Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவை வசப்படுத்தும் கொழும்பின் உபாயங்கள் – அகிலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை வசப்படுத்தும் கொழும்பின் உபாயங்கள் – அகிலன்

July 21, 2021

 

அமெரிக்காவை வசப்படுத்தும் கொழும்பின் உபாயங்கள்
 

அமெரிக்காவை வசப்படுத்தும் கொழும்பின் உபாயங்கள்

பசில்  ராஜபக்ஷ நிதி, பொருளாதார அமைச்சராகப் பதவி யேற்றியிருக்கும் நிலையில், திருமலைத் துறை முகத்தையும், அதனையடுத்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சில பகுதிகளையும் குத்தகை அடிப்படையில் 5 வருடங்களுக்கு அமெரிக்காவுக்குக் கொடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டிருப்பதாக செய்தி ஒன்று வெளி வந்திருக்கின்றது. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற சிங்களத் தேசியவாத அமைப் பினர் தான் இந்தச் செய்தியை வெளியிட்டு, கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கின்றனர்.

அமெரிக்காவை வசப்படுத்தும் கொழும்பின் உபாயங்கள்

உத்தியோக பூர்வமாக இது குறித்த செய்திகள் வெளிவரவில்லை. தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தகவலின் அடிப்படையில் தான் இப்போது கருத்துக்கள் வெளியிடப் படுகின்றன.

திருமலைத் துறை முகத்தின் மீது அமெரிக்காவுக்குள்ள அக்கறை இரகசியமானதல்ல. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் திருமலைத் துறை முகத்தை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில், 1970 களின் பிற்பகுதியில் இருந்தே அமெரிக்கா ஆர்வமாக இருந்திருக்கின் றது. அமெரிக்கா – சோவியத் யூனியன் பனிப்போர்உச்சத்திலிருந்த அந்தக் காலத் தில், ஆசியப் பிராந்தியத்தில் தமது தளங்களை அமைப்பதில் அமெரிக்கா அக்கறை காட்டி வந்தது என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

அமெரிக்காவை வசப்படுத்தும் கொழும்பின் உபாயங்கள்

1977 இல் அதிகாரத்துக்கு வந்த ஜெயவர்த்தன அமெரிக்கா சார்பான ஒருவராகவே இருந் தமை அதற்கு வாய்ப்பாக இருந்தது. திரும லையை அவர் அமெரிக்காவுக்குக் கொடு க்கப் போகின்றார் என்ற கருத்துக்கள் பரவலாக வெளிவந்த அதே வேளையில், புத்தளம், இரணவில பகுதியில் வோய்ஸ் ஒப் அமெரிக் காவுக்கு ஜெயவர்த்தன இடமளித்திருந்தார். இவை அப்போது இந்தியாவுக்குத் தான் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. 1987இல் கைச்சாத்திடப் பட்ட இலங்கை – இந்திய உடன்படிக்கையில் இதன் பிரதிப லிப்பையும் அவதானிக்கலாம். அதாவது, வெளிநாட்டுப் படைகள் தளம் அமைப்ப தற்கு இலங்கை இடமளிக்கக் கூடாது என உடன்படிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அப்போது இருந்த பனிப்போர் நிலை இப்போது மாறிவிட்டது. அமெரிக்காவுக்கு எதிரான  சோவியத் யூனியன் தலைமையிலான முகாமில் இந்தியா அப்போதிருந்தது. அந்த முகாம் இப்போது இல்லை. உலக ஒழுங்கு மாற்றமடைந்திருக்கும் பின்னணி யில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்திருக்கின்றது. சீனாவை எதிர் கொள்வது என்ற நிலையில்தான் இந்தியா இன்று அமெரிக்காவுடன் இணைந்து செயற் படுகின்றது. இலங்கையில் தன்னால் நேரடியாகச் செய்ய முடியாத சிலவற்றை அமெரிக்காவின் மூலமாகச் செயற் படுத்துவதற்கு இந்தியா முற்பட்டிருப்பதும் தெரிகின்றது.

