Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற துயிலுமில்ல நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

செத்தவர் என்றும்மை செப்புவமோ - உமை
சென்மத்தில் நினைந்திடத் தப்புவமோ
குத்துவிளக்கதும் நீரல்லவோ - நாம்

கும்பிடும் தெய்வங்கள் நீரல்லவோ
நித்தமும் வாழுவீர் மாவீரரே - எங்கள்
நெஞ்சுகளில் இளம் பூவீரரே! 
"

-->வித்தொன்று விழுந்தாலே பாடலிலிருந்து

 

 

201628_104201269664010_929184_o.jpg

 

 

ஒரு படிமத்தில் உள்ள கல்லறையினையோ அ நினைவுக்கல்லினையோ அஃது எந்த துயிலுமில்லத்திற்கானது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பதெனில், அதில் உள்ள மாவீரர் பெயரினை எடுத்து இங்கு - http://veeravengaikal.com/ - போட்டால் இதில் இம்மாவீரர் வித்துடல் எங்கு விதைக்கப்பட்டிருந்தது என்ற தகவல் கிடைக்கும். அதன் மூலம் அப்படிமத்தில் உள்ளது எந்த துயிலுமில்லத்திற்கான கல்லறை எ நினைவுக்கல் என்பதைக் கண்டுபிடிக்கலாம். ஒரே பெயரில் பல மாவீரர்கள் இருக்கலாம். எனவே கவனம் கூட வேண்டும். ஆனால் நேரமின்மையால் நன்னிச்சோழன் ஆகிய நான் அவ்வாறு செய்யவில்லை. தேவைப்படுவோர் தேடிக்கொள்ளவும். நேரம் கிடைக்கும்போது பையப்பைய செய்து விடுகிறேன்.}

 

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 229
  • Views 72.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    ஒவ்வொரு துயிலுமில்லத்திலும் இருந்த கல்லறைகள் & நினைவுக்கற்களின் தோற்றங்கள்    மாவீரர் நாள் வரலாறுகள்     

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி, முதலாவது மாவீரர் நாளன்று, எஸ் ஜி சாந்தன் அவர்களின் நண்பனும் அஞ்சல்காரருமான பெருமாள் கணேசன் என்பவரால் மிக நல்ல பாடல் ஒன்று சாந்தன் அவர்களுக்காக எழுதப்பட்டது.

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    முதலாவது மாவீரர் குறியீடு இது தான் கரந்தடி போர்முறை கால மாவீரர் குறியீடு. இது ஆகக்குறைந்தது 1986 முதல் அறியில்லா ஆண்டுவரை பாவிக்கப்பட்டது. எனினும் இரண்டாம் கட்ட ஈழப்போரில் இது பாவிக்கப்படவில்லை, இதன

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஒவ்வொரு துயிலுமில்லத்திலும் இருந்த கல்லறைகள் & நினைவுக்கற்களின் தோற்றங்கள் 

 

மாவீரர் நாள் வரலாறுகள்

 

  

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

துயிலுமில்ல உறுதிமொழி & பாடல்

 

 

  • எழுதியவர்: தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை

  • இசையமைப்பாளர்: திரு. "இசைவாணர்" கண்ணன்

  • பாடியவர்: அமரர் வர்ண இராமேஸ்வரன்

    • பின்னணிப் பாடகர்கள்: மேஜர் சிட்டு, திருமதி மணிமொழி, அபிராமி, ராதிகா.

  • முதன் முதலில் வாயால் பாடப்பட்ட இடம்: கோப்பாய் மா.து.இ. (1991)

  • முதன் முதலில் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஆண்டு: 1992

  • மறுசீரமைக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஆண்டு: 1995

prabakaran-flag.jpg

 

maaveerar-day-song-2.jpg

மேலுள்ள படிமத்தில் உள்ள மூலப் பாடல்வரியில் உள்ள ‘‘நள்­ளிரா வேளை­யில் நெய் விளக்­கேற்­றியே நாமுமை வணங்­கு­கி­றோம்’’ என்ற பாடல்வரியானது ‘‘வல்­லமை தாரு­மென்­றுங்­க­ளின் வாச­லில் வந்­துமே வணங்­கு­கின்­றோம்’’ என 1995 இலிருந்து மாற்­றப்­பட்­டது, மாவீரர் நாள் நேரமும் மாற்றப்பட்டமையால்.

maaveerar-day-song-1.jpg

 

அலுவல்சார் துயிலுமில்லப் பாடல் வெளிவர முன்னர் 1991 இல் ஒலித்த பாடல் “ஓ மரணித்த வீரனே!" என்பதாகும். இதுவே 2ம் ஈழப்போர் காலத்தில் மாவீரர் ஊர்தியில் ஒலிக்கவிடப்பட்ட பாடலுமாகும்.

