Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் இஸ்­லா­மி­யர்­களைப் பாது­காக்க முயற்­சித்­தோமே தவிர அவர்­க­ளுக்கு எதி­ராக ஒரு போதும் செயற்­ப­ட­வில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

196469205_4155331747886459_6480635750699649803_n.jpg?_nc_cat=100&ccb=1-3&_nc_sid=110474&efg=eyJpIjoidCJ9&_nc_ohc=uv42_BI3QAAAX-Of3gj&_nc_ht=scontent.fcmb4-1.fna&tp=14&oh=9b4918451e2418f98ee19722cb91b682&oe=60CCDD26

 

ஏ.ஆர்.ஏ.பரீல்

கடந்த வாரம் கொழும்பில் நடை­பெற்ற ஊடக மாநா­டொன்றில் கலந்து கொண்டு 

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணைகள் குறித்து கத்­தோ­லிக்க பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் தெரி­வித்த முக்­கிய கருத்­து­களை தொகுத்து தரு­கிறோம்.

 

நமது நாட்டின் இன்­றைய நிலை தொடர்பில் நாம் மிகவும் கவ­லைப்­ப­டு­கிறோம். அதற்குப் பல கார­ணங்கள் உள்­ளன. எமது கடல் எல்­லையில் தீப்­பற்­றிய கப்பல் மாத்­திரம் பிரச்­சி­னை­யல்ல. இந்­நாட்டில் ஆட்­சி­யொன்று இருக்­கி­றதா? என்ற சந்­தேகம் எழு­கின்­றது. இலங்கை முக்­கிய கேந்­திர நிலை­யத்­தி­லுள்ள ஒரு நாடு. இந்­நாட்டை பாது­காப்­ப­தாக அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொண்­ட­வர்கள் நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் சென்­றுள்­ளார்கள். இது மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

 

எமது எதிர்ப்­பார்ப்­புகள் அனைத்தும் சிதைந்து போயுள்­ளன. நாடு எங்கு செல்­கி­றது? நாட்டை யார் ஆட்சி செய்­கி­றார்கள். யார் தீர்­மானம் மேற்­கொள்­கி­றார்கள்? என்று எமக்குத் தெரி­ய­வில்லை . நாட்டில் நிச்­ச­ய­மற்ற சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. அதனால் நாம் அனைத்து மக்­களும் தயவு செய்து இந்தப் பய­ணத்தை நிறுத்திக் கொள்­ளுங்கள் என்று ஆட்­சி­யா­ளர்­களைக் கேட்க வேண்­டி­யுள்­ளது.

 

இருக்கும் வளங்­களை விற்­பனை செய்­வது அபி­வி­ருத்­தி­யல்ல. இருக்கும் வளங்­களை விற்­பனை செய்­வது இல­கு­வாகும். எமக்கு ஆத்ம திருப்தி என்று ஒன்று உள்­ளது. இதனைப் பாது­காப்­பது அர­சி­யல்­வா­தி­களின் கட­மை­யாகும். இந்­நி­லையில் பல நாடு­க­ளுக்கு எமது பூமியை பூஜை செய்ய வேண்டாம் என்று நாம் வேண்டிக் கொள்­கிறோம். எமது ஆத்ம கௌர­வத்தைப் பாது­காத்துக் கொள்­ளுங்கள். நாட்டின் வளங்கள் அனைத்­தையும் விற்­பது நாட்டின் நன்­ம­திப்­புக்கு எதி­ரா­ன­தாகும்.

 

எம்.சி.சி. உடன்­ப­டிக்­கையை நாம் எதிர்த்த போது அதற்கு ஆத­ர­வ­ளித்த இந்­நாட்டின் அர­சி­யல்­வா­திகள் இன்று அதனை விட மோச­மான செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வது எமக்குத் தெரி­கி­றது. இது குறித்து நாம் கவ­லைப்­ப­டு­கிறோம். இந்­நாட்டில் பாரிய சதித்­திட்­ட­மொன்று மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக முன்னாள் சட்­டமா அதிபர் தெரி­வித்­துள்ளார். அதா­வது உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் பின்­ன­ணியில் சதித்­திட்டம் இருந்­துள்­ள­தாக முன்னாள் சட்­டமா அதிபர் தெரி­வித்­துள்ளார். அந்த சதித்­திட்டம் என்ன என்­பதை நாம் அறிய வேண்டும். அவர் அப்­படிக் கூறினால் அதன் பின்­ன­ணியை அவர் தேடிப் பார்க்க வேண்டும். இல்­லையேல் அந்தப் பத­வியை தற்­போது ஏற்­றுள்ள புதிய சட்­டமா அதிபர் இது தொடர்பில் ஆராய வேண்டும். இந்­நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அவர் கட­மைப்­பட்­டுள்ளார்.