இலங்கையில் முகாம் அமைக்கும் அமெரிக்காவின் முயற்சிகளை 1980 களில் கடுமையாக எதிர்த்த இந்தியா, இப்போது அவ்வாறு எதிர்க்கும் நிலையில் இல்லை. அதிகரித்துள்ள சீனாவின் ஆதிக்கத்தை எதிர் கொள்வதற்கு இதனை ஏற்றுக் கொள்வதற்கு இந்தியா தயாராகவுள்ளது. திருமலையில் உள்ள பாரிய எண்ணைக் குதங்கள் தற்போது இந்தியாவிடம் தான் உள்ளது. இந்த நிலையில், சீனாவின் ஆதிக்கத்தை திருமலையில் முழுமையாகத் தவிர்த்துக் கொள்வதற்கு அமெரிக்காவின் பிரசன்னத்தை இந்தியா ஏற்றுக் கொள்ளலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவுடனான இலங்கையின் நெருக்கமான உறவுகள் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி யிருந்தமை வெளிப்படை. குறிப்பாக, அமெரிக்கக் காங்கிரஸில் அண்மையில் கொண்டு வரப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் பின்னணியும் இதுதான். பொறுப்புக்கூறல் உட்பட பல விடயங்களை உள்ளடக்கியதாக இந்தப் பிரேரணை அமைந்திருந்த போதிலும், தமது பூகோள அரசியல் இலக்குகளை அடைவதற்கான உபாயமாக தமிழர்களுடைய பிரச்சினையை அந்த நாடுகள் பயன்படுத்தி யிருக்கின்றன என்பதே உண்மை. இந்த வகையில், திருமலையை நீண்ட கால குத்தகையில் அமெரிக்காவுக்குக் கொடுப்பதன் மூலம், மேற்குலகின் அழுத்தங்களை எதிர் காலத்தில் தவிர்த்துக் கொள்ள முடியும் என்பது இலங்கையின் உபாயமாக இருந்திருக்கலாம்.

மோசமடைந்துள்ள இலங்கையின் மேற்கு நாடுகளுடனான உறவுகளைச் சீரமைக்கக் கூடிய ஒன்றாகவே பசில் ராஜபக்ஷவின் அரசியல் மீள் வருகை எதிர் பார்க்கப்பட்டது. அமெரிக்கப் பிரஜாவுரிமையைப் பெற்றிருக்கும் பசில் ராஜபக்ஷ, மேற்குலகுடனான உறவுகளைச் சீரமைக்கக் கூடிய ஒருவராக மட்டுமன்றி, மோசமடைந்திருக்கும் நிதி, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய ஒருவராகவும் பார்க்கப் படுகின்றார். அமெரிக்காவில் ஒரு மாத காலம் தங்கியிருந்த அவர், கொழும்பு திரும்பி அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவியேற்றிரு க்கும் நிலையில் தான் திருமலையை அமெரிக்காவுக்குக் கொடுப்பது குறித்த தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.

அமெரிக்காவை வசப்படுத்தும் கொழும்பின் உபாயங்கள்
 

அதிகாரத்திலுள்ள ராஜபக்ஷக்களைப் பொறுத்த வரையில் கோட்டாபயவும், மகிந்தவும் ஏதோ ஒரு வகையில் போர்க் குற்றங்களுடன் சம்பந்தப் பட்டவர்கள். அதனைவிட, சீனாவுடன் நெருக்க மானவர்கள் என அடையாளம் காணப் பட்டவர்கள். ஆனால், பசில் ராஜபக்ஷ அவ்வாறானவர் அல்ல. மேற்குலகுடன் மட்டுமன்றி, இந்தியாவுடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பவர். அந்த வகையில், இந்தியாவுடனும், சீனாவுடனுமான உறவுகளைச் சீராக்கக் கூடிய ஒருவராகவே பசில் ராஜபக்ஷ அடையாளம் காணப் படுகின்றார்.