1995இற்கு முன்னர் வரை, 

  1. சாமம் 12:01 இற்கு கோயில் மணியோசை எழுப்பப்படும்.

  2. சாமம் 12:02 இற்கு அகவணக்கம் செய்யப்படும். 

  3. சாமம் 12:03 இற்கு சுடர் ஏற்றப்படும். 

 

1995இலிருந்து இன்றுவரை,

  1. மாலை 5:00 மணி சொச்சத்திலிருந்து 6:04:59 மணிக்கு முன்பாக - தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை முடிவடையும்

  2. மாலை 6:05 மணி - நினைவொலி எழுப்புதல்

  3. மாலை 6:06 மணி - அகவணக்கம்

  4. மாலை 6:07 மணி - பொதுச்சுடர் ஏற்றுதல். தொடர்ந்து நினைவுச்சுடர் & ஈகைச்சுடர் ஏற்றுதல், சம நேரத்தில் உறுதிமொழியும், அதனைத் தொடர்ந்து மாவீரர் நாள் பாடலும் ஒலிக்கத்தொடங்கும்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

  1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி, முதலாவது மாவீரர் நாளன்று, எஸ் ஜி சாந்தன் அவர்களின் நண்பனும் அஞ்சல்காரருமான பெருமாள் கணேசன் என்பவரால் மிக நல்ல பாடல் ஒன்று சாந்தன் அவர்களுக்காக எழுதப்பட்டது. எழுதப்பட்ட பாடலை எஸ் ஜி சாந்தன் அவர்கள் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்ற இடங்களில் ஒன்றான கோணாவில் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் மெட்டமைத்துப் பாடினார். அப்பாடலின் நிகழ்படப் பதிவு தேசியக்கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்டோரின் கவனத்தை ஈர்த்தது. அப்பாடலானது நன்கு பரவலறியாகி புகழ்பூத்த பாடலாகியது. இதுவே சாந்தன் அவர்களின் முதலாவது தமிழீழ விடுதலைப்போர்ப் பாடலாகும். அதன் பல்லவி வரிகள் பின்வருமாறு,

"வானம் பூமியானது

பூமி வானமானது - இங்கு
புழுதியெங்கும் குருதியாறு ஓடுகின்றது!

தேசம் நாசமானது..."

நானறிந்த மட்டில் மாவீரர்களுக்காகப் பாடப்பட்ட முதலாவது தமிழீழப் போர்க்கால இலக்கியப் பாடலாக இது விளங்குகிறது. ஆனால் இன்று இதன் பல்லவி மட்டுமே அறியக்கூடியதான ஊழியால் நாம் இழந்துவிட்ட பல்வேறு போரிலக்கியப் பாடல்களின் வரிசையில் இதுவும் ஒன்றாக உள்ளது. 

 

ஆதாரம்: "சாந்தன்: புரட்சிப்பாட்டு யாத்திரை", பி.பி.சி. ஆங்கில பொட்காஸ்ற்

 

 

எஸ். ஜி. சாந்தன் அவர்களின் எழுச்சிப் பாடல்கள் தொகுப்பு

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முதலாவது மாவீரர் குறியீடு

இது தான் கரந்தடி போர்முறை கால மாவீரர் குறியீடு. இது ஆகக்குறைந்தது 1986 முதல் அறியில்லா ஆண்டுவரை பாவிக்கப்பட்டது. எனினும் இரண்டாம் கட்ட ஈழப்போரில் இது பாவிக்கப்படவில்லை, இதன் மறுசீரமைக்கப்பட்ட குறியீடே பாவிக்கப்பட்டது.

large.1986maaveerarsymbol.jpg.4fdadb7b76

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பழைய மாவீரர் குறியீடு

 

"மாவீரரான செல்வங்களே!
மனிதம் உள்ளவரையில் நின்று வாழ்வீர், தெய்வங்களே!"