 

தாக்­கு­தலில் தொடர்­பு­பட்­ட­வர்கள் சில­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­ம­லி­ருக்கும் சூழ்­நி­லையை அர­சாங்கம் உரு­வாக்­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­களில் எதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும், எதனை நடை­மு­றைப்­ப­டுத்தக் கூடாது என்­பதைப் பரிந்­து­ரைப்­ப­தற்­காக ஜனா­தி­பதி 6 அமைச்­சர்கள் கொண்ட குழு­வொன்­றினை நிய­மித்தார். இது உங்­க­ளுக்கு ஒரு சட்டம், எங்­க­ளுக்கு ஒரு சட்டம் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது. ஒரு நாடு ஒரு சட்டம் என்றே அதி­கா­ரத்தைப் பெற்­றுக்­கொண்­டார்கள். ஆனால் இன்று அந் நிலை­மை­யில்லை. அதி­கார பல­முள்­ள­வர்­க­ளுக்கு ஒரு சட்டம், சாதா­ரண மக்­க­ளுக்கு ஒரு சட்டம். இத­னாலே குறிப்­பிட்ட அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு பாது­காப்­புக்கு பொறுப்­பாக இருந்த அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென விசா­ரணை குழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்தும் அவர்கள் பாது­காக்­கப்­ப­டு­கி­றார்கள்.

 

முன்னாள் ஜனா­தி­பதி மற்றும் உளவுச் சேவையின் முன்னாள் முக்­கிய அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்தும் இது­வரை எது­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஒரு சாரா­ருக்கு ஒரு­விதம், மறு­சா­ரா­ருக்கு வேறொரு வித­மாக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அரசு ஊடக சந்­திப்­பு­களை நடத்­து­கி­றது. ஒரு­வரை கைது செய்­கி­றார்கள். மறு­தினம் விடு­தலை செய்­கி­றார்கள். இதுவே இன்று நடை­பெ­று­கி­றது. 20 ஆவது திருத்த சட்­டத்தை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வினைப் பெற நடத்­திய வித்­தையை நாம் கண்டோம். இது­வொரு டீல் ஆகும். இன்று ஊழல் நிறைந்த ஆட்­சியே உள்­ளது.

 

நாம் 225 பிர­தி­நி­தி­களை இதற்­கா­கவா நிய­மித்தோம். வாக்­க­ளித்தோம். எமது கடல் எல்­லையில் கப்பல் தீப்­பற்றி அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ளது. மீன­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். கடல் வளம், மீன் உள்­ளிட்ட உயி­ரி­னங்கள் அழி­வுக்­குள்­ளான பின்பு ஆட்­சி­யா­ளர்கள் கதை கூறு­கி­றார்கள். கப்­பலில் தீ பர­விய உடனே அதனை ஆழ்­க­ட­லுக்கு இழுத்துச் செல்­ல­வில்லை. அமைச்சர் சரி­யான பதி­லொன்று கூற­வில்லை.

 

எண்ணெய் கசிவு ஏற்­பட்டால் எமது மீனவ சமூ­கமும் நாடுமே பாதிக்­கப்­படும். மீனவ சமூ­கங்கள் ஒன்­றி­ணைந்து குறிப்­பிட்ட கப்பல் நிறு­வ­னத்­துக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யுங்கள். நான் அதற்குத் தலைமை தாங்­கு­கிறேன். மக்­களின் வாழ்க்­கை­யுடன் விளை­யாட வேண்­டா­மென ஆட்­சி­யா­ளர்­களை வேண்டிக் கொள்­கிறேன். இந்­நாட்டில் பௌத்­தர்­க­ளுடன் இந்து, முஸ்லிம், கிறிஸ்­தவ சமூக மக்கள் வாழ்­கி­றார்கள். எனவே ஏகா­தி­பத்­திய ஆட்சி வேண்டாம். அதற்கு இட­ம­ளிக்க முடி­யாது. எமது வளங்­களை எமது காணி­களை வெளி­நா­டு­க­ளுக்கு தாரை வார்ப்­பது நிறுத்­தப்­பட வேண்டும்.

