப்பாக, பிரபல வழக்கறிஞரான ஹெஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞரான அனாஃப் ஜசீம் ஆகியோர் இருவரும் இந்தச் சட்டத்தின் கீழ் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல தசாப்த கால உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற பரவலான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தடைசெய்ததையும் ஐரோப்பிய நாடாளுமன்றம் கண்டித்தது. கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள முன்னாள் இராணுவ தளபதிகள் அரசாங்கத்தின் மூத்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்று இத் தீர்மானம் குறிப்பிடுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை, ஆதாரங்களை சேகரித்து அதனை ஆய்வுக்குட்படுத்தி எதிர்காலத்தில் அதனை பயன்படுத்துவதற்காக ஒரு புதிய முயற்சிக்கு ஒப்புதல் அளித்திருந்தது. மீண்டும் கடுமையான மனித உரிமை மீறல்கள் நிகழும் இலங்கையின் மோசமான இருட்டான பாதையின், ஆனால் துல்லியமான படத்தை ஐரோப்பிய பாராளுமன்றத் தீர்மானம் வழங்குகிறது. அதில் இன அடிப்படையிலான, சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான பாகுபாடு, மூன்றாம் பாலின மக்களின் நிலை மற்றும் ஆடை தொழிற்சாலைத் தொழிலாளர் எதிர்கொள்ளும் நெருக்கடி ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன

2017 ஆம் ஆண்டு முதல், ஜிஎஸ்பி+ ( GSP+) எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளப்பட்ட வர்த்தக உடன்படிக்கையினால் இலங்கை பயனடைந்து வந்துள்ளது. சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களை நடைமுறைபடுத்துவதில் காணப்படும் முன்னேற்றத்திற்கு ஏற்ப, சிறந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தை வாய்ப்புகளை இது வழங்கிவந்தது. இத் தீர்மானம் “ஜி.எஸ்.பி + ஐ இலங்கை அரசாங்கம் அதன் பயங்கரவாத தடைச் சட்டத்தை, சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கமைவாக முற்று முழுதாக இசைந்து நடப்பதற்கும், அதன் முன்னேற்றத்திற்கும் அழுத்தம் கொடுப்பதற்குரிய ஒரு ஊக்கியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய ஆணையத்திடம் அழைப்பு விடுத்திருக்கிறது.

குறிப்பாக, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் ஐ.நா. வின் திட்டத்திற்கு வழங்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியை, உடனடியாக மீள் மதிப்பீடு செய்ய வேண்டுமெனவும் , அதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இலங்கையின் சிவில் சமூகத்திற்கான தங்கள் ஆதரவை அதிகரிக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஆணையத்தை இத் தீர்மானம் கோருகிறது.

இலங்கை அரசாங்கம் தன்னை நட்பு நாடுகள் அக்கறையுடன் அவதானித்து வருவதை உணர்ந்து கொள்வதுடன், உலகெங்கிலும் உள்ள அதன் நண்பர்கள் இலங்கையில் அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஒன்றுபட்டுச் செயல்பட முடியும் என்பதையும் உணர்த்த வேண்டும்."""""

இந்தச் செய்தி இன்று ahalnews.Com ல் வந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.