இது இரண்டாம் ஈழப்போர்க் காலம் தொட்டு பாவிக்கப்பட்டது. பின்னர், இது அலுவல்சார் வகையில் கைவிடப்பட்டது. எனினும் ஆங்காங்கே இறுதிவரை பாவிக்கப்பட்டது.

123497641_398704084494398_6523150833415856171_o.jpg

   வரைந்தவர் அரசரட்ணம், ~1990

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் பொதுத் திருவுருவப்படம்

 

 

"தேசத்தையும் மாந்தரையும்
கண்மணி போல் காத்து வந்தார்
தங்கள் தேகம் பலியாக்கியே!"

 

 

இது தான் பின்னாளில் புலிகளால் பாவிக்கப்பட்ட அலுவல்சார் மாவீரர் குறியீடு ஆகும்.

இதைத்தான் அனைத்து மாவீரர்களின் படிமங்களும் வைக்க இயலாத இடத்தில் பொதுவாக சில மாவீரர் படங்களோடு வைத்து வீரவணக்கம் செலுத்துவர். இதனோடு "முதல் மாவீரர்களின் படங்கள்"ஓடு கூடியவரையான மாவீரர்களின் திருவுருவப்படங்களும் வைக்கப்பட்டிருக்கும். 

 

 

மாவீரர் இலச்சினை.jpg

 

 

 

 

இதன் சிலை விருத்து (version):

இது மட்டு. தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்தது. முதன்மைச் சுடர் பீடத்திலிருந்து பார்க்கின் - இரு ஒலிமுகங்களிற்கும் நடுவில், முதன்மைச் சுடர்ப் பீடத்திற்கு அருகில், (45 பாகை கோணத்தில்)/ (V வடிவிலெனில் அதன் கவட்டில்) அமைக்கப்பட்டிருந்தது.

தமிழீழ மாவீரர் துயிலுமில்லம் - Tamil Eelam Maaveerar Thuyilumillam (18).jpg

main-qimg-173b832fef090083092491f42ba63616.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

உறுதியின் உறைவிடம் 

 

 

"தியாக மறவர் கூட்டமிங்கு
தீரமாகப் போர் புரிந்தார்
தீந்தமிழ்த்தாய் நலம் பேணவே!"

 

 

உறுதியின் உறைவிடம் என்ற பெயரினைக் கொண்ட இது மாவீரர் வீரவணக்கச் சின்னமாகும்.

 
 

மாவீரர் வீரவணக்க இலச்சினை.jpg

 

 

 

இதன் சிலை விருத்து:

 

 

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த சின்னம்

kj.jpg

ufow.png

 

 

 

 

ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்த சின்னம்

Kanagapuram Martyr's graveyard in Kilinochchi767.jpg

3-2.jpg

2-2.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

  முதல் மாவீரர்
லெப். சங்கர் அவர்களின் நினைவாய் உதயபீடம் படைமுகாம் துயிலுமில்லத்தில் எழுப்பப்பட்ட கல்லறை

 

large_Lt.Shankarstomb.jpg.be609cd08dfce2bec202b1867578139c.jpg

அன்னாரின் கல்லறையை பிற மாவீரர்களின் கல்லறைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இதை முதன்மைக் கல்லறை போன்று கட்டி அதன் மேல் ஓர் வளைவையும் நிரந்தரமாக கட்டியுள்ளனர். அதன் மூலம் இதை முதன்மைக் கல்லறை போன்று தோற்றப்படுத்தியுள்ளனர்.

  

On 11/7/2021 at 15:36, நன்னிச் சோழன் said:

உதயபீடம்

 

13680727_993369757462884_450471314383292983_n.jpg

 

13716226_993369707462889_124436516540602009_n.jpg

'இதுதான் லெப் சங்கர் -ன்ர கல்லறை'

 

z3a3.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு இடித்தழிக்கப்பட்ட துயிலுமில்லங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட எச்சங்கள் இவ்வாறு கண்ணாடிப் பெட்டியில் இடப்பட்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் வைக்கப்பட்டிருக்கும்.  ஏனைய மாவட்டங்கள் பற்றி நானறியேன்!

 

"குழிகளிலிருந்து நாங்கள் கூவிடும் குரல் மொழி காதில் விழவில்லையா - எங்கள்

கல்லறை யாவுமே தீக்கிரையானதை கேட்டதும் நீங்கள் அழவில்லையா?