 

இன்று விவ­சா­யி­க­ளுக்கு உரம் இல்லை. சாப்­பாடு இல்லை. தொழில் இல்லை. வரு­மானம் இல்லை. தேவை­யான தடுப்­பூ­சி­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு கூட அர­சாங்­கத்­திடம் போதிய நிதி­யில்லை. இது ஆட்­சி­யா­ளர்கள் மீதான சாபமா என்று நினைக்கத் தோன்­று­கி­றது. இந்தப் பய­ணத்­துக்கு தீர்­வொன்று தேவை. இலங்­கையின் காணிகள், வளங்கள் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு விற்­கப்­ப­டு­கின்­றன. இவற்றை விற்­ப­தற்கு நாம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு ஆணை வழங்­க­வில்லை. நாம் நாட்டை ஆட்சி செய்­வ­தற்கு தலைவர் ஒரு­வ­ரையே தேர்தல் மூலம் நிய­மித்தோம். அந்தத் தலைவர் மீது இன்று நம்­பிக்கை இழக்­கப்­பட்­டுள்­ளது. ஏனென்றால் அவர் மக்­களின் அபி­லா­சை­களை நிறை­வேற்­ற­வில்லை. எனவே நான் மக்­க­ளிடம் கோரிக்கை விடுக்­கிறேன். இதனை அங்­கீ­க­ரிக்க வேண்டாம்.

 

எமது கலா­சாரம், மதங்கள் மற்றும் சூழ்­நிலை, வளங்­களைப் பாது­காப்­ப­வர்­க­ளாக ஆட்­சி­யா­ளர்கள் இருக்க வேண்டும். மக்கள் மகிழ்­வாக குடும்­பத்­துடன் வாழும் சூழ்­நிலை உரு­வாக்­கப்­பட வேண்டும். நல்­லாட்சி நிலை நிறுத்­தப்­பட வேண்டும். பத­விக்கு வந்த ஒவ்­வொரு அர­சாங்­கங்­களும் நாட்டைக் காட்டிக் கொடுத்­த­தையே செய்­துள்­ளன. இவ்­வா­றான ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு மக்கள் ஒத்­து­ழைப்பு வழங்­கா­தீர்கள். ஆட்­சி­யா­ளர்கள் தமது மோச­மான பய­ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நாடு கொள்கை, கலா­சார, சமய, பொரு­ளா­தார துறையில் பின் நோக்கிச் செல்­கி­றது. மக்கள் பக்கம் இருந்து தீர்­மானம் மேற்­கொள்ளும் தலை­வர்­களே நாட்­டுக்குத் தேவை. நாடு இன்று பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. ஆட்­சி­யா­ளர்கள் தமது தற்­போ­தைய போக்­கினை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஆராய ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை ஆராய்ந்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மனம் பெற்ற 6 பேர் கொண்ட அமைச்­ச­ரவை குழு­வினால் எதுவும் நடை­பெ­ற­வில்லை. இந்த அமைச்­ச­ரவை குழு யாருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும், யாருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கக் கூடாது என்­பதை தீர்­மா­னிப்­ப­தற்­காக மாத்­தி­ரமே நிய­மிக்­கப்­பட்­டது.

 

இதனால் இந்­நாட்டில் இரு சட்­டங்கள் இருக்­கின்­றன என்­பது தெளி­வா­கி­றது. அதி­கார பலம், செல்­வாக்கு உள்­ள­வர்­க­ளுக்கு ஒரு சட்­டமும் மற்றும் சாதா­ரண மக்­க­ளுக்கு ஒரு சட்­டமும் என இரு வேறு சட்­டங்கள் நடை­மு­றை­யி­லுள்­ளன. எனவே நாட்டில் சட்டம் முறை­யற்ற விதத்தில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இந்த தற்­போ­தைய நிலைமை குறித்து நாம் கவ­லை­ய­டை­கிறோம். இந்­நி­லையில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் குறித்த விசா­ர­ணைகள் உரிய முறையில் நடத்­தப்­ப­டாமை குறித்து நாம் இந்த அர­சுக்கு எதி­ராக செயற்­ப­டுவோம்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் உண்­மை­யான பொறுப்­பு­தா­ரி­களை இனங்­கா­ணு­வ­தற்­கான விசா­ர­ணைகள் எவ்­வித அக்­க­றை­யு­மின்றி நடை­பெ­று­கி­றது. இது தொடர்பில் எமக்குத் தெளி­வில்லை. எனவே இவ்­வி­வ­காரம் தொடர்பில் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்பு அமைச்சர் சரத் வீர­சே­க­ர­வுக்கு கடி­த­மொன்று அனுப்பி வைத்­துள்ளேன்.

