Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணுக்கு தெரியாத புதைகுழிக்குள் விழும் இலங்கை: சுதந்திரத்தின் பின் டொலரின் இருப்பில் மிகப்பெரிய வீழ்ச்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கை வரலாற்றில் டொலரின் இருப்பு மிகக்குறைந்த மட்டத்தில் வீழ்ச்சியடைகிறது. இலங்கை கண்ணுக்கு தெரியாத படுகுழியில் வீழ்ந்து கொண்டிருக்கிறது என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இன்று (25) கொழும்பில் உண்மையான தேசபக்தர்கள் அமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை வரலாற்றில் இருண்ட யுகமாகக் கருதப்படும் கறுப்பு ஜூலையின் 38 வது ஆண்டு நினைவை முன்னிட்டு இந்த ஊடக மாநாட்டை நடத்த முடிவு செய்தோம்.

கருப்பு ஜூலை ஒரு நாடாக நாம் எதிர்கொள்ளும் பேரழிவின் மற்றொரு மைல்கல்லாக விவரிக்கப்படலாம்.

1948 இல் நாங்கள் சுதந்திரம் பெற்றபோது, ஆசியாவில் மிகவும் வளர்ந்த நாடாக நாங்கள் கருதப்பட்டோம். நவீன சிங்கப்பூரின் நிறுவனர் லீ குவான் யூ, கொமன்வெல்த் நாட்டில் இலங்கையை ஒரு மொடல் நாடு என்று வர்ணித்தார்.

ஆனால், இன்று உலகில் பல நாடுகள்- எங்களைவிட ஏழைகளாகக் கருதப்பட்ட நாடுகள் உட்பட- பிட்கொயின் – பிளாக் செயின்- என்எஃப்டி- செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் சகாப்தத்தை நோக்கி நகர்கையில்,  நாங்கள் கீழ் நோக்கி விழுந்து விட்டோம்.

இது உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட தோல்வியுற்ற அரசாக மாறி வருகிறது.

அடுத்த வாரம் ஜூலை 27 க்கு முன்பு, 2011 இல் எடுக்கப்பட்ட கடனுக்காக ஒரு பில்லியன் டொலர்களை நாங்கள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

கூடுதலாக, இந்த ஆண்டு டிசம்பரில் சுமார் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் 18 இல் நான் நிதி அமைச்சை கையளிக்கும் போது அந்நிய செலாவணி இருப்பு 7.6 பில்லியன் டொலராக இருந்தது. 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்திய பின்னர், 27 ஆம் திகதிக்குப் பின்னர் 1.6 பில்லியன் டொலராக குறையும். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இதுதான் வரலாற்றில் மிகக் குறைந்த மட்டமாகும்.

கடந்த ஒரு வருடத்தில் தேசிய வருமானம் சுமார் 600 பில்லியன் அமெரிக்க டொலராக குறைந்து வருகிறது, கடந்த ஏழு தசாப்தங்களில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வருவாய் 2020 இல் பதிவாகியுள்ளது.

1988 க்குப் பிறகு மிகப்பெரிய பட்ஜெட் பற்றாக்குறை 2020 இல் பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு, பட்ஜெட் பற்றாக்குறையை நிரப்ப மத்திய வங்கி வரலாற்றில் ஒரே ஆண்டில் அச்சிடப்பட்ட மிகப்பெரிய தொகையை அச்சிட வேண்டியிருந்தது.

கூடுதலாக, 2020 ஆம் ஆண்டில் மட்டும் அரசாங்கம் எடுத்த புதிய கடன்களின் அளவு மேலும் 2 டிரில்லியன் ரூபாய் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டில் உரங்களின் பற்றாக்குறை நிலவுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையும் உள்ளது. சுமார் 1.2 பில்லியன் டொலர் எரிபொருள் செலவில், எரிபொருள் பற்றாக்குறை மிக விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளது.

இவற்றின் மூலம் சாதாரண மக்களின் பசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எல்லோரும் இன்று ‘தோல்வி’ என்று கூறுகிறார்கள். ஆனால் இன்று உண்மையில் தோல்வியுற்றது ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அல்ல. அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மத, பெரும்பான்மை மற்றும் காலாவதியான சோசலிச சித்தாந்தங்களே.

சிங்கள அரசாங்கத்தை அமைப்பதாக வாக்குறுதியளித்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்றார்.

https://pagetamil.com/2021/07/25/கண்ணுக்கு-தெரியாத-புதைகு/

  • கருத்துக்கள உறவுகள்

38 வருடங்களுக்கு முன்பு… தமிழருக்கு எதிராக ஜூலை கலவரம் மூண்டு பல வர்த்தக நிறுவனங்கள் எரிக்கப் பட்ட போது…

அந்த நேரம் நிதி அமைச்சராக இருந்த…  என். எம். பெரேரா, அந்தக் கலவரத்தின் மூலம் இலங்கை 30 ஆண்டுகளுக்கு பின் தள்ளப் பட்டு விட்டது என்றார்.

அது எவ்வளவு உண்மை என்பதனை… சிங்களவர் இப்போது விளங்கியிருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.