நாளும் பொழுதும் துடிக்கிறோம் - நாங்கள்

தனியே இருந்து தவிக்கிறோம்"

 

 

66.jpg

 

383260_131032053671510_1623085490_n.jpg

 

fu.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முதன்மைச் சுடர்ப் பீடம்

இங்குதான் பொதுச்சுடர் ஏற்றப்படும்

 

 

"ஒளி தீபம்தான் தேசம் போலத் தோணுதே!
தனித் தேசம் காணப் போரிடு என்றே கூறுதே!"

 

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (23).jpg

'முதன்மைச் சுடர் கொளுந்துவிட்டு எரிவதைக் காண்க'

 

 

maaveerar thuyilumillam (7).jpg

FLW21.png

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தின் முதன்மைச் சுடர்ப் பீடம்

 

 

iy.png

'???'

 

 

 

கிளி. கனகபுரத்தில் பொதுச்சுடர் ஏற்றும் முதன்மைச் சுடர்ப் பீடம்:-

main-qimg-35ad24c2575465a524d7c58df35767f7.png

maaveerar thuyilumillam (2).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஈகைச்சுடர்கள்


மக்கள் ஏற்றும் சுடரின் பெயர் ஈகைச்சுடர் என்பதாகும்

 

 

 

"கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம் - உங்கள்
கனவுதனை நினைவாக்கித் தொடர்கிறோம்"

 

 

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

5.jpg

 

1.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் பெற்றார் அணியிசை வகுப்பு
 

 

"மாவீரர் பெற்றோரே! 
மனம் சோர வேண்டாமே!
தானாக விடிந்திடும் ஈழம்!"

 

மாவீரர் துயிலுமில்லத்தினுள் நுழையும் போது மாவீரர் பெற்றார் அணியிசை வகுப்புடன் அழைத்து வரப்படும் காட்சி. இதுவொரு தமிழீழ பண்பாட்டுச் சடங்காகும்.

இவர்களை வீதியில் மாவீரர் துயிலுமில்லம் தொடங்கும் குறிப்பிட்ட இடத்திலிருந்து மாவீரர் துயிலுமில்லத்தின் முற்றம் வரை அணியிசைக் கலைஞர்கள் அழைத்து வருவர். அணியிசைக் கலைஞர்கள் முன் வர அவர்கட்குப் பின்னார் ஒரு கிடைவரிசையில் போராளிகள் (பெரும்பாலும்) அல்லது மாணாக்கர் கைகளைக் கோர்த்தபடி நடந்து வருவர். அவர்கட்குப் பின்னால் மாவீரர் பெற்றார் வருவர். இவ்வாறு இவர்கள் நுழையும் போது இரு மருங்கிலும் பொதுமக்கள் நின்றிருப்பர். இவ் அணியிசைக் கலைஞர்களாக, நானறிந்த வரை, பாடசாலை மாணவர்களே கடமையாற்றினர்.

 

பல்வேறு மாவீரர் துயிலுமில்லங்களை நோக்கிச் செல்லும் அணியிசை வகுப்புகள்:
 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (4).jpg

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (8).jpg

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (37).jpg

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (3).jpg

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (5).jpg

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (15).jpg

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (19).jpg

 

அணியிசை வகுப்பிற்குப் பின்னால் செல்லும் மாவீரர் பெற்றார்/உறவினர் (பெற்றார் வரமுடியா இடத்தில்):

நவம்பர் 27 என்றாலே மழை தான்.
 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (36).jpg

 

இரு மருங்கிலும் நின்று இவர்களைக் காணும் பொதுமக்கள்:

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (38).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் முழுத் திரைப்பிடிப்புப் படிமம்

 

 

2008 இறுதியில் மாவீரர் துயிலுமில்லங்கள் "விடுதலை வயல்கள்" என்றும் சுட்டப்பட்டன, போரிலக்கியப்பாடலூடாக. படம் எடுக்கப்படும் போது கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 


"பெற்றவரை மறந்து,
ஒவ்வொரு பொழுதிலும் எம்மை நினைத்து,
சாவினில் வாழ்வளித்து,
சாகும் போதிலும் எம்மை நினைத்து,

வேரோடு பகை வீழ்த்த வீச்சோடு களமாடி வேதனை தீர்த்தவரே!
மண்ணுக்குள் விதையாகி மடிப்பூக்கள் எனவாகி விண்ணுக்குள் சென்றவரே!
கல்லறை மீது துயில்பவரே!"