 

முன்னாள் சட்­டமா அதிபர் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யொ­ருவர் இருப்­ப­தாக தெரி­வித்­துள்ளார். அந்த நபர் யாரென அவர் தெளி­வாகக் குறிப்­பி­ட­வில்லை. இத்­தாக்­குதல் தொடர்­பான சில விட­யங்கள் இது­வரை விசா­ரணை செய்­யப்­ப­ட­வில்லை என்­பது தெரி­கி­றது. முழு­மை­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இத­னுடன் தொடர்­பு­டைய சில இஸ்­லா­மிய நட­வ­டிக்­கைகள் மற்றும் தொடர்­பு­டை­ய­வர்கள் என பெயர் குறிப்­பி­டப்­பட்ட அர­சி­யல்­வா­திகள் தொடர்பில் இன்னும் முறை­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனத் தெரி­கி­றது. அத்­தோடு விசா­ரணை மேற்­கொண்டு ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­குழு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சில விட­யங்கள் இன்னும் முறை­யாக விசா­ரணை செய்­யப்­ப­ட­வில்லை.

 

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்ட காலத்தில் இறு­தி­யாக குண்­டினை வெடிக்கச் செய்து கொண்ட ஜெமீல் என்­பவர் இரா­ணுவ அதி­கா­ரி­யொ­ரு­வரை சந்­தித்­துள்­ள­தாக சாட்­சி­யங்­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அவர் யார்? இந்த தாக்­கு­தலில் அவர் ஜெமீ­லுடன் தொடர்­பு­பட வேண்­டி­யது ஏன்? என்­பது தொடர்பில் விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் கூட முறை­யாக விசா­ரணை செய்­யப்­ப­ட­வில்லை? இந்த இரா­ணுவ அதி­காரி யார்.? இது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்­திலும் பேசப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீன் பர்­னாந்து பாரா­ளு­மன்­றத்தில் இந்தக் கேள்­வியை எழுப்­பினார். இந்தக் கார­ணிகள் விசா­ரணை செய்­யப்­பட வேண்­டு­மென்­றாலும் அது நடை­பெ­ற­வில்லை.

 

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு பயங்­க­ர­வா­திகள் மட்­டக்­க­ளப்பில் குண்­டு­களை வெடிக்கச் செய்து கொண்­டனர். அங்கு பலி­யா­ன­வர்­களின் உடற்­பா­கங்கள் டி.என்.ஏ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன. டி.என்.ஏ. பரி­சோ­தனை அறிக்­கையின் படி சாரா ஜெஸ்­மினின் உடற்­பா­கங்கள் அங்கு இருக்­க­வில்லை. அறிக்­கையின் படி சம்­ப­வத்தின் போது சாரா அங்கு இருக்­க­வில்லை. அப்­ப­டி­யென்றால் அவர் எங்கே? இது தொடர்­பிலும் தெளி­வாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. என்­றாலும் உடற்­பா­கங்கள் தோண்­டப்­பட்டு மீண்டும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு அவரும் சம்­பவம் நடந்த இடத்தில் இருந்தார் என்ற பொய்யை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு விசா­ர­ணை­யா­ளர்கள் முயற்­சித்து வரு­கி­றார்கள். உடற்­பா­கங்­களை தோண்டி எடுத்தோம். சாரா அங்­கி­ருந்­துள்ளார் என்று கூற முயற்­சிக்­கி­றார்கள்.

 

சி.ஐ.டி.யும் இது தொடர்பில் முறை­யாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­வ­தில்லை. தாக்­குதல் தொடர்பில் முறை­யாக விசா­ரணை நடத்­து­மாறு கோரி நான் நீதி­மன்றம் சென்றேன். இது­பற்றி ஆராய இரு சி.ஐ.டி. குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் நீதி­மன்­றுக்கு அறி­வித்தார். என்­றாலும் அந்த இரண்டு குழுக்­க­ளுக்கும் என்ன நடந்­தது என்­பது கூட எமக்குத் தெரி­ய­வில்லை. இதற்குக் காரணம் அவர்­களும் அர­சியல் நிகழ்ச்சி நிர­லின்­படி பணி­யாற்­று­வ­தே­யாகும். அதனால் குறிப்பிட் சி.ஐ.டி குழுக்கள் மீது எமக்கு நம்­பிக்­கை­யில்லை. அத்­தோடு பொலிஸ் மாஅ­திபர் மீதும் எமக்கு நம்­பிக்­கை­யில்லை.

