Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரதமிருந்து உரிமையாளரிடம் சேர்ந்த சிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதமிருந்து உரிமையாளரிடம் சேர்ந்த சிங்கம்

spacer.png
கம்போடியாவில் தனியார் ஒருவரால் வளர்க்கப்பட்ட சிங்கம் ஒன்று உணவை மறுத்து தொடர்ந்து அடம்பிடித்ததை அடுத்து, விசேட விதிவிலக்கின் கீழ் மீண்டும் உரிமையாளரிடமே அது ஒப்படைக்கப்பட்டது.

உணவை மறுத்து தொடர்ந்தும் சிங்கம் உறுதியாக இருந்த செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தச் சிங்கத்தை மீண்டும் அதனை வளர்த்தவரிடமே ஒப்படைத்து அதன் உயிரைக் காப்பாற்றுமாறு உலகம் முழுவதும் இருந்து விலங்குகள் நல ஆர்வலர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து விசேட விதிவிலக்குகளின் கீழ் சிங்கத்தை அதனை வளர்த்தவரிடமே ஒப்படைக்குமாறு கம்போடிய பிரதமர் ஹன் சென் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கம்போடிய தலைநகர் புனோம் பென் மாவட்டத்தில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட சிங்கத்தை அதன் உரிமையாளரிடம் இருந்து கடந்த ஜூன் 27 ஆம் திகதி வன விலங்குகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

spacer.png

கம்போடிய சட்டத்தின் கீழ் காட்டு விலங்குகளை வீடுகளில் வளர்க்க மக்களுக்கு அனுமதி இல்லை. எனினும் சிங்கத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு விசேட அனுமதியின் கீழ் அது மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இந்தச் சிங்கம் சிறியதாக இருந்தபோதே அதனை எடுத்துவந்த உரிமையாளர் தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் போன்று வளர்த்து வந்தார்.

இந்நிலையில் சிங்கத்தை மீள அதனை வளர்த்தவரிடம் ஒப்படைப்பது குறித்து விவசாய அமைச்சருடன் பேசியதாக கம்போடிய பிரதமர் ஹன் சென் தெரிவித்தார். அயல் வீடுகளின் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சரியான பாதுகாப்பு கூண்டு ஒன்றை அமைத்து அதற்குள்ளேயே சிங்கத்தை வளர்க்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அதனை ஒப்படைக்குமாறு கூறியதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சிங்கத்தின் மீது பரிதாபம் கொண்டு அதனை விடுவிக்குமாறு உள்நாட்டிலும் வெளிநாடுகளில் இருந்தும் வலியுறுத்திய அனைவரதும் விலங்குகள் மீதான அன்புக்கு நன்றி எனவும் அவா் கூறினார்.

spacer.png

இதேவேளை, பறிமுதல் செய்யப்பட்ட சிங்கம் உடனடியான புனோம் தமாவோ வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன், சிங்கத்தின் உரிமையாளருக்கு 30,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டது என கம்போடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அதிகாரிகளால் விதிக்கப்பட்ட அபராத தொகையை மீள ஒப்படைக்க வேண்டும் என பேஸ்புக் மூலம் பலர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அபராதத் தொகை மீள ஒப்படைக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

சிங்கத்தை வளர்த்தவர் நேற்று திங்கட்கிழமை அதனை புனோம் தமாவோ வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சரியான கூண்டு அமைத்து அதனைப் பராமரிப்பதாக அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, உரிமையாளருடன் மீண்டும் இணைந்த பிறகே சிங்கம் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு உணவைச் சாப்பிட ஆரம்பித்தது.
 

https://www.thaarakam.com/news/73d081c2-1f84-4301-8535-b29b96ffe93f

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.