Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கௌதாரிமுனைக்கு சிறிதரன் குழுவினரை ஏற்றிச் சென்ற படகோட்டி இராணுவ புலனாய்வாளர்களால் விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கௌதாரிமுனைக்கு சிறிதரன் குழுவினரை ஏற்றிச் சென்ற படகோட்டி இராணுவ புலனாய்வாளர்களால் விசாரணை

கிளிநொச்சி மாவட்டம், பூநகரி – கெளதாரிமுனையில் கடலட்டைப் பண்ணையைப்
பார்வையிடச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோரை ஏற்றிச் சென்ற படகு உரிமையாளரை இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Sri-300x225.jpg Sri2-300x225.jpg
கெளதாரிமுனையில் மூன்று மாதங்களாக சீன நாட்டவரால் நடத்தப்படும் கடலட்டைப் பண்ணை தொடர்பில் உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர், அவரின் உதவியாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோர் கெளதாரிமுனைக்கு நேற்றுமுன்தினம் காலை 8.00 மணியளவில் படகில் பயணித்து முற்பகல்10.30 மணியளவில் கரை திரும்பியிருந்தனர்.

மேற்படி குழுவினர் படகில் சென்று வந்த விடயம் செய்தியாக வெளிவந்த நிலையில் இராணுவப் புலனாய்வாளர்கள் சிலர், நேற்றுமுன்தினம் மாலை மீனவர் சங்கம் ஊடாக படகின் உரிமையாளரான படகோட்டியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

காலையில் ப ட கு சென் று வந்தமையை மாலையே கண்டுபிடிக்கும் இராணுவப் புலனாய்வாளர்களால் கடந்த மூன்று மாதங்களாக இயங்கும் சீன நாட்டவரின் கடலட்டைப் பண்ணையை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இராணுவப் புலனாய்வாளர்களால் படகோட்டி விசாரணை செய்யப்பட்டமைக்கு மீனவர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறான அச்சுறுத்தல்களுக்குத் தாம் ஒருபோதும் அடி பணியோம்  எ ன் று ம் அவர்கள் சூளுரைத்துள்ளனர்.

https://thinakkural.lk/article/125682

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

இவ்வாறான அச்சுறுத்தல்களுக்குத் தாம் ஒருபோதும் அடி பணியோம்  எ ன் று ம் அவர்கள் சூளுரைத்துள்ளனர்.

எதுக்கும் தேரர்களுக்கும் அறிவித்து விட்டு காரியத்தில் இறங்குங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.