Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு – பாலியல் இலஞ்சம் பெற முயற்சிக்கும் அரச அதிகாரிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு – பாலியல் இலஞ்சம் பெற முயற்சிக்கும் அரச அதிகாரிகள்

June 27, 2021
1-88.jpg?resize=696%2C392&ssl=1

தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் அரச அதிகாரிகள் சிலர்  பெண்கள் மீது பாலியல் சீண்டல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது  குறித்து மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பெண்னொருவரின் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றிய வில்வரெட்னம் கடந்த திங்கட்கிழமை உடனடி இடமாற்றமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக தற்காலிகமாக கிரான் பிரதேச செயலாளர் இணைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பிரதேச செயலாளர் அனுமதிப்பத்திரம் ஒன்றைப்பெறச்சென்ற பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியிருந்ததாக குறித்த பெண் வெளியிட்ட தகவல்களும் குறித்த பெண்ணிடம் பிரதேச செயலாளர் உரையாடிய குறுஞ்செய்தி உரையாடல்களும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்திருந்தன.

இது தொடர்பில் குறித்த பெண்ணால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்,பொதுநிர்வாக திணைக்களம்,ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றிற்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் பொதுநிர்வாக அமைச்சின் அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து குறித்த பெண் உட்பட மூவரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த பிரதேச செயலாளரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பதற்கான தேவையிருப்பதாக கருதப்பட்டு அவரை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்துடன் இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அவரும் இதனை உறுதிப்படுத்தினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மண் கொள்ளைகளில் பிரதான சூத்திரதாரியாகவும் இவர் இருந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

https://www.ilakku.org/?p=53485

 

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரத்தரப்புடன் நட்புள்ளோரே இப்படியான இழிசெயலில் ஈடுபடுகின்றனர். ஏழ்மையில் வாடும் பெண்களே இவர்களது இலக்கு.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உடனடி பணி இடைநிறுத்தம் செய்தபின்னர் தான் விசாரணை செய்யவேண்டும். பணி இடமாற்றம் ஏமாற்று நடவடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

பெண்னொருவரின் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளராக கடமையாற்றிய வில்வரெட்னம் கடந்த திங்கட்கிழமை உடனடி இடமாற்றமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரொம்ப கொடுமையான தண்டனை .😢

maxresdefault.jpg

கீழ சுடும்லே ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.