Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கர வாதத்துக்கான டிரோன்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் இந்தியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் இந்தியா!

பயங்கர வாதத்துக்கான டிரோன்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் இந்தியா!

பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் உலகளாவிய ஆபத்து என இந்தியா தெரிவித்துள்ளது.

ஐ.நா பொதுக்குழுவில் உலகளாவிய பயங்கரவாதம் குறித்த விவாதத்தின்போது ஜம்மு – காஷ்மீர் விமானப்படை தளம் மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த இந்தியா மேற்படி குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆயுதம் ஏந்திய டிரோன்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து சர்வேதச சமூகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்தியா வலியுத்தியுள்ளது.

அதேநேரம் குறைந்த விலை மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய டிரோன்களை பயங்கரவாத குழுக்கள் மோசமான நோக்கங்களுக்காக பயன்படுத்துவது உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உடனடி ஆபத்து மற்றும் சவாலாக மாறியுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் வி.எஸ்.கே.கவுமுடி தெரிவித்தார்.

வணிக சொத்துக்களுக்கு எதிராக பயங்கரவாத குழுக்கள் டிரோன்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளில் சர்வதேச சமூகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறத்தினார்.

https://athavannews.com/2021/1225783

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் : பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை!

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் : பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை!

இந்தியாவில் பயங்கரவாதிகள் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர் நிலை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்போது எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நிகழாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பாதுகாப்புத் துறை தளங்களில் கண்காணிப்பை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

பாதுகாப்பு படைகளுக்கு இடையே கூடுதலாக தகவல்தொடர்பு வசதிகளை மேம்படுத்துவது, அதிகளவில் இளைஞர்களை பணியில் அமர்த்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1225811

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிரோன்களை வீழ்த்தும் தொழிநுட்பம் கண்டுப்பிடிப்பு!

டிரோன்களை வீழ்த்தும் தொழிநுட்பம் கண்டுப்பிடிப்பு!

டிரோன்களை கண்டுப்பிடித்து வீழ்த்தக்கூடிய புதிய தொழிநுட்பத்தை கண்டுப்பிடித்திருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான டிஆர்டிஓ  (DRDO) தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி, டிரோன் எதிர்ப்புத் தொழிநுட்பம் மூலம் நாட்டின் பாதுகாப்புக் அச்சுறுத்தலாக விளங்கும் சிறிய டிரோன்களை அழிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

புதிதாக வான் மூலம் உருவான அச்சுறுத்தலை எதிர்கொள்ள இராணுவத்திற்கு இது ஆற்றலை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தொழிநுட்பத்தில் உள்ள சென்சர் கருவிகள், ரேடியோ அலைவரிசை போன்றவையும் மிகச் சிறிய வடிவிலான டிரோன்களையும் கண்டுபிடிக்க உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2021/1225885

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.