 

விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பிட்ட சில விட­யங்கள் தொடர்பில் கவனம் செலுத்­து­மாறு பொலிஸ் மா அதிபர் கேட்டுக் கொள்­ளப்­பட்­டி­ருந்­தாலும் அவர் இது தொடர்பில் எந்தக் கவ­னமும் செலுத்­த­வில்லை. அத்­தோடு தாக்­கு­தலை தடுக்க முடி­யாமற் போனமை தொடர்­பாக சட்­டமா அதிபர் அப்­போ­தைய ஜனா­தி­பதி மற்றும் பாது­காப்­புக்கு பொறுப்­பான சில முக்­கிய அதி­கா­ரிகள் மீது விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென கோரி­யி­ருந்தார். இவர்­களால் இத்­தாக்­கு­தலைத் தடுத்­தி­ருக்க முடியும். என்­றாலும் இது தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதி நிய­மித்த 6 அமைச்­சர்கள் கொண்ட குழு வெறும் கண்­து­டைப்­பாகும்.

 

இரண்­டா­வது நட­வ­டிக்­கை­யாக நாம், முன்னாள் சட்­ட­மா­அ­திபர் குறிப்­பிட்­ட­வாறு தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தா­ரியை கண்­டு­பி­டிப்­ப­தற்­காக, இனங்­கா­ணு­வ­தற்­காக சர்­வ­தேச நீதி­மன்றின் உத­வியை நாட வேண்­டி­யுள்­ளது. பிர­தான சூத்­தி­ர­தா­ரியை அறிய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். கத்­தோ­லிக்க ஆல­யங்கள் சபைக்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் இடையில் தொடர்­புகள் உள்­ள­மை­யினால் எங்­களால் சர்­வ­தேச ரீதியில் நட­வ­டிக்கை மேற்­கொள்­வது இல­கு­வாக உள்­ளது.

 

எங்­க­ளுக்கு சர்­வ­தேச நாடு­க­ளுடன் தொடர்­புகள் உள்­ளன. மற்றும் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் நிறு­வ­னங்­களை நேர­டி­யாக தொடர்பு ு கொள்ளும் சக்தியும் எம்மிடம் உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கவுள்ளோம். ஏனென்றால் எந்­த­வொரு கத்­தோ­லிக்­கரும் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ராக ஒரு போதும் செயற்­ப­ட­வில்லை. நாங்கள் இஸ்­லா­மி­யர்­களைப் பாது­காக்க முயற்­சித்­தோமே அவர்­க­ளுக்கு எதி­ராக ஒரு போதும் செயற்­ப­ட­வில்லை. கத்­தோ­லிக்கர் என்ற வகையில் நாம் அவர்­களைப் பாது­காப்­ப­தற்கே முயற்­சித்தோம். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேலும் தாக்­கு­தல்கள் இடம்­பெறா வண்ணம் நாம் பாது­காத்தோம். நாம் தொடர்ந்தும் அவர்­களைப் பாது­காப்போம். நாம் தொடர்ந்தும் முஸ்­லிம்­களை மதிக்­கிறோம். அதனால் எமது மக்­களை இவ்­வாறு பலி­யெ­டுத்­த­தற்­கான காரணம் என்ன என்­பதை அறிந்து கொள்­வ­தற்­காக பக்­க­சார்­பற்ற நேர்­மை­யான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வது அவ­சி­ய­மாக உள்­ளது. இது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­க­வல்ல பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரா­ன­தாகும்.

 

எனவே நாம் வெளிப்­ப­டை­யான விசா­ர­ணை­களைக் கோரு­கிறோம். உண்­மையில் என்ன நடந்­தது? இந்த மக்கள் ஏன் கொலை செய்­யப்­பட்­டார்கள்? ஏன் அங்­க­வீ­னர்­க­ளாக்­கப்­பட்­டார்கள்? இதற்குக் காரணம் என்ன? அமைச்­ச­ருக்கு எழு­திய கடி­தத்தில் நான் இங்கு தெரி­வித்­த­வைகள் அனைத்­தையும் குறிப்­பி­ட­வில்லை. என்­றாலும் குறிப்­பாக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்கையின் சிபாரிசுகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli

https://www.madawalaenews.com/2021/06/blog-post_947.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.