திருகோணமலைத் துறைமுகம்

திருகோணமலைத் துறைமுகத்திற்கு அருகில் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தை முன்னெடுக்கவே அமெரிக்க நிறுவனம் நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் திட்டமிட்டு, அமெரிக்காவின்  மிலேனிய உடன்படிக்கை பொதுஜன பெரமுன அரசாங்கத்தால் நிராகரிக்கப் பட்ட சூழலிலேயே இலங்கையுடனான அமெரிக்க உறவும் பெரும் நெருக்கடிக்குள் நகர்ந்தது. அதனையடுத்தே, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக அமெரிக்காவின் நகர்வுகள் அமைந்திருந்தன. இந்நிலையில் தான், திருகோணமலைத் துறைமுக உடன்படிக்கை தற்போது எட்டப்பட்டுள்ளது. இது மில்லேனிய உடன்டிப டிக்கைக்கு மாற்றானதாக அமையலாம் என்ற கருத்து அரசியல் ஆய்வாளர் ஒருவரால் முன்வைக்க ப்பட்டுள்ளது.

திருகோணமலைத் துறைமுக உடன்படிக்கை எனத் தகவல்களை வெளிப் படுத்தியுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அறிக்கையில், “இலங்கை அரசாங்கம் செய்து கொள்ள உத்தேசித்துள்ள உடன் படிக்கையானது ரணில் – மைத்திரி தலைமையிலான அரசாங்கம் செய்து கொள்ளவிருந்த எம்.சி.சி உடன்படிக்கையைவிட பயங்கரமானது” எனக் குறிப்பிட்டு ள்ளமையும் கவனிக்கத் தக்கதது. இது அமெரிக்காவுடான உடன்படிக்கையாக இருந்தாலும், இந்தியா, ஜப்பான் ஆகியனவும் இதில் சம்பந்தப்ப ட்டிருப்பதாக தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை வசப்படுத்தும் கொழும்பின் உபாயங்கள்
 

திருகோணமலைத் துறை முகத்தை 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஐந்து வருட குத்தகை என்கிற அடிப்படையில் வழங்க இலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டிருப்பதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சீனாவின் ஒரே சுற்று ஒரே பாதை முன் முயற்சிக்கு எதிராக அமெரிக் காவால் கட்டமைக்கப்பட்ட இந்தோ  பசுபிக் தந்திரோ பாயத்தின் பாதுகாப்பை உறுதி ப்படுத்தும் உத்திகளில் ஒன்றாகவே திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் இருந்து குத்தகைக்கு எடுக்கவுள்ள தாகவும் கூறப்படு கின்றது. இந்த தக வலை தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவன மொன்றினால் 3000 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுப் பெறுமதியாக இந்த உடன்படிக்கை செய்யப் படவுள்ளது என்று ஜூலை 12ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கை ஊடாக தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்திருந்தார். திருகோணமலைத் துறை முகத்திற்கு அருகில் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை முன்னெடுக்கவே அமெரிக்க நிறுவனம் முன்வந்திருப் பதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. வெளியாகியுள்ள இந்தச் செய்தி சரியானதாக இருந்தால், அமெரிக்க இலங்கை இடையே 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சீராக்குவதற்காக இலங்கை அரசு முன்னெடுத்துள்ள முக்கிய நகர்வாக இது இருக்கும். இலங்கைக்கும் மேற்கு நாடு களுக்கும் இடையிலான உறவுகளை சீரமைக்க இது உதவும்.

இதன்மூலம் இரண்டு விதமான நலன்களை இலங்கை எதிர் பார்க்கலாம். ஒன்று – மேற்கு நாடுகளின் அழுத்தங்கள் பெருமளவுக்கு குறையும். இரண்டாவது – பொருளா தாரப் பிரச்சினைகள் அனைத்துக்கும் சீனாவைத்தான் இலங்கை நம்பி யிருக்கின்றது. மேற்கு நாடுகளின் உறவுகளைச் சீரமைப்பதன் மூலமாக தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வைக் காண முடியும்.  அதே வேளையில், இது ஐந்து வருட காலத்துக்கான உடன்படிக்கையாக இருப்பதால், அதன் பின்னர் அமெரிக்காவை கழ ட்டி விட்டு சீனாவுடன் தொடர்ந்து பயணிக்க முடியும்!

https://www.ilakku.org/colombos-tactics-to-subdue-the-united-states/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.