 

 

  • முழுப் படிமம்:

main-qimg-36560bb4c9da07b630bd1cb7842b84bc.png

 

  • ஒலிமுகமும் சூழலும்:-

main-qimg-27afa0450a7d55f1e2432baae8162fb3.png

 

  • முதன்மைச் சுடர்ப் பீடமும் சூழலும்:

main-qimg-deb00337fc98b1fd9c01364d75eb4b6a.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நினைவுச்சுடர்

 

வேறொரு மா.து. கல்லறை அமைக்கப்பட்டு அதற்கான நினைவுக்கல் வேறொரு மா.து. நாட்டப்பட்டு இரண்டிற்கும் உறவினர்களால் செல்லமுடியாது இருப்பின், பல்வேறு காரணங்களால், "நினைவுச்சுடர்" என்ற ஒன்று உறவினர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் அமைத்துக் கொடுக்கப்படும். உரியவர்கள் ஒவ்வொரு தேசிய நாளிலும் வந்து அங்கு விளக்கெரித்துவிட்டுச் செல்வர்.

எனது குடும்பத்தினருக்கான கல்லறை தென்மராட்சியில் இருந்ததால் நாங்கள் கிளிநொச்சி கனகபுரத்தில் இருந்த நினைவுச்சுடரிற்கு ஒவ்வொரு ஆண்டும் சென்று விளக்கெரிப்போம். அது ஒரு தீப்பந்தம் வடிவில் இருந்தது, கீழுள்ளது போன்று. 

இதற்கும் சில பேரால் செல்லமுடியாது இருக்கும். அவ்வாறு உரியவர்கள் வராமல் இருப்பவைக்கு போராளிகள் ஆளிட்டு விளக்கேற்றுவர்.

ஒவ்வொரு தடவையும் மாவீரர் நாளன்று து. செல்லும் போது அம்மா, கூடுதலான பூக்களும் சாம்பிராணிக் குச்சியும் கொண்டு வருவார். எமது பயன்பாட்டிற்குப் போக எஞ்சியவையை ஓடியோடி ஒவ்வொரு நினைவுதீபங்களின் அடியிலும் குத்தி எரித்துவிட்டு பூக்களையும் சாற்றிவிட்டு எங்களின் நினைவுச்சுடரிற்குத் திரும்புவேன். இன்றும் இது பசுமையான நினைவாக நெஞ்சில் நிலைத்துள்ளது.

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (31).jpg

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (20).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடலிலே வீரச்சாவடைந்தோரிற்காக நினைவு வணக்கம் செய்து கடலினுள் வைத்து பொதுச்சுடர் ஏற்றி கடலினுள் விடப்படும் 

"நினைவுச்சுடர்"

 

 

"காற்றோடு காற்றாகக் கரைந்து போனவர்கள்,
கடலோடு கடலாகக் கரைந்து போனவர்கள்,
அன்னையைவிட அதிகம் அணைத்தது, உன்னைத் தானே!
கடலலையே! கடலையே!
உரிமையோடு உன்னைக் கேட்கின்றோம் - நீ 
கரையைத் தொடும் போது எம் மக்களுக்கு காதோடு சொல்லிவிடு,
'விடுதலையை வென்றெடுங்கள், விடுதலையை வென்றெடுங்கள். அப்பொழுது அவர்கள் வருவார்கள்.' "

--> மேஜர் பாரதி, தவிபு மகளிர் பிரிவின் அரசியல்துறை துணை பொறுப்பாளர்

இப்பண்பாடானது லெப் கேணல் மறவன் மாஸ்டர் அவர்களின் ஆலோசனையின் பேரில் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை அவர்களால் 2000 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு தமிழீழம் சிறீலங்காப் படைகளால் வன்வளைக்கப்படும்வரை தொடரப்பட்டது.

main-qimg-9eae0ca3107c45c0af261a6fdd69ef92.jpg

 

(Oct 31, 2003 வரை வீரச்சாவடைந்த மொத்த கடற்புலி மாவீரர்கள் 1066)

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

27/1//2005 அன்று வீட்டிற்கு முன்னுள்ள தெருவின் ஒரு மருங்கில் எழுச்சிக்கொடியால் சோடினை செய்து வாழைத்தண்டில் சிரட்டை வைத்து ஈகைச்சுடரேற்ற காத்திருக்கும் ஓர் தமிழீழக் குடும்பம்

துயிலுமில்லத்திற்கு வரேலாத ஆக்கள் இவ்வாறு செய்வதுண்டு.

large.puthukudiyiruppu27-005.jpg.5fac69e

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இச்சிலையின் பெயர் அறிந்தோர் தெரிவித்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை துயிலுமில்லங்களினுள் கண்டிருக்கிறேன்.

