Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட 31 பேர் கைது – பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட 31 பேர் கைது – பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம்

 

UniOfJaffna ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட 31 பேர் கைது - பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய தலைவரான தோழர் ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட தொழிற்சங்கவாதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 31 பேர் வரை நேற்று (08.07.2021) கொழும்பில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் நீதிமன்ற உத்தரவை மீறி கோரோனோ தனிமைப் படுத்தல் முகாமொன்றுக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளமை கண்டிக்கத் தக்கது என பல்கலைக் கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குறித்த ஆர்ப்பாட்டமானது  ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக் கழகம் தொடர்பாக நேற்று (08.07.2021)  பாராளு மன்றத்தில் விவாதிக்கப் படவிருந்த நிலையில், கவ்விச் சுதந்திரத்தை வலியுறுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றிருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தொழிற் சங்கம் என்ற வகையிலும் நியாயத்திற்காக பாடுபடுகின்ற ஒரு அமைப்பு என்ற ரீதியிலும் தோழர் ஜோசப் ஸ்டாலினுக்கும் அவரது போராட்ட சகாக்களுக்கும் ஏற்பட்டுள்ள மோசமான நிலை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியது எமது கடமையாகும்.

இலங்கை ஆசிரியர் சங்கமானது எமது பல்கலைக் கழக ஊழியர் சங்கத்துடன் தோழமை உறவு பூண்டு, தொழிற் சங்க மற்றும் மனித உரிமை பொதுத் தளங்களில் மேதினம் உள்ளிட்ட பல செயற்பாடுகளில் எமது சங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதோடு,  எமது சங்க அங்கத்தினர் மீதான உள்ளக விசாரணைகளுக்கு அவர்களின் சார்பில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி முன்னிலையாகி உதவியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கும் கொரோனா இலங்கையையும் விட்டு வைக்கவில்லை என்பது உண்மை தான் எனினும் பெருந் தொற்றுக் கால சுகாதார நடை முறைகள் என்ற போர்வையில் நியாயமான மக்கள் உரிமைச் செயற்பாடு களையும் சுகாதார நடை முறைகளினை பின்பற்றி நடை பெறும் ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களையும் ஒடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அத்துடன் நேற்றைய ஆர்ப்பாட்டக் காரர்கள் மீதான நியாயமற்ற அத்து மீறல்களையும் அராஜகங்களையும் வன்மையாகக் கண்டிப்பதோடு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் மக்களினதும் மக்கள் செயற்பாட்டாளர் களினதும் செயற்பாடுகளை நியாய பூர்வமான வழியில் அணுக வேண்டும் என்று ஜனாதிபதி அவர்களையும், அரசாங்கத்தினையும்; வேண்டி நிற்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/31-arrested-including-josephstalin/

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஜனநாயக அரசாங்கம்

இது இலங்கை மக்கள் அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சனநாயக அரசாங்கம் அல்ல. தமிழினத்தை அழிப்பதற்கு வளர்க்கப்பட்ட சிங்கள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. 🤨

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்-யாழில் ஆர்ப்பாட்டம்

 

FB IMG 1626423670762 ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்-யாழில் ஆர்ப்பாட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி  யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை 10 மணி தொடக்கம் 11 மணிவரையாக ஒரு மணி நேரம் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இந்த அரசின் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார போக்குக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு தமது எதிர்ப்பை வெளியிட வேண்டுமென்றும் கோரிக்கையை ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுத்துள்ளனர்.

ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவமயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல், அடக்குமுறைகளை நிறுத்து, தனிமைப்படுத்தல் சட்டத்தை அடக்கு முறைகளுக்கு பாவிக்காதே, அடக்குமுறைகளுக்கு அடாவடிகளுக்கு ஆயுதத்திற்கு, கைதுகளுக்கு ஆசிரியர் நாங்கள் அடிபணிய மாட்டோம், இலவச கல்வியில் இராணுவம் எதற்கு, கொத்தலாவ சட்ட மூலத்தை கிழித்தெறி, இலவசக் கல்வியை வியாபாரமாக்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

 

https://www.ilakku.org/demonstration-in-jaffna-demanding-the-release-of-those-including-joseph-stalin/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.