Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொப்பிகலவை கைப்பற்றப்போன அரசாங்கம் இன்று தனக்குத்தானே தொப்பியை போட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொப்பிகலவை கைப்பற்றப்போன அரசாங்கம் இன்று தனக்குத்தானே தொப்பியை போட்டுள்ளது

[05 - July - 2007]

*ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவிப்பு

டிட்டோகுகன், ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் சமாதானம் மூலமே நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த போதும் யுத்தத்தின் மூலம் சமாதானத்தை கொண்டு வருவதாகக் கூறிய அரசாங்கம், இன்று சகலதையும் தவறவிட்ட நிலையில் மீண்டும் சமாதானப் பேச்சுகள் எனக் கூறி தடுமாறி வருவதாக ஐ.தே.க. வின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிதி அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மற்றும் விசேட கருத்திட்டங்கள் அமைச்சுக்கான குறைநிரப்பு பிரேரணை என்பனவற்றின் மீதான விவாதத்தில் பேசும்போதே ரவி கருணாநாயக்க எம்.பி. இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

"கடந்த 6 மாதங்களில் 9 தடவைகள் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு விட்டன. மின் கட்டணங்களை மக்கள் செலுத்த முடியாத நிலைமை நிலவுகிறது. இவ்வாறு மக்கள் பல வாழ்வாதார சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, இயலாத நிலையிலுள்ள இந்த அரசாங்கம் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு செல்ல வேண்டி வரும். இது தோல்வியுற்ற அரசாங்கம்.

இதேநேரம், பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதில் பலனில்லை. அது நாட்டை மேலும் இக்கட்டான சூழ்நிலைக்குள்ளேயே தள்ளும். பொருளாதாரம் வீழ்ச்சி கண்டாலும் அது பற்றிய உண்மையான புள்ளி விபரங்களை வெளியிடுங்கள். பொருளாதார யுத்தத்தில் தோல்வியடைந்தால் எப்படி யுத்தத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள்? தற்போது பொருளாதாரம் வீழ்ச்சி கண்டாகிவிட்டது.

இனப்பிரச்சினைக்கு நாம் எப்போதுமே அரசியல் தீர்வொன்றையே வலியுறுத்தி வந்துள்ளோம். சமாதானத்தையே வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அரசாங்கம் இவ்வளவு காலமும் யுத்தத்தின் மூலம் சமாதானத்தை கொண்டு வருவதாக கூறிவிட்டு இன்று சகலதும் தவறவிடப்பட்ட நிலையில் சமாதானப் பேச்சுகள் எனக் கூறி தடுமாறுகிறது.

இதேநேரம், வாழ்க்கைச் செலவு பற்றி பேசும் போது ஏனைய நாடுகளிலும் பொருட்களின் விலை அதிகரிப்பதாக வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஆனால், இலங்கையில் 20- 21 சதவீதத்தால் பொருட்களில் விலை அதிகரிக்கின்றது. எனினும், இந்தியாவில் 3.2 சதவீதத்தாலும் இந்தோனேசியாவில் 6.1 சதவீதத்தாலும் மாலைதீவுகளில் 3.1 சதவீதத்தாலும் சிங்கப்பூரில் 1.1 சதவீதத்தாலுமே பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்றது. இலங்கையில் மட்டுமே மேற்குறித்தளவு போன்று சடுதியாக பாரியளவு அதிகரிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 32 சதவீதத்தால் மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தான் இன்று வாழ்க்கைச் செலவின் நிலைமை.

இன்று அரசாங்கம் தொப்பிகலவை கைப்பற்றப்போய் தனக்குத் தானே தொப்பியை போட்டுக் கொண்டுள்ளது. அன்று அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலி வடமராட்சியை பிடித்தார். மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ தலைமையில் சிறந்த முறையில் யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. இந்திய அமைதிப்படையை கொண்டு வந்து புலிகளை அடக்கி வைத்திருந்தனர். அனுருத்த ரத்வத்தை யாழ்ப்பாணத்தைப் பிடித்து கொடியேற்றினார். இவற்றினால் நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடிந்ததா என்று பார்த்தால் அங்கு ஒன்றுமில்லை.

அரசாங்கம் யுத்தம் என்று கூறி அனைத்தையும் மூடி மறைக்கப் பார்க்கிறது. அரசாங்கம் அரசியல் யுத்தமே செய்து வருகிறது. உண்மைகளை மறைக்கிறது. நாம் கூறியதை அடுத்து முன்னாள் விமானப்படை அதிகாரியான கஜநாயக்க கைது செய்யப்பட்டதன் பின்னர் தற்போது எங்கே ஆட்கடத்தல்கள் இடம்பெறுகின்றனவா? எனவே உண்மைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இந்த நாட்டுக்கு சிறந்த நிர்வாகமொன்றே தற்போது தேவைப்படுகிறது. எனவே, உங்களுக்கு முடியாவிட்டால் ஐ.தே.க. விடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படையுங்கள். நாம் சமாதானத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தி காட்டுகிறோம்" என்றார்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.