 

 

"வாழ்கின்ற காலம்வரை
வாழ்த்துங்கள் வீரர்களை
பிறர்கென உயிர்க்கொடை  
கொடுப்பது தெய்வீகம்!"

 

 

 

2002<

வன்னியில்

 

15056339_336047216752404_7144085985548824788_n.jpg

 

s5467.jpg

 

nkn.jpg

 

 

saf.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் துயிலுமில்லங்களின் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் ஓர் பலகை

 

10407341_1783654078526376_3072659698786073242_n.jpg

 

 

11-1.jpg

 

 

maaveerar.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வித்துடல் விதைப்பு

 

 

மேலுள்ள ஆவணத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதி:

 

"பின்னர், வித்தாகிய மாவீரரின் வித்துடல் கொண்ட சந்தனப் பேழையானது புனித விதைகுழியின் மேல் இரு தண்டுகள் போடப்பட்டு அதன் மேல் வைக்கப்படும். அடுத்து சந்தனப் பேழையின் மேல் போர்த்தப்பட்டுள்ள தமிழீழத் தேசியக் கொடி அதிலிருந்து எடுக்கப்படும்.

"பிறகு கயிறுகள் மூலம் புனித விதைகுழியினுள் இறக்கப்படும், அவரை நன்கறிந்த போராளிகளால். துயிலுமில்லத்தில் வித்துடல்கள் விதைக்கப்படும் போது வித்துடலின் கால் துயிலுமில்ல ஒலிமுகத்தை நோக்கியதாக இருக்கும்படியாகவே விதைப்பர்.

AP070711012271.jpg

லெப். கேணல் சங்கீதன் என்ற மாவீரரதும் ஆறுமுகம் ஆனந்தகுமார் என்ற இயற்பெயர் கொண்ட மாவீரரதும் வித்துடல்கள் கொண்ட சந்தனப்பேழைகளில் ஒன்று புனித விதைகுழிக்கு மேல் வைக்கப்படுகிறது. சம நேரத்தில் ஒரு போராளி சந்தனப் பேழையின் மேல் போர்த்தியுள்ள கொடியை எடுக்கிறார். படிமப்புரவு: Associated Press

 

f7.jpg

லெப். கேணல் தவாவுடன் வீரச்சாவடைந்த மேஜர் புகழ்மாறனின் வித்துடல் புனித விதைகுழியினுள் கயிறுகள் மூலம் இறக்கப்பட்டு விதைக்கப்படுகிறது. படிமப்புரவு: த.வி.பு.

 

few3.png

பெரும்பாலான இடங்களில் புனித விதைகுழியின் இருபக்கமும் இவ்வாறாக புலிவீரர் அகவணக்கமாக நிற்பர். படிமப்புரவு: த.வி.பு.

 

cytyt.jpg

போராளிகள் இவ்வாறுதான் வரிசையாக வந்து புனித விதைகுழிக்குள் மண்தூவிச் செல்வர். படிமப்புரவு: த.வி.பு.

 

4as4.jpg

பொதுமக்கள் இவ்வாறுதான் வரிசையாக வந்து புனித விதைகுழிக்குள் மண்தூவிச் செல்வர். அவர்களது அரத்த உறவினர் யாரேனும் மண்தூவ வரும் போது அவர்களை பெண்/ ஆண் போராளிகள் தாங்கிப்பிடித்திருப்பர். ஏனெனில், அவர்கள் பிரிதுயரால் மயங்கி உள்ளே விழுந்துவிடாமல் இருப்பதற்கு. படிமப்புரவு: த.வி.பு.

"விதைக்கப்பட்ட பின்னர் பொதுமக்களும் போராளிகளும் இறுதியாக வந்து இருகைகளாலும் மண்ணை அள்ளி விதைகுழியினுள் தூவிவிட்டுச் செல்வர். சில வேளைகளில் வெள்ளை மணல் கிடைக்குமாயின் வெள்ளை மணலே தூவப்படுவதுண்டு.

"ஆட்கள் மண் போட்டுச் சென்றபின் எஞ்சியிருக்கும் மண்ணை இன்னும் நிரம்பிடாத குழியினுள் மண்வெட்டியின் துணையுடன் இட்டு நிரப்புவர்.

"மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெறும் இவ்வித்துடல் விதைப்பில் பால் மற்றும் வயது வேறுபாடின்றி அனைவரும் (ஆண், பெண், சிறுவர்) கலந்துகொள்வர், ஒரு பிடி மண்ணும் தூவிச் செல்வர். "

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் துயிலுமில்ல ஒலிமுகங்கள்

 

 

"மாவீரர் வாழ்ந்த வாழ்க்கை
அர்த்தமுள்ள வாழ்க்கையடா - அவர்

வாழும் சரித்திரத்தில் 
மரணம் கூட மடிந்ததடா"

 

 

இதன் முதன்மை வாயிலிற்குள்ளால்தான் வித்துடல்கள் காவிச் செல்லப்படும்.

 

1991 ஆம் ஆண்டு புதுவை இரத்தினதுரை அவர்களால் தான் "மாவீரர் துயிலும் இல்லம்" என்ற பிடாரச் சொல் முன்மொழியப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதல் துயிலும் இல்லம் "கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்'' ஆகும்.

 

wer32.jpg

 

large.81688645.jpg.1aac8ddcf9182027a7e57e3399685d43.jpg

 

hb.jpg

 

Scannen0004-Kopie.jpg

 

vanni.jpg

 

bvu8.jpg

'?????? கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கிறது'

 

Maaveerar-Thuyilum-Illam-3.jpg

 

5.jpg

10.jpg

'கனகபுரம் ஒலிமுகம் (பழையது)'

 

10710659_1633355693558352_1924458378556678989_n.jpg

'கனகபுரம் ஒலிமுகம் (புதியது)'

 

unnamed (7).jpg

'கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கிறது'

noi.jpg

'மேற்கண்ட கட்டுமான வேலைகள் முடித்த பின் புத்துயிர் பெற்று எழுந்த கோப்பாய் துயிலுமில்லத்தின் ஒலிமுகம் '

 

m-thugi-.jpg

'ஈச்சங்குளம்'

 

m20.jpg

'முள்ளியவளை'

 

d65.jpg

'தலைநகர்'

 

k8.jpg

 

81796464.jpg

'தரவை'

 

311021_131032807004768_660096942_n.jpg

'உடும்பன்குளம்'

 

ste 3.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் முடிந்த பின்னர்

 

துயிலுமில்ல மாவீரர் நாள் நிகழ்வுகள் முடிந்த பின்னர் துயிலுமில்லத்தினுள்ளிருந்து பொதுமக்கள் வெளியேறும் காட்சி. முதன்மை வாசல் உட்பட மூன்று வாசல்களுக்குள்ளாலும் மக்கள் வெளியேறுகின்றனர். 

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (33).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

90களின் தொடக்கத்தில் மணலாறு முகாம் ஒன்றினுள் மாவீரர் இருந்த வீரவணக்கச் சின்னம்

 

manalaaru.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இதுவரை மருத்துவப் பிரிவில் செயற்பட்டு வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு

வீரவணக்கம்

 

 

14/06/2003 அன்று மருத்துவப் பிரிவு மாவீரர்களின் வீரவணக்கத்திற்கென வெளியிடப்பட்ட படிமம் .

 

In the memory of the Tigers' Medical Unit soldiers.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

துயிலுமில்லத்தினுள்ளிருந்த ஏதோ ஒன்று

 

பார்ப்பதற்கு நன்கு சோடிக்கப்பட்டதாக பூக்கூடை போன்று தோற்றமளிக்கிறது. என்னவென்று எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஒருவேளை பொதுச்சுடர் பீடத்திலுள்ள அந்த பொதுச்சுடர் ஏற்றும் கிண்ணத்திற்கு மேலே வைக்கப்பட்டுள்ள சோடிக்கப்பட்ட தட்டாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

சரியாக என்னவென்று அறிந்தவர்கள் வரலாற்றைக் கடத்த தெரியப்படுத்துங்கள்.  

(நீங்கள் ஆரும் சொல்லித் தரமாட்டியள் எண்டு தெரியும்... பரவாயில்லை, நானே நாடியறிந்துகொள்கிறேன்😏😤.)

 

Tamil Eelam Maaveerar Naal - தமிழீழ மாவீரர் நாள் - November 27 